Skip to main content

அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பொதுமக்களின் ஐடியா!

Published on 19/06/2018 | Edited on 19/06/2018

வடகாடு வடக்குப்பட்டி அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பள்ளியில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. 

 

மாணவர்கள் குறைவாக உள்ள அரசு பள்ளிகளை மூடப்படும் என்ற நிலையில் உள்ளதால் கடந்த சில ஆண்டுகளாக அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க அந்தந்த கிராம பொதுமக்கள், பெற்றோர்கள், இளைஞர்கள் கிராமங்கள் தோறும் வீடு வீடாகச் சென்று வழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். மேலும் அந்தந்த பகுதி அரசு பள்ளிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொடுப்பதுடன் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள அரசுப் பள்ளிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ஆசிரியர்களை நியமித்துள்ளனர். மேலும் கொத்தமங்கலம் சிதம்பரவிடுதியில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேன் வசதி, இலவச சைக்கிள் போன்ற வசதிகளை செய்து கொடுத்து உற்சாகப்படுத்தினார்கள். இதே போல தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க இளைஞர்களின் பங்கு அதிகரித்துள்ளது.

 

Cycling for students to top up students to increase their involvement


 

அதே போல புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சி வடக்குப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் விழிப்புணர்வ ஏற்படுத்தி இருந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் மாணவியும் மருத்துவருமான ராஜேஸ்வரி கடந்த கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற புவனேஸ்வரன் உள்ளிட்ட மாணவர்களுக்கு பாராட்டு இலவச சைக்கிள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.  


விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் ரவிச்சந்திரன், கிராமக் கல்விக் குழுத் தலைவர் ராதிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கையை அதிகரிக்க இளைஞர்களும், பெற்றோர்களும் அதிகமான பரிசுகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதித்துள்ளதாக இளைஞர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.