Skip to main content

சர்கார் சுரண்டல்! தியேட்டர்கள் - விஜய் ரசிகர் மன்றங்கள் கூட்டணி!

Published on 06/11/2018 | Edited on 06/11/2018

‘படிப்பது ராமாயணம்; இடிப்பது பெருமாள் கோயில்’ என்ற வசனம் திரைத்துறையினருக்கு மிகச் சரியாகவே பொருந்தும். சர்காருக்கும், ஏ.ஆர்.முருகதாஸுக்கும், விஜய்க்கும்கூட இது வெகு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. எப்படி தெரியுமா?

 

sarkar theater



‘ராஜபாளையத்தில் ரூ.600-க்கு சர்கார் டிக்கெட் விற்கின்றனர். அதனால், திருட்டுத்தனமாக திரைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் தமிழ்ராக்கர்ஸை நான் வாழ்த்துகிறேன்!’ என்று ஃபேஸ்புக்கில்  உறுமியிருக்கிறார் அய்யனார் பாண்டியன்.

மதுரையில் சர்கார் திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால், தியேட்டர் உரிமத்தை ரத்து செய்யலாம். அதனால், சர்கார் திரையிடும் தியேட்டர்களில் கட்டணம் குறித்து தணிக்கைக்குழு ஆய்வு செய்யவேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

sarkar black ticket



சட்டத்தை எந்த அளவுக்கு விஜய் ரசிகர்கள் மதிக்கின்றார்கள்? சிவகாசியில் சர்கார் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் கணேஷ், பாலகணேஷ், ஸ்ரீபழனியாண்டவர் தியேட்டர்களை ‘ரவுண்ட்’ அடித்தோம்.

நேரடி அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதற்காக, கணேஷ் தியேட்டர் வாசலில் பிளாக்கில் மதியம் 2-30 காட்சிக்கு டிக்கெட் விற்றுக்கொண்டிருந்த விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த  தங்கேஸ்வரனிடம் இரண்டு டிக்கெட் கேட்டோம். “ஒரு டிக்கெட் விலை ரூ.400.. இரண்டு டிக்கெட்டுக்கு ரூ.800 கொடுங்க.” என்றார் சாதாரணமாக. ‘என்னங்க இது அநியாயமா இருக்கு. நாட்டைத் திருத்தணும்; மக்களைத் திருத்தணும்னு சினிமாவில் சொல்கிறார் விஜய். அதற்கு நேர்மாறாக அல்லவா அவருடைய ரசிகர்களாகிய நீங்கள் நடந்துகொள்கின்றீர்கள்.’ என்றோம். “சார்.. ரொம்ப பேசாதீங்க.. ரெண்டு நாளும் தியேட்டரில் கவுண்டரில் டிக்கெட் தர மாட்டாங்க. நாங்கதான் விற்போம். ஒரு டிக்கெட்டுக்கு ரூ.350-ஐ தியேட்டர்காரர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். மீதி 50 ரூபாய்தான் ரசிகர் மன்றத்துக்கு.” என்றார்.

 

sarkar tweet

 

ranee theater tweet



கணேஷ் தியேட்டர் சூபர்வைஸர் சக்கரவர்த்தியிடம் ‘ரசிகர் ஷோ என்றால் முன்பெல்லாம் ஒரே ஒரு ஷோதான் ஒதுக்குவீர்கள். இதென்ன இரண்டு நாட்களுக்கு அத்தனை காட்சிகளும்? அதுவும் இந்த அநியாய கட்டணத்தில்?’ என்று கேட்டோம். “அதையெல்லாம் உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார் அலட்சியமாக.

ஸ்ரீபழனியாண்டவர் தியேட்டர் மேனேஜர் நம்மிடம் “சி.எல்.என். பிக்சர்ஸ் நிறுவனம், சர்கார் திரைப்படத்துக்கு இரண்டு நாட்களும் 10 காட்சிகளுக்கான டிக்கெட்டை வெளியில் விற்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறது. அதன்படி செயல்பட வேண்டியதாயிற்று” என்றார்.

 

vijay manram jegan

ஜெகன்



விருதுநகர் மக்கள் இயக்கத்தின் விருதுநகர் மாவட்ட செயலாளர் ஜெகன் நம்மிடம் “வருடம் முழுவதும் எவ்வளவோ நற்பணிகளைச் செய்கிறோம். வருடத்துக்கு ஒரு விஜய் சினிமாதான் வருகிறது. பழனியாண்டவர் தியேட்டரில் டிக்கெட் கட்டணம் ரூ.400 கிடையாது. ரூ.250-க்கே கிடைக்கிறது. ராஜபாளையத்தில் ரூ.600-க்கு டிக்கெட் விற்பது எனக்குத் தெரியாது” என்றார். ‘இது ஒருவகையில் மக்களைச் சுரண்டுவதாக அல்லவா இருக்கிறது?’ என்று கேட்டபோது, அவரிடம் பதில் இல்லை.
 

saravanan vijay fan

சரவணன்



கூடுதல் விலைக்கு நான்கு டிக்கெட்டுக்களை வாங்கிய சரவணன் என்ற குடும்பத்தலைவர் “தியேட்டர்காரர்களோடு கூட்டணி வச்சுல்ல இதைப் பண்ணுறாங்க. கோடி கோடியா சினிமாக்காரங்க விஜய்க்கு கொட்டிக் கொடுக்குறாங்க.   ரசிகர்களோ, பொதுஜனமோ, விஜய் நடிச்ச சினிமாவ முதல் வாரத்துல பார்க்கணும்னா.. டிக்கட்டுக்கு கூடுதலா கொடுக்க வேண்டியிருக்கு. விஜய்ன்னு இல்லை.. எல்லா நடிகர்களும் சினிமாவுல மட்டும்தான் நியாயம் பேசுவாங்க” என்று தன் பங்குக்கு புலம்பினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியரும், சிவகாசி கோட்டாட்சியரும் நம் லைனுக்கு வராத நிலையில், சிவகாசி வட்டாட்சியர் பரமானந்தராஜாவை தொடர்பு கொண்டோம். ‘இங்கே கணேஷ், பாலகணேஷ் மற்றும் ஸ்ரீபழனியாண்டவர் தியேட்டர்களில் பல மடங்கு கூடுதல் பிளாக்கில் விலைக்கு டிக்கெட் விற்கின்றனர். இதற்கு உடந்தையாக இருக்கும் தியேட்டர்கள், கவுண்டரையே திறப்பதில்லை’ என்றபோது, ‘இன்றே நிச்சயம் சர்ப்ரைஸ் விசிட் போகிறேன். பார்வையாளர்களிடம் எவ்வளவு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினீர்கள்? என்று விசாரணை மேற்கொள்கிறேன். நடவடிக்கை எடுக்கிறேன்” என்று உறுதியளித்தார்.

தமிழகம் முழுவதுமே சர்கார் வசூல் வேட்டைதான்!  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''யாரு முயல்? யாரு யானை?''- வழக்கம்போல் குட்டிக்கதை சொன்ன விஜய்

Published on 01/11/2023 | Edited on 02/11/2023

 

"Who is the rabbit? Who is the elephant?''-Vijay told a short story as usual

 

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.

 

இப்படத்தின் வெற்றிவிழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய நடிகர் விஜய் வழக்கம் போல் ஒரு குட்டி கதை சொன்னார். அவர் பேசியதாவது ''இரண்டு பேர் ஈட்டியுடன் வேட்டைக்கு சென்றார்கள். ஒருத்தர் ஈட்டியில முயல அடிச்சு தூக்கிட்டாரு. இன்னொருத்தர் ஈட்டியை வைத்து யானையை எய்ம் பண்றாரு, எய்ம் பண்றாரு மிஸ் ஆயிட்டே போகுது. அப்ப ரெண்டு பேரும் மீண்டும் ஊருக்குள்ள வராங்க. ஒருத்தர் கையில முயலோட வரார். ஒருத்தர் வெறும் கையில் வேலோட வரார். இவங்க ரெண்டு பேத்துல யாரு ஜெயிச்சாங்க'னு நினைக்கிறீங்க. யார் கெத்து'னு நினைக்கிறீங்க.

 

அந்த யானையை எய்ம் பண்ணி தவற விட்டார் இல்ல அவர் தான். இதை நான் ஏன் சொல்றேன்னா நம்மால் எதை ஈசியா ஜெயிக்க முடியுமோ அதை ஜெயிப்பது வெற்றியில்ல நண்பா. நம்மால் எது ஜெயிக்கவே முடியாதோ அதை ஜெயிக்க முயற்சி பண்றோம் இல்ல, அதுதான். உன்னிப்பாக கவனிக்கணும், முயற்சி பண்றோம் இல்ல, அதுதான் உண்மையான வெற்றி. உங்களுடைய குறிக்கோள்; உங்களுடைய லட்சியம்; எல்லாம் பெருசா யோசிங்க, பெருசா கனவு காணுங்க, பெருசா திங்க் பண்ணுங்க, யாரும் அதெல்லாம் யாரும் தவறு'னு சொல்ல முடியாது.

 

பாரதியார் சொன்னது தான் 'பெரிதிலும் பெரிது கேள்' அப்படி இருக்க வேண்டும் உங்கள் கனவுகள்; அப்படி இருக்க வேண்டும் உங்கள் ஆசைகள்; அப்படி இருக்க வேண்டும், உங்கள் உழைப்பு. அப்படி நீங்கள் பயணித்தால் இலக்கை நிச்சயம் அடைவீர்கள். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இடம் இருக்கு நண்பா. ஆசைகள் இருக்கும்; கனவுகள் இருக்கும். ஆனால் எல்லாருக்கும் ஒரு இடம் இருக்கிறது. வீட்ல ஒரு குட்டி பையன் ஆசையா அவங்க அப்பாவோட சட்டையை எடுத்து போட்டுக்குவான். அவரோட வாட்சை எடுத்து கட்டிக்குவான். அப்பாவோட சேர்ல ஏறி உட்கார்ந்துக்குவான். அந்த சட்ட அவனுக்கு செட்டே ஆகாது. தொளதொளனு இருக்கும். வாட்ச் கையிலே நிற்காது. அந்த சேர்ல உட்காரலாமா இல்லையா? அந்த தகுதி எல்லாம் தெரியவே தெரியாது.  அப்பா மாதிரி ஆக வேண்டும் என்று கனவு. இதில் என்ன தவறு. அதனால, பெருசா கனவு காணு நண்பா.

 

தயவு செஞ்சு சொல்றேன் சினிமாவை சினிமாவா பாருங்க. உலகம் முழுவதும் பார்த்தால், சினிமா மக்கள் பார்க்கின்ற பொழுதுபோக்கு அம்சம். அதில் வருகின்ற டயலாக், சீன்ஸ் எல்லாமே முழுக்க முழுக்க ஒரு கற்பனை. முழுக்க முழுக்க ஒரு செயற்கை தனமானது என்பது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம். அப்படி ஒரு சில படங்களில் ஒரு நல்லவன், ஒரு கெட்டவன் இருப்பான். அதை வேறுபடுத்தி காட்டுவதற்கு நீங்கள் என்ன பண்ணுவீங்க. அதற்கு தகுந்த மாதிரி சில காட்சிகள், அதற்கு தகுந்த மாதிரி சில வசனங்களை வைப்பது ஸ்கிரீன் பிளேயில் ஒரு காமனான விஷயம். அப்படி ஒரு சில கேரக்டர்கள் மூலம் சொல்லப்படுகின்ற சில தவறான எண்ணங்கள், ஆக்சன்... நான் உங்களுக்கு சொல்லி புரிய வைத்து அட்வைஸ் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு டெஃபனட்டா தெரியும் நீங்கள் யாரும் அதை ஃபாலோ பண்ண மாட்டீங்க என்று. நீங்கள் எல்லாம் என்ன அவ்வளவு  அன்மெச்சூரா என்ன. நல்ல நல்ல விஷயங்களை எடுத்துக்கோங்க. மற்றதை விட்டுருங்க. திரைப்படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும்''  என்றார்.

 

 

 

Next Story

‘தளபதி 68’ - அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு வெங்கட் பிரபு பதில்!

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

Venkat Prabhu about Thalapathy 68

 

காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற படங்களில் நடித்த சுனைனா முதன்மை கதாபாத்திரமாக நடித்து வெளிவர இருக்கும் படம் ‘ரெஜினா’. இப்படத்தின்  இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. 

 

இதில் பங்கேற்ற இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில் “இந்த ரெஜினா படத்தின் இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான சதீஷ் குமார் எனக்கு ஆரம்ப கால நண்பன். எனது தந்தைக்கு மிகவும் பிடித்த நபர் அதனால் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். இந்தப் படத்தில் நடித்த சுனைனா இதற்கு முன் இப்படி ஒரு பரிமாணத்தில் பார்த்ததே இல்லை . அந்த அளவுக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இருந்தது. இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்” என்றார்

 

மேலும், விஜய்யை வைத்து இயக்கவிருக்கும் தளபதி 68 படத்தின் அப்டேட்டை வெங்கட் பிரபுவிடம் கேட்டபோது  "இப்போது தளபதி 68 படத்தின் அப்டேட்டை கூறினால், விஜய்யே என்னை திட்டுவார். அதனால் லியோ படம் வெளிவரட்டும் அதன்பின்பு தளபதி 68 படத்தின் அப்டேட்ஸ்  கண்டிப்பாக வரும்" என்று கூறினார்.