Skip to main content

கலைஞருக்காக இணைய வானொலி: வியக்க வைக்கும் தகவல் களஞ்சியம்

Published on 21/01/2022 | Edited on 21/01/2022

 

 

வானொலி நேயர்களுக்காக 24 மணிநேரமும் ஒலிக்கிற எப்.எம். போன்று பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் உரைகள், அவர்கள் தொடர்பான அரசியல், இலக்கியம் என அனைத்து சாதனைகளையும் கொண்ட கலைஞர் எப்.எம். தற்போது 24 மணிநேரமும் தமிழர்களின் குரலாய் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. தென்காசி மாவட்டத்தின் சிவகிரி பகுதியைச் சேர்ந்த எம்.ஏ.எம்.ஃபில் பட்டதாரி டெக்னீசியனான மகேந்திரன் தனிமனிதனாகக் கலைஞர் எப்.எம்.ஐ உருவாக்கி, அதை அரிய தகவல் களஞ்சியமாக்கி அசத்தியிருக்கிறார்.

 

அடிப்படையில் தி.மு.க. வழி வந்த அடிமட்டக் குடும்பத்தைச் சார்ந்த மகேந்திரன், பெரியார், அண்ணா, கலைஞர் மீது ஈர்ப்பு கொண்டவர். எப்.எம். தொழிலில் டெக்னீசியனாகப் பணியாற்றிய மகேந்திரன் பின்னர் பல பிரபலங்களுக்கென்று தனியாக எப்.எம்.களை உருவாக்கிக் கொடுத்தவர். தன்னுடைய நீண்ட நாள் கனவான திராவிடத் தலைவர்களான கலைஞர் உள்ளிட்ட தமிழறிஞர்களுக்கென்று அனைத்துத் தொகுப்புகளையும் கொண்ட தனியொரு எப்.எம். உருவாக்கும் பணியை மேற்கொண்டார். ஒரு சில வருடங்களாக அவர்கள் பற்றிய அரும்பெரும் தகவல்களைத் திரட்டி எப்.எம். உருவாக்கியதை விரிவாகச் சொன்னவர், தற்போது அது அரும்பெரும் தகவல் களஞ்சியமாகியிருக்கிறது என்கிறார்.

 

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 50 ஆண்டுகளுக்கும் மேல் நிலைத்து நின்றவர். அரை நூற்றாண்டின் தலைப்புச் செய்தியானவர். தொடர்ந்து 12முறை எம்.எல்.ஏ.வாகி, ஐந்து முறை முதலமைச்சராகி சாதனை படைத்தவர். 150க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய இலக்கியச் சிற்பி. உடன் பிறப்பே என முரசொலியில் 7000 கடிதங்களுக்கும் மேலாக எழுதியவர். அதுமட்டுமின்றி இந்தியப் பிரதமர், மற்றும் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதில் ஆலோசனை வழங்கும் முக்கிய கட்டங்களிலும் கலைஞரின் பங்கு இருந்திருக்கிறது.

 

கலைஞர் எப்.எம்.டாட் காமில் 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும் ஒலிப்பேழையில் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்புகளும் அடங்கியுள்ளன. கலைஞர் பற்றிய பாடல்கள் குறிப்பாக அவர் பற்றி நாட்டுப்புற கிராமியப் பாடல்கள் ஒயிலாட்டமாய் ஒலிக்கின்றன.

 

தன் வாழ்நாளில் 21 நாடகங்களிலும் 69 திரைப்படங்களிலும் பணியாற்றிய படைப்பாளியான கலைஞரின் திரைக்கதை மற்றும் பட வசனங்களான ராஜகுமாரி, உலகப் புகழ் பெற்ற பராசக்தி முதற்கொண்டு பொன்னர் சங்கர் படம் வரையிலான வசனங்கள் இடம் பெற்ற படங்களின் தொகுப்பாகவும் ஒலிக்கின்றன. இது மட்டுமல்ல, தி.மு.க.வின் பிச்சாரப் பாடல்கள், கலைஞர் ஆற்றிய புகழ்பெற்றத் தொகுப்புகள், அண்ணா, பெரியார் ஆற்றிய புகழ் வாய்ந்த உரைகளின் தொகுப்புகளுடன் ஸ்டாலின் நிகழ்த்திய மதிப்பு வாய்ந்த உரைகளின் தொகுப்புகள் என்று ஒவ்வொன்றும் தவறாமல் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈஷா யோகா மையம் தொடர்பான விவகாரம்; வெளியான பகீர் தகவல்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Matter relating to Isha Yoga Centre; Released information

தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டியைச் சேர்ந்த விவசாயியான திருமலை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தன் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா தன்னார்வலராக கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் கடந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் இருந்து தொடர்பு கொண்டவர்கள் கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்களா என்று கேட்டதுடன் கடந்த 3 நாட்களாக கணேசன் ஈஷா யோகா மையத்திற்கு வரவில்லை என கூறினர்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி  ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா கோவை மாவட்டம் பாரந்துறை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்த பாரந்துறை காவல் நிலைய போலீசார் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி காணாமல் போன தனது சகோதரர் கணேசனை மீட்டுத் தர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

Matter relating to Isha Yoga Centre; Released information

இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள், எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு முன்பு இன்று (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜதிலக், “கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஈஷா மையத்தில் பணியாற்றியவர்களில் வெவ்வேறு தேதிகளில் தற்போது வரை 6 பேர் மாயமாகியுள்ளனர்” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும் இந்த வழக்கு ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர். 

Next Story

திருச்சிக்கு கலைஞர் நூலகம்; வலுக்கும் கோரிக்கை!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Demand for an kalaignar library in Trichy

திருச்சியில் உள்ள மாவட்ட மைய நூலகம் மத்திய மாவட்டங்களில் மிகப்பெரிய பொது வாசிப்பு வசதியாக இருக்கலாம். ஆனால் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இடமளிக்க போதுமான இடவசதி இல்லை. இந்த ஆர்வலர்கள் திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அமைக்கக் கோரி வளர்ந்து வரும் முழக்கத்தில் இணைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் 142 நூலகங்கள் உள்ளன, மேலும் மேற்கு பவுல்வர்டு சாலையில் அமைந்துள்ள மாவட்ட மைய நூலகம், வேலை தேடுபவர்களுக்குப் பார்க்கவும் தேர்வுக்குத் தயாராகவும் மிகப்பெரியது. சராசரியாக ஒவ்வொரு நாளும் சுமார் 800 இளைஞர்கள் நூலகத்திற்கு வருகை தருகின்றனர், ஆனால் அதன் நடைபாதைகளிலும் பார்க்கிங் இடங்களிலும் அமர்ந்து படிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 64 கிளைகள் மற்றும் 65 கிராம நூலகங்கள் உள்ளன, ஆனால் அவை மைய நூலகத்திற்கு நிகரான உட்கட்டமைப்பு இல்லை. மைய நூலகத்தின் இரண்டு தளங்களும் மொத்தம் 45,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டிருந்தாலும், பார்வையாளர்களின் உயரும் வருகையால் நூலகத்தில் அனைவரும் அமர்ந்து படிக்க முடியவில்லை.

நூலகத்தை தினசரி பயன்படுத்துபவர்களில் கிட்டத்தட்ட 50% பேர் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். பெண்கள் செய்தித்தாள் பிரிவு மற்றும் தரைத்தளத்தில் உள்ள நடைபாதைகளைப் பயன்படுத்துகின்றனர், ஆண்கள் முதல் தளத்தில் உள்ள குறிப்புப் பிரிவு மற்றும் அருகிலுள்ள நடைபாதைகளில் தயார் செய்கிறார்கள். TNPSC குரூப் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்க இரண்டாவது தளம் பயன்படுத்தப்படுகிறது. “மதுரையில் உள்ள, கோவைக்கு முன்மொழியப்பட்ட கலைஞர் நூலக வசதி நமக்குத் தேவை. இத்தகைய வசதி, அரியலூர் மற்றும் பெரம்பலூரில் உள்ள வளர்ச்சியடையாத பகுதிகளைச் சேர்ந்த UPSC மற்றும் TNPSC ஆர்வலர்களுக்கும் உதவும்" என்று NEET PG 2024 க்கு தயாராகும் செந்தில் குமார் கூறினார்.

சராசரியாக, ஒவ்வொரு வாரமும் மைய நூலகத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சித் திட்டம் மற்றும் மாதிரித் தேர்வுகள் மூலம் சுமார் 150 மாணவர்கள் பயனடைகின்றனர். “திருச்சிக்கு கலைஞர் நூலகத்தை பள்ளிக் கல்வித் துறை அனுமதிக்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். வரும் தேர்தலில் கோரிக்கை வைப்போம்,'' என, திருச்சி Intra-City Development Endeavours (TIDES) உறுப்பினர் G.கனகராஜன் தெரிவித்தார். 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தற்போதுள்ள மைய நூலகம், மெயின் கார்ட் கேட் அருகே நகரின் முதன்மையான வணிகப் பகுதியில் அமைந்துள்ளதால், மேலும் விரிவாக்கம் செய்வதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. நிறைவுற்ற நூலகத்தில் சரியான பார்க்கிங் இடமும் இல்லை.

“அருகில் உள்ள மாவட்ட மாணவர்களும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்காக நகரத்தில் வசிப்பதால், திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இப்போதைக்கு செயலில் உள்ள திட்டங்கள் எதுவும் இல்லை, எதிர்காலத்தில் நகரம் ஒன்றைப் பெறலாம் என நூலகத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.