Skip to main content

இந்தியாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த இங்கிலாந்தின் செயற்கை கோள்கள்

Published on 17/09/2018 | Edited on 17/09/2018
pslv


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ' பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. என்னும் இருவகை  ராக்கெட்டுகளையும் மற்றும் பல்வேறு செயற்கைகோள்களையும் வடிவமைத்து விண்ணில் செலுத்திவருகிறது. 
 

இஸ்ரோவும் மற்றும் அதன் வணிகக் கிளையுமான 'ஆண்டிரிக்ஸ்' நிறுவனமும் இணைந்து வணிக நோக்கில் இங்கிலாந்துக்கு சொந்தமான  'நோவாசர்' மற்றும் 'எஸ்-14' ஆகிய இரு செயற்கை கோள்களை நேற்று இரவு 10.08 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருக்கும் முதல் ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி, சி-42 ராக்கெட் மூலம் விண்ணில்  வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. 
 

இது வெள்ள கண்காணிப்பு, விவசாய பயிர் மதிப்பீடு, காடுகள் கண்காணிப்பு, நில பயன்பாடு மேப்பிங், பேரிடர் மேலாண்மை மற்றும் கடல் பயன்பாடு உள்ளிட்ட புவியின் கண்காணிப்புக்காக செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   
 

சார்ந்த செய்திகள்

Next Story

‘இன்சாட் - 3 டி.எஸ்.’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
'Insat - 3DS' satellite successfully launched

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக ‘இன்சாட் - 3டிஎஸ்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இதனை ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி எப்-14 ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான கவுண்ட் டவுன் நேற்று (16-02-24) பகல் 2 மணி 05 நிமிடத்தில் தொடங்கியது. மேலும், இந்த ராக்கெட் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் செலுத்தவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் (INSAT-3DS) செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி - எப் 14 ராக்கெட் இன்று (17-02-24) மாலை 5:35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான வானிலை செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி எப் -14 ராக்கெட் சுமார் 420 டன் எடை கொண்டதாகும். 

2,274 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வுக் கருவிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் மூலம் வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

Next Story

புத்தாண்டின் முதல் நாளில் சாதனை படைத்த இந்தியா!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Record-breaking ISRO; PSLV C-58 rocket hits

உலகிலேயே முதல் நாடாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 வெற்றிகரமாகத் தனது ஆய்வுகளை நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இந்தியா சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1-ஐ அனுப்பி அடுத்த சாதனையை நிகழ்த்தியது. 

விண்வெளியில் உள்ள கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக இஸ்ரேல் சார்பில் ‘எக்ஸ்போசாட்’ (எக்ஸ்-ரே போலாரிமீட்டர் சாட்டிலைட்) எனும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரேல் வடிவமைத்திருந்தது. மொத்தம் 469 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பூமியிலிருந்து சுமார் 650 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளது.

இந்த ஆய்வு நடவடிக்கைகளை எடுப்பதற்காக ‘எக்ஸ்பெக்ட்’ (எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோகிராபி), ‘போலிக்ஸ்’ (எக்ஸ்ரே போலாரிமீட்டர்) ஆகிய 2 அதிநவீன சாதனங்கள் அதில் பொருத்தப்பட்டுள்ளன. இவை, விண்வெளியில் வியாபித்துள்ள ஊடுகதிர்களின் (எக்ஸ்ரே) துருவ அளவு மற்றும் கோணத்தை அளவிடுதல், நியூட்ரான் நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் கதிரியக்கம், கருத்துக்களை வாயுக்களின் திரள் உள்பட பலவற்றை ஆராய உள்ளது. மேலும், இவை செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்ட பின்பு புவி தாழ்வட்டப் பாதைக்கு வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும். 

இந்த நிலையில், 25 மணி நேர கவுண்டவுனுடன் நேற்று (31-12-23) காலை 8:10 மணிக்கு தொடங்கிய விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளுடன் ‘பிஎஸ்எல்வி சி -58’ ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று (01-01-24) காலை 9.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோள் உள்பட 11 செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட், பூமியிலிருந்து 650 கி.மீ உயரத்தில் புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் இஸ்ரோ விண்ணில் ஏவிய முதல் ராக்கெட் இதுவாகும்.