Skip to main content

அதிகாரப் போட்டியால் கவிழ்ந்த அரசு! - குழப்பத்தில் அண்டை நாடு!

Published on 10/05/2021 | Edited on 10/05/2021

 

kp sharma oli

 

நேபாள நாட்டைச் சேர்ந்தவர் கே.பி.சர்மா ஒலி. ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவருக்கும், நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கும் அதிகாரப் போட்டி நடந்துவந்தது. அதன்தொடர்ச்சியாக இருவருக்கும் இடையேயான மோதல், அவசரச் சட்டம் விவகாரம் ஒன்றில் பெரிதாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி.சர்மா ஒலி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இது புஷ்ப கமல் தஹால் குழுவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

 

இதனையடுத்து, புஷ்ப கமல் தஹால் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் கூடி, பிரதமர் கே.பி.சர்மா ஒலியை, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது. அதேநேரத்தில் நேபாள நாட்டு உச்சநீதிமன்றம், நாடாளுமன்றத்தைக் கலைத்தது செல்லாது என அறிவித்தது.

 

இந்தநிலையில் ஆட்சியையும், அதிகாரத்தையும் கைப்பற்றும் பொருட்டு, நேபாள நாடாளுமன்றத்தில் கே.பி.சர்மா ஒலி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். ஆனால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கே.பி.சர்மா ஒலி தோல்வியடைந்தார். 93 பேர் கே.பி.சர்மா ஒலிக்கு ஆதரவாகவும், 124 எதிராகவும் வாக்களித்தனர். 15 பேர் நடுநிலை வகித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததால், கே.பி.சர்மா ஒலி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கே.பி.சர்மா ஒலி, தனது பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நேபாளம் நிலநடுக்கம்; உயரும் பலி எண்ணிக்கையால் மக்கள் அச்சம்

Published on 04/11/2023 | Edited on 05/11/2023

 

Nepal Earthquake; People fear due to rising death toll

 

நேபாளத்தின் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நேபாளத்தில் வடமேற்குப் பகுதியில் நேற்று இரவு இந்திய நேரப்படி 11.52 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 ஆகப் பதிவாகி இருந்தது. இதனால், வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடினர். இந்த நிலநடுக்கம் வட இந்தியாவில் சில மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது. 

 

இந்த  நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 128 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் நேபாளத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் கூடும் எனச் சொல்லப்பட்டது. 

 

இந்த நிலையில், காயமடைந்தவர்களை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில், அந்த மருத்துவமனை நிரம்பி வழிவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150யை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் வீடுகளுக்கு வெளியே தங்கியிருக்கின்றனர்.

 

 

 

Next Story

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

Nepal earthquake lost life toll rises to 128

 

நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.

 

நேபாளத்தில் வடமேற்குப் பகுதியில் நேற்று இரவு இந்திய நேரப்படி 11.52 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 ஆகப் பதிவாகி இருந்தது. இதனால், வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடினர். இந்த நிலநடுக்கம் வட இந்தியாவில் சில மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 128 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் நேபாளத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் கூடும் எனச் சொல்லப்படுகிறது.