Skip to main content

சிதம்பரத்தில் 26வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

Published on 29/10/2018 | Edited on 29/10/2018
chi

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 26-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது.


 மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் உதவியுடன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சிக்கு, என்.எல்.சி இந்தியா நிறுவன நிதித்துறை முதன்மைப் பொது மேலாளர் மதிவாணன் தலைமை வகித்துப் பேசினார். கிளைத் தலைவர் சத்தியநாராயணன் வரவேற்றார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய இயக்குநர் கதிரேசன் வாழ்த்துரையாற்றினார்.

 

chi

 

 பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாநாட்டை தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: மாணவ, மாணவிகள் ஏன்? எதற்கு? எப்படி? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி பாடத்தை தெளிவுடன் படிக்க வேண்டும். ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் "நோபல் பரிசு' இந்தியாவுக்கு கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி கொள்ளவேண்டும்.  மாணவர்கள் பாடத்தை ஆர்வத்துடன் பயின்றால் நோபல் பரிசு வெல்லும் அளவுக்கு உயரலாம் என்றார் .

 

மாநாட்டில், நலமான, பசுமையான, வளமான இந்தியாவுக்கான அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் என்ற தலைப்பில் மாவட்டம் முழுவதும் 35 பள்ளிகளிலிருந்து 124 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. தோட்டக்கலை பிரிவைச் சார்ந்த முனைவர் பத்மநாபன் தலைமையில் 10 நடுவர்கள் ஆய்வறிக்கைகளை ஆராய்ந்து 12 குழுக்களை மாநில மாநாட்டுக்கு தேர்வு செய்தனர்.


 வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலர் தாமோதரன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் ஸ்டீபன்நாதன், பரங்கிப்பேட்டை வட்டாரக் கல்வி அலுவலர் நடராஜன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
 பல்கலைக்கழக கல்வித் திட்ட இயக்குநர் ராஜசேகரன், தேர்வான 12 குழுக்களை பாராட்டி நிறைவுரை வழங்கினார். மாநாட்டை மாவட்ட என்எல்சி ஒருங்கிணைப்பாளர் பாலகுருநாதன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் வழிநடத்தினர். மாநாட்டில் மாணவர்களின் ஆய்வறிக்கை உள்ளடங்கிய, ஹரிஹரன் உருவாக்கிய சிறப்புமலர் வெளியிடப்பட்டது.

 

மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட நெய்வேலியில் உள்ள ஜவகர் பள்ளி, என்.எம்.ஜே. பள்ளி, சேக்ரட் பள்ளி, பண்ருட்டியில் உள்ள ஜான்டூயி, சாரதா வித்யாலயா, கடலூரில் உள்ள சரஸ்வதி வித்யாலயா பள்ளி, துளிர் இல்லத்தை சேர்த்து 2 குழுக்களில் மொத்தம் 12 குழுவினர் வருகிற நவ.16,17,18 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெறும் மாநில மாநாட்டில் பங்கேற்கிறார்கள். சிதம்பரம் கிளை பொருளாளர் தென்னவன் நன்றி கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரம் தொகுதியில் ஆள் கிடைக்காததால் வேலூரில் இருந்து வேட்பாளரை இறக்கிய பாஜக!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
BJP dropped candidate from Vellore due to lack of candidates in Chidambaram constituency

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.  இதில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி போட்டியிடுகிறார்.  அதே போல் அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளராக சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவர்கள் இருவரும் சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்டவர்கள்.

இந்த நிலையில் பாஜக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் சரியான ஆள் இல்லாததால் வேட்பாளரை அறிவிப்பதில் தாமதபடுத்தி வந்தனர். சிதம்பரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட பட்டியல் சமூகத்தில் சரியான ஆள் இல்லை என, வேலூரில் முன்னாள் அதிமுக மேயராக இருந்த கார்த்தியாயினியை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனர்.  இது கட்சியினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இவர் வேலூர் மாநகராட்சி மேயராக 2011ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்த தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவை விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பை ஏற்படுத்தியவர். தேசிய அளவில் அப்போது சர்ச்சையானவர் இவர்.

பொதுவாக நீதிபதிகளை விமர்சிக்க கூடாது என்பதை மறந்து மேயர் பொறுப்பில் இருந்தும் கார்த்தியாயினி மற்றும் அதிமுக கவுன்சிலர்கள், நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினர். அவரது உருவ பொம்மையையும் எரித்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேயரின் செயல் சட்டத்திற்குப் புறம்பான செயல். நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் என்று கண்டனங்கள் எழுந்தன.

சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், மேயர் மன்னிப்பு கேட்க வேண்டும், அதை பத்திரிகை செய்தியாக வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மாநகராட்சிக் கூட்டத்தைக் கூட்டிய மேயர் கார்த்தியாயினி தீர்மானம் போட்டதற்காகவும்,  உருவ பொம்மையை கொளுத்தியதற்காகவும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். ஜெயலலிதா மறைவிற்கு பின் பாஜகவில் சேர்ந்தார்.

பாஜகவுக்கு உள்ளூரில் ஒரு பட்டியலின வேட்பாளர் கிடைக்கவில்லை என   பாஜக தலைவர் அண்ணாமலையின் சிபாரிசால் வேலூர் தொகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளார் என்றும் அதே நேரத்தில் சிதம்பரம் பாரளுமன்ற தொகுதியை உள்ளடக்கிய கடலூர். அரியலூர், பெரம்பலூர்  மாவட்டங்களில் பட்டியல் சமூகத்தில் ஆண்டாண்டு காலமாக கட்சிக்காக பாடுபட்ட எவ்வளவோ உறுப்பினர்கள், தலைவர்கள் உள்ளனர். அவர்களை வேட்பாளராக அறிவிக்கலாம். ஆனால் தமிழக பாஜக தலைமை ஏதோ கணக்கு போட்டு  அறிவித்துள்ளது.  இருப்பினும் தலைமையின் கணக்கு இங்கு செல்லாது என  கட்சியினர் மத்தியில் அரச புரசலாக பேசப்பட்டு வருகிறதாம்.