Skip to main content

திமுகவில் சேர்த்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார்;திருவாரூரில் அழகிரி!!

Published on 23/09/2018 | Edited on 23/09/2018


தொண்டர்கள் விரும்பினால் தேர்தலில் போட்டியிடுவேன் என திருவாரூர் கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்திய கூட்டத்தில் மு.க அழகிரி  பேசினார்.

 

திமுக தலைவர் கலைஞரின் மறைவை தொடர்ந்து திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டு, அதற்கான இடைத்தேர்தலை வரும் டிசம்பர் மாதம் நடத்தப்படலாம் என்கிற எதிர்பார்ப்பில் அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை செய்துவருகின்றனர். 

 

alagiri

 

இந்தநிலையில் திருவாரூர் தொகுதியில் மு,க,அழகிரி போட்டியிடப்போவதாக தகவல்கள் பரவிக்கிடந்தன, அவரது ஆதரவாளர்களைக்கொண்டு திருவாரூரின் நிலவரம் குறித்தும் ஒரு வாரகாலம் ஆய்வு செய்யவைத்திருந்தார். அந்த ஆய்வின் முடிவிலும் எனக்கு நம்பிக்கையில்லை, நானே செல்கிறேன், அங்கு  மக்களிடம் தனக்கு வரவேற்பு எப்படியுள்ளது என்பதை அறிந்த பிறகே முடிவெடுக்கப்போகிறேன் என தனது ஆதரவாளர்களிடம் கூறியிருந்தார்.

 

அதன்படியே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல, கலைஞருக்கு திருவாரூரில் புகழஞ்சலி கூட்டம் நடத்தனும், அப்படியே தனக்கு இருக்கும் ஆதரவு குறித்தும் அறிந்துகொள்ள வேண்டும் என்கிற மனநிலையோடு புகழஞ்சலி கூட்டத்தை 23 ம் தேதி கூட்ட திட்டமிட்டு அறிவித்திருந்தார். அறிவித்தபடியே இன்று காலை மதுரையில் இருந்து பத்து காரில் புகழஞ்சலி கூட்டத்திற்கு வந்த முக அழகிரி, வரும்வழியில் காட்டூரில் உள்ள கலைஞரின் தாயார் அஞ்சுகத்தம்மாளின் நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருக்கு பேரூந்து நிலையம் ரவுண்டானாவில் குவிந்திருந்த   அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் அவரது கார் மீது மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர். 

 

தொடர்ந்து நேதாஜி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இறுதியாக  தெற்கு விதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  புகழஞ்சலி கூட்டத்தில் பங்கேற்றார்.  மேடையில்  வைக்கபட்டிருந்த கலைஞரின் திரு உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு அழகிரியின் ஆதரவாளர்கள் மாலை அணிவித்து வீர வாள்பரிசளித்தனர். 

 

alagiri

 

அங்கு பேசிய அழகிரி " திருவாரூர் தெற்கு வீதியில் தான் நான் பிறந்தேன், இங்கு நான் சுற்றி சந்தோசம் அடையாத இடங்கள் இல்லை. நான் பிறந்ததும் எனது தந்தை கலைஞர் பெரியாரை அழைத்துவந்து எனக்கு பெயர்வைத்தார்."அப்போது பட்டுக்கோட்டை அழகிரியின் நினைவாக எனக்கு அழகிரி என பெயர் வைத்தனர். அதோடு பெரியாரின் பகுத்தரவு பட்டரையில் வளர்ந்த கலைஞர் என்னையும் அப்படியே உறுவாக்கினார். எனது திருமனம் சீர்திருத்த திருமணமாக இருக்கவேண்டுமென நினைத்தார், அவர் விருப்ப படியே தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த பெண்ணையே பெரியார் முன்னிலையில் திருமணத்தை நடத்தி வைத்தார். 

 

எத்தனையோ முறை திருவாரூருக்கு வந்திருக்கிறேன். ஆனால் தற்போது கலைஞர் இல்லாமல் வந்திருப்பது வருத்தமளிக்கிறது. தமிழக அரசு திருவாரூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் நாகை மாவட்டம் கீழ்வேளுரில் உள்ள வேளாண் கல்லூரிக்கும் கலைஞரின் பெயரை வைக்க முன்வரவேண்டும், கலைஞரால் கொண்டுவரப்பட்ட திருவாரூர் அருகே வடகண்டத்தில் உள்ள மத்திய பல்கலைகழத்திற்கும் கலைஞரின் பெயரை சூட்ட வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கவுள்ளேன்."என தனது பேச்சை சுருக்கமாக முடித்தார்.

 

alagiri

 

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி ,"தனி  கட்சி தொடங்கும் என்னம் எண்ணமில்லை.விசுவாசிகளும், பொதுமக்களும் முடிவு செய்தால் தேர்தலில் போட்டியிடுவேன். தமிழகத்தில் ஆட்சி நடப்பதாகவே தெரியல, மாறி மாறி இரண்டு கட்சிகளும் போராட்டம் மட்டுமே நடத்துகின்றனர். தன்னை திமுகவில் இனைைத்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்று கொள்ள நான் தயார். அவரோடு சேர்ந்து என்னால் முடிந்த கட்சிப்பனிகளை செய்வேன்.   ஆனால் அவரிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. நான் தேர்தலில் போடிட்யிட்டால் அனைத்துகட்சி தலைவர்களுமே தனக்கு ஆதரவு தருவார்கள். மக்கள் விரும்பினால்,இடைத்தேர்தல்  நடந்தால்  போட்டியிடுவேன்," என  முடித்துக்கொண்டார்.

 

அழகிரியோடு நிகழ்ச்சியில் துரைதயாநிதி அழகிரி மற்றும் ஏராளமான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.