Skip to main content

தமிழகத்தின் தலைமகனே நீ மரணிக்கவில்லை... விதைக்கப்பட்டிருக்கிறாய்...

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

 

 

காஷ்மீர் புல்வாமாவில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியானவர்களில் தூத்துகுடி மாவட்டம் சவலாப்பேரி கிராமத்தின் கணபதி -மருத்தாத்தாள் தம்பதியரின் கடைசி மகன்தான் சுப்பிரமணியன். சிஆர்பிஎப் தேர்வுக்கு பிறகு சிஆர்பிஎப்பில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். 28 வயதே ஆன இந்த இளைஞர் உத்திரபிரதேசத்தில் இரண்டு வருட பயிற்சிக்கு பின்னர் காஷ்மீர் அனுப்பப்பட்டார். அங்கே பணியில் இருந்த போதுதான் இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கிறது. இதில் பலியான 41 வீரர்களின் உடல்கள் நேற்று டெல்லி கொண்டுவரப்பட்டு பிரதமர் மோடி உள்ளிட்ட அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

 

 

இன்று காலை 7 மணி அளவில் ராணுவத்தின் தனி விமானத்தில் தமிழக வீரர்கள் இருவரின் உடல்கள் ஏற்றப்பட்டு மதியம் 12 மணி அளவில் திருச்சி வந்த அந்த விமானத்தில் அரியலூர் வீரர் சிவச்சந்திரன் உடல் இறக்கப்பட்டது அதன்பின்  தனி விமானத்தில் சுப்பிரமணியன் உடல் மதுரைக்கு வந்து அவரது சொந்த ஊரான சவாலாப்பேரிக்கு ராணுவ டிரக்கில் வந்து சேர்ந்தது. முறைப்படி அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சுத்துப்பட்டு கிராமத்த்தினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். கிராமமக்கள் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனை அடுத்து அவரது உடல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

 

இறுதி அஞ்சலியில் அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய மாநில அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். சுப்பிரமணியனின் உடலை சிஆர்பிஎப்பின் டிஐஜி தலைமையிலான படையினர் கொண்டுவந்தனர். அடக்கத்திற்கு முன்பாக ராணுவ மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கப்பட்டது. அதன்பின் அவர் உடல் மீது போற்றப்பட்டிருந்த தேசியக்கொடி முறைப்படி அவரது மனைவி கிருஷ்ணவேணியிடம் ஒப்படைக்கப்பட்டது. கண்ணீர் சிந்தி கதறி அழுத அவர் பெற்றுக்கொண்டார். அதன்பிறகு அவரது உடல் ராணுவத்தால் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது மணி மாலை 6.30. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

12 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை; மத்திய பாதுகாப்பு படை குவிப்பு

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

nn

 

கேரளாவில் சுமார் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கேரளாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளிலும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் என்.ஐ.ஏ மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். அந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சோதனையின் அடிப்படையில் மீண்டும் கேரள மாநிலத்தில் 12 இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மலப்புரம், எர்ணாகுளம், வயநாடு, திருச்சூர், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 300-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்புடன் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. முன்னாள் நிர்வாகி ஜமால் முகமது, லத்தீப் உள்ளிட்டோர் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்த பிறகும் அதன் நிர்வாகிகள் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் தொடர்புடையவர்களாக இருப்பதாகவும், அவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து உதவிகள் வருவதாகவும் கிடைத்த தகவல் அடிப்படையில் வங்கி கணக்குகள், கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

 

 

 

Next Story

''என் கணவரை ஏன் நல்லா பாத்துக்கல'' - தேசியக் கொடியை ஏந்தியபடி ராணுவ வீரர்களிடம் கேட்ட மனைவி 

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

nn

 

ராணுவத்தில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழந்த நிலையில், சக ராணுவ வீரர்களிடம் 'ஏன் என் கணவரை நன்றாக பார்த்துக் கொள்ளவில்லை' என ராணுவ வீரரின் மனைவி கண்ணீருடன் கேள்வி எழுப்பியது மனதை உறையவைத்தது.

 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ளது மணலி கிருஷ்ணபுரம். இப்பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (34) எல்லை பாதுகாப்புப் படையில் சேர்ந்து கடந்த 15 வருடங்களாக திரிபுராவில் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு சந்தியா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் தற்போது சந்தியா மீண்டும் கர்ப்பமாக உள்ளார்.

 

ஜெகதீஷ் கடந்த ஆறு மாதங்களாக டெல்லியில் கமாண்டோ பயிற்சி பெற்று வந்த நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடல் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. அப்பொழுது சுற்றி இருந்த ராணுவ வீரர்களிடத்தில் 'ஏன் என் கணவரை நீங்கள் நன்றாக பார்த்துக் கொள்ளவில்லை ' எனக் கேட்டது அங்கிருந்த சக ராணுவ வீரர்களைக் கண்ணீரில் மூழ்க வைத்தது.