Published on 08/01/2020 | Edited on 08/01/2020
ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து 180 பேருடன் புறப்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியதால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஏற்கனவே ஈரான்- அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. தொழில் நுட்ப காரணங்களால் விமானம் விபத்தில் சிக்கியதா? அல்லது தாக்கப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றன.