Published on 04/09/2020 | Edited on 04/09/2020
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் அமலில் உள்ள நிலையில், கரோனா விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வர முடிவு செய்திருந்தது. கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளான பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளி கடைப்பிடித்தல், விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதித்தல் மற்றும் அவர்களை சட்டப்படி தண்டிப்பதற்கு இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
இந்நிலையில் இந்த அவசரச் சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.