Skip to main content

கத்தியை நெஞ்சில் சொருகியிருந்தால் நீங்கள் உண்மையானவர் : லீனா மணிமேகலைக்கு சுசி கணேசன் பதிலடி

Published on 16/10/2018 | Edited on 16/10/2018
Leena Manimekalai



‘மீ டூ’ இயக்கம் மூலம் தினந்தோறும் பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் இயக்குனர் சுசி கணேசன் மேல் குறும்பட இயக்குனர் லீனா மணிமேகலை தெரிவித்திருக்கும் புகார் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 

லீனா மணிமேகலை குற்றச்சாட்டுக்கு இயக்குநர் சுசி கணேசன் தனது முகநூலில்,
 

''லீனா மணிமேகலை- உங்கள் அருவருப்பான பொய் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. சேற்றில் உருளும் பன்றி, வெள்ளைச் சட்டையோடு சுற்றுபவர்களை பார்த்து எப்படி பொறாமைப்படுமோ அப்படி ஒரு சம்பவத்தை உங்கள் கற்பனைத் திறனோடு சேர்த்து ஒரு கதை பண்ணியிருக்கிறீர்கள். 
 

இந்த உலகம் பொறுக்கிகளுக்கும், போக்கிரிகளுக்கும் உகந்தது என்பதை நீருபித்துவிட்டீர்கள்... உங்களோடு சகதியில் உருண்டு இருந்தால், ஒருவேளை இந்த பழியிலிருந்து என் பெயர் விடுபட்டிருக்குமோ??? அரை மணிப் பேட்டிக்கு அறிமுகமான முதல் அறிமுகத்திலியே, ஒருவர் தனியாக காரில் ஏறச்சொன்னால் ஏறிக்கொள்ளும் புதுமைப் பெண்ணான நீங்கள், கத்தியை அந்த அப்பாவி (ஆடம்பரக் கார் வைத்திருந்தவன் எவனோ) நெஞ்சில் சொருகியிருந்தால் நீங்கள் உண்மையானவர். 

 

susi ganesan


 

அத்தைனையும் பொய் மூட்டைகள் என்பதை நிருபிக்க ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அவற்றை வெளியிடுவதற்கு முன்- என்னை கொச்சைப் படுத்திய அதே பக்கத்தில் உன் மன்னிப்பை கோருகிறேன். இல்லையென்றால் கோர்ட் மூலமாக மான நஷ்ட வழக்கு தொடர்ந்து வருகிற தொகையை, உன்னைப் போன்ற me too இயக்கத்தை சுய பழிவாங்களுக்கு பயன்படுத்தும் " சமுதாய வைரஸ்களை" களை எடுப்பதற்கு பயன்படுத்துவதைத் தவிற வேறு வழியில்லை.
 

Social media நண்பர்களுக்கு-தயவு செய்து metoo-இயக்கத்தை திசைதிருப்பும் இதுபோன்ற வக்ர புத்தி கொண்டவர்களை அடையாளம் கண்டு தவிறுங்கள். லீலா மணிமேகலை என்னிடம் கேட்டது இரண்டு உதவிகள்- உதவி இயக்குனர்/பாடல் ஆசிரியர். இரண்டும் என்னால் செய்ய முடியவில்லை. குடும்ப வாழ்க்கையில் தோற்று, கவிஞர் வாழ்க்கையும் கிட்டாத நிலையில், சினிமா உலகம் அறியும் அழுக்குகள் நிறைந்த அவரது சொந்த வாழ்க்கையில் காரித் துப்பமுடியாமல், ஏனோ என்மீது வன்மைத்தை துப்பியிருக்கிறார். கற்பு என்பது இரு பாலருக்கும் பொதுவானது. எனது கற்பை சூரையாடியிருக்கிறார். என் குடும்பம், வேதனையோடு வடிக்கும் கண்ணீரை கோர்ட் மூலம் கழுவும் வரை எந்த பக்கமும் சாய்ந்துவிடாமல் காத்திருங்கள்.'' என பதிவிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

3 ஆண்டுகளுக்கு முன் நடந்த பாலியல் வன்கொடுமை; ஜாமினீல் வெளியே வந்த குற்றவாளியின் வெறிச்செயல்!

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

misbehaviour at UP child before 3 years and came out from jail to lost her life

 

3 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியை ஜாமீனில் வெளியே வந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

உத்தர பிரதேசம் கவுஷாம்பி மாவட்டத்தை சேர்ந்தவர் 19 வயது பெண். இவரை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பவான் நஷாத் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி பவான் நஷாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை அந்த பெண் வாபஸ் பெற்றால் தான் வெளியே வர முடியும் என்பதை உணர்ந்த பவான் நஷாத், தனது சகோதரர் அசோக் பஸ்வானிடம் கூறி அந்த பெண்ணை வாபஸ் பெற வைக்குமாறு கூறியிருக்கிறார்.

 

அதன்படி, அசோக் பஸ்வானும் பலமுறை அந்த பெண்ணின் குடும்பத்தை மிரட்டி வாபஸ் பெற வேண்டும் எனக் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண் இதற்கு திட்டவட்டமாக மறுத்துள்ளார். அசோக் பஸ்வான் ஏற்கனவே கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கிடையே, சிறையில் இருந்த பவான் நஷாத் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன்பின்னர், பவான் நஷாத்தும், அசோக்கும் அந்த பெண்ணின் ஊருக்கு சென்றுள்ளனர். அங்கு சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணை வழிமறித்து, வழக்கை வாபஸ் பெறாததற்காக அடித்து துன்புறுத்தியிருக்கின்றனர். மேலும், தாங்கள் மறைத்து வைத்திருந்த கோடாரியால் அந்த பெண்ணை வெட்டி கொலை செய்து அந்த இடத்தை விட்டு தப்பி சென்றிருக்கின்றனர். இந்த சம்பவத்தை அறிந்த அந்த ஊர் பொதுமக்கள் இது குறித்து காவல்துறையினரிடம் தகவல் கொடுத்துள்ளனர்.

 

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், கொலையான அந்த பெண்ணை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

 

Next Story

புகார் அளிக்க வந்த சிறுமி; சிறப்பு உதவி ஆய்வாளரின் கொடூரச் செயல்

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

 Special Assistant Inspector General  misbehave The girl came to complain

 

புகார் அளிக்க சென்ற சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவலர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, கடந்த 2020ஆம் ஆண்டு சட்டத்திற்கு புறம்பாக குழந்தை திருமணம் நடைபெற்றுள்ளது. இதனிடையே, அந்த சிறுமிக்கும் அவருடைய மாமியாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பென்னாகரம் காவல் நிலையத்தில் அந்த சிறுமி புகார் அளிக்க வந்தார். அப்போது, சிறப்பு உதவி ஆய்வாளர் சகாதேவன் அந்த சிறுமியின் செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு அனுப்பியுள்ளார். 

 

இதனையடுத்து, சகாதேவன் அந்த சிறுமியை தொடர்பு கொண்டு விசாரணைக்கு வருமாறு அழைத்து சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கிடையே, அந்த சிறுமி தன்னுடைய கணவர் பழனிசாமி தன்னை கொடுமைப்படுத்துவதாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், அவர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, அங்கு இருந்த குழந்தைகள் நல உறுப்பினர்களிடம், தான்  பலமுறை சிறப்பு உதவி ஆய்வாளர் சகாதேவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார்.

 

அதன்  பேரில், இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு உதவி ஆய்வாளர் சகாதேவன் மீது பென்னாகரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சகாதேவனை போக்சோ சட்டத்தில் பென்னாகரம் மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர். புகார் அளிக்க வந்த சிறுமியை போலீசார் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.