Skip to main content

இரட்டைத் தீர்ப்பு! இ.பி.எஸ். ஹேப்பி! அழகிரி ரீ-என்ட்ரி! ராஜ்பவன் லீலைகள் அம்பலம்!

Published on 28/04/2018 | Edited on 29/04/2018
""ஹலோ தலைவரே, முதல்வர் இ.பி. எஸ்.சும் துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.சும், ஹேப்பி அண்ணாச்சின்னு குஷியா இருக்காங்க.''’ ""இருக்கமாட்டாங்களா? ஆட்சிக்கு வர இருந்த ஆபத்திலிருந்து, உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மூலம், தப்பிச்சிருக்காங்களே?''’ ""ஆமாங்க தலைவரே, போன ஆண்டு பிப்ர வரியில், எடப்பாடி அரசுக்கு எதி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

"ஸ்டாலின் மீது இருந்த பாசம் அளவிட முடியாதது; அவசர நிலையின்போது ஸ்டாலினுக்காக கொதித்தெழுந்த அழகிரி..." - காந்தராஜ்

Published on 29/11/2022 | Edited on 30/11/2022

 

xம

 

இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் இந்தச் சட்டத்தை அப்போது பதவியிலிருந்த இந்திரா காந்தி அமல்படுத்தினார். இந்தியாவில் பெரிய அளவிலான களேபரங்கள் நடைபெறுவதற்கு மூலகாரணமாக இருந்த இந்த அவசரநிலை பிரகடனம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் இன்றளவும் இருந்து வருகிறது.

 

இதன் அடிமூலம் எதிலிருந்து துவங்குகிறது, இதில் பாதிக்கப்பட்டவர்கள் யார் யார் போன்ற கேள்விகளுக்குப் பதிலளித்திருந்தார் பிரபல அரசியல் விமர்சகர் காந்தராஜ். அவரிடம் இதுதொடர்பாக நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள், " அவசர நிலையின் போது தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது மு.க.அழகிரி தம்பியின் கைதை தாங்க முடியாமல் துடித்த துடிப்பை நான் அருகிலிருந்து பார்த்தவன். 

 

என் தம்பியை உள்ளே தள்ளியவர்களை சும்மா விடக்கூடாது டாக்டர் என்று கூறுவார். ரொம்ப கோபமாகப் பேசிக்கொண்டே அமருவார். நான் அவரிடம் அழகிரி நாம் எவ்வளவு கோபமாகப் பேசினாலும் அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கிறது. நாம் என்ன செய் முடியும் என்று கூறுவேன். நம்ம கோவத்தை நாம் நமக்குள்ளேதான் காட்ட முடியும். அதைத்தவிர வேறு வழி எதுவும் இல்லை என்பேன். ஆனால் அவர் அப்படி கோவமாகப் பேசுவார் அதே ராஜீவ்காந்தியை உள்ளே தள்ள வேண்டும் என்பார். அப்படி வேகமாகப் பேசுவார். அந்த அளவுக்கு பாசக்கார அண்ணனாக அவர் இருந்தார். 

 

இது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைக்கு அரசியலில் இருவரையும் வேறு கோணத்தில் பார்த்து கருத்து கூறுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நேரில் அவர்களின் பாசத்தைப் பார்த்தவன் என்ற அடிப்படியில் இதைக் கூறுகிறேன். ஸ்டாலின் சிறைச்சாலையிலிருந்த வரையிலும் அவருக்கு அந்தக் கோபம் கொஞ்சம் கூட குறைந்தபாடில்லை. எப்போது என்னைப் பார்த்தாலும் தம்பி மீது உள்ள பாசத்தால் கோபத்தின் உச்சிக்கே சென்று மத்திய அரசை விமர்சனம் செய்வார். அவர்களை விடக்கூடாது என்று கோபமாகப் பேசுவார். அந்த அளவுக்கு ஸ்டாலின் மீது பாசமாக இருந்தார்".

 

 

Next Story

‘இணைந்த இதயங்கள்..’ மதுரையை கலக்கும் அழகிரி போஸ்டர்..! 

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (07/05/2021) காலை 09.00 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து, அவரது தலைமையிலான அமைச்சரவை அமைச்சர்களும் பதவியேற்றனர். 

 

மு.க. ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பதையொட்டி வாழ்த்து தெரிவித்து மு.க அழகிரியின் ஆதரவாளர்களால், ‘தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும்.’, ‘தம்பிக்கு வாழ்த்திய அண்ணனுக்கு நன்றி.’, ‘தம்பி வா தலைமை ஏற்க வா.’, ‘இணைந்த இதயங்களே அஞ்சா நெஞ்சரின் வாழ்த்துகளுடன் தம்பிகள்..’ என்பன போன்ற வாசகங்களுடன் மதுரை முழுக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதேபோல், அழகிரியின் ஆதரவாளர்கள், இனிப்பு வழங்கி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.