Skip to main content

“அடி வாங்கினேன்; அமைச்சரானேன்!” -ஆசிரியர்கள் விழாவில் கே.டி.ராஜேந்திரபாலாஜி!

Published on 11/06/2018 | Edited on 11/06/2018
ktr

 

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் விருதுநகர் மாவட்டத்தை  முதலிடத்துக்குக் கொண்டுவந்த ஆசிரியர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில்,  தன்னை உணர்ந்து பேசி, எதிரில் இருப்பவர்களின் அருமை தெரிந்து, வெகு இயல்பாகப் பேசி, ஆச்சரியப்பட வைத்தார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. 
“அன்னைக்கு நான் சபாநாயகர் தனபால் ரூம்ல இருந்தேன். அப்ப டிவில ஸ்க்ரோல் ஓடுச்சு. பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் முதலிடம்னு. அதை பார்த்துட்டு எல்லா அமைச்சர்களும் எனக்கு வாழ்த்து தெரிவிச்சாங்க. வேற மாவட்டத்துக்கு விட்டுக்கொடுக்கவே மாட்டீங்களான்னு கேட்டாங்க. இந்தப் பெருமைக்கு எந்த விதத்தில் நான் சொந்தம் கொண்டாட முடியும்? எந்த ஸ்கூலுக்காச்சும் போய் நான் மாணவர்களுக்குப் பாடம் நடத்தினேனா? இல்லைன்னா, எங்க அப்பா ஸ்கூல் வாத்தியாரா? இல்லியே! இப்படி ஒரு ரிசல்ட் வர்றதுக்கு காரணம்,  வருஷம் பூராவும் உழைச்ச ஆசிரியர்களாகிய நீங்கதான். உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாழ்த்துதான்,  மாவட்ட அமைச்சர்ங்கிற முறையில், அன்னைக்கு  எனக்கு கிடைச்சது.  அந்த உணர்வோடுதான், கலெக்டர்கிட்ட சொல்லி, ஆசிரியர்களுக்குப் பாராட்டுவிழா நடத்தணும்னு சொன்னேன். 

 

as


இன்னைக்கு நான் அமைச்சரா இருக்கேன்னு சொன்னா, அதுக்குக் காரணம் என்னை உருவாக்கிய ஆசிரியர்கள்தான். சின்ன வயசுல எங்க வீட்ல ரொம்ப கஷ்டம். வறுமையின் கோரப்பிடியில் எங்க குடும்பம் சிக்கித் தவிச்சப்ப, பிலோமினாங்கிற டீச்சர்தான் எனக்கு சாப்பாடு போட்டு ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போனாங்க. இப்ப அவங்க இருக்கிறாங்களா, இல்லியான்னுகூட தெரியல. அப்ப, சேட்டை பண்ணிக்கிட்டு,  ஸ்கூலுக்குப் போகாம ஊர் சுத்திக்கிட்டிருந்தேன். சின்னச்சாமி வாத்தியாருதான் என்னைத் தேடிக் கண்டுபிடிச்சு, அடிச்சு படிக்க வச்சாரு. பத்து படிக்கிறப்ப செட்டு சேர்த்துக்கிட்டு, ஸ்கூலுக்கு வராம திரிஞ்சேன். சீத்தாராமன் ஹெட்மாஸ்டர் விடல. என்னை இழுத்துட்டு வந்து, ஸ்கூல் கிரவுண்ட்ல முட்டிக்கால் போட வச்சாரு. அப்ப என்கிட்ட  ‘டேய்.. படிச்சாத்தான்டா நாலு பேரு மாதிரி வாழ்க்கையில நல்லா இருக்க முடியும்’னு புத்திமதி சொன்னாரு. அவரு பேச்சைக் கேட்டு ஏதோ ஓரளவுக்கு அப்ப படிச்சதாலதான், இன்னைக்கு கோட்டையில உட்கார்ந்து, பைல் பார்க்கிற அளவுக்கு உயர முடிஞ்சிருக்கு.   
உங்ககிட்ட படிக்கிறவங்க கலெக்டராகலாம்; டாக்டராகலாம்; இன்ஜினியராகலாம்; என்னை மாதிரி மந்திரியும் ஆகலாம். அப்ப,  என்கிட்ட படிச்சவன்னு பெருமையா சொல்லுவீங்க. ஆனா, எங்களையெல்லாம் ஏணியா இருந்து ஏற்றிவிட்டு, நீங்க மட்டும் கடைசிவரை ஆசிரியரா அதே இடத்துல இருப்பீங்க. அப்படி ஒரு  உன்னதமான பணி, ஆசிரியர் பணி.  உங்களைப் பாராட்டுறதுக்கு என்கிட்ட வார்த்தைகளே இல்லை.” என்று  ‘டச்சிங்’ ஆகப் பேசினார் கே.டி.ராஜேந்திரபாலாஜி.  
“பரவாயில்லையே! ஆசிரியர்களை வாழ்த்துவதற்காக,   கடந்துபோன வறுமைக்காலத்தையும், படிக்கும்போது பொறுப்பில்லாமல் திரிந்ததையும், அமைச்சராக இருந்தும், இத்தனை வெளிப்படையாகச் சொல்கிறாரே!” என்று சக ஆசிரியரிடம், தன் பங்குக்கு அமைச்சரைப் பாராட்டினார் ஒரு ஆசிரியர். 
எழுத்தறிவித்த இறைவன் அல்லவா? எத்தனை பாராட்டினாலும் தகும்!

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.