Skip to main content

சென்னையில் அம்பேத்கரின் முழு உருவச் சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார் (படங்கள்)

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பாரத ரத்னா பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் முழு உருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (27.10.2022) சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனால் வழங்கப்பட்ட பாரத ரத்னா பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் முழு உருவச் சிலையினை திறந்து வைத்தார்.

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனால் 14.4.2022 அன்று அம்பேத்கரின் 132-ஆவது பிறந்த நாளன்று சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கரின் முழு உருவச் சிலை நிறுவுவதற்காக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிறுவப்பட்டுள்ள அம்பேத்கரின் முழு உருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்