Skip to main content

சாதனை பலகையே இல்லை……… பிரதீபா படித்த பள்ளியின் அவலம்

Published on 07/06/2018 | Edited on 08/06/2018
prathipa

 

 

விழுப்புரம் மாவட்டம், பெருவளுர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சண்முகம் மகள் பிரதீபா, நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் கடந்த ஜீன் 4ந்தேதி தற்கொலை செய்துக்கொண்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வை தடை செய்ய வேண்டும்மென தமிழகத்தில் குரல்கள் அதிகரித்துள்ளன. தற்கொலை செய்துகொண்ட பிரதீபாவின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு சென்று அஞ்சலிக்காக வைத்தனர். அதிமுகவை தவிர மற்ற அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் அஞ்சலி செலுத்தினர்.

அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்து திண்டிவனம் கல்வி மாவட்ட அரசுப்பள்ளி மாணவர்களில் 10 ஆம் வகுப்பில் 490 மதிப்பெண் எடுத்து முதல் இடத்தை பிடித்தவர் பிரதீபா. அவர் இறந்த அன்று அவர் படித்த பள்ளி எப்படியிருக்கிறது என காணச்சென்றோம்.

பெருவளுர் கிராமத்திற்க்கு வெளியே பசுமை சூழ்ந்த பகுதியில் அமைதியாக இயங்கிக்கொண்டு இருந்தது பெருவளுர் அரசு மேல்நிலைப்பள்ளி. அந்த பள்ளியின் அலுவலகத்துக்கு சென்று பார்த்தபோது, பெரிய அளவில் எந்த அடிப்படை மற்றும் கல்விக்கு தேவையான வசதிகள் இல்லாமல் இருந்தது அதிர்ச்சியாக இருந்தது. அதைவிட அதிர்ச்சி, சாதனை செய்த அந்த மாணவியின் பெயர், சாதனை செய்தவர்களுக்கான பெயர் பலகையில் இருக்கிறதா எனத்தேடினால் பெயர் மட்டும்மல்ல, பெயர் எழுதுவற்கான பெயர் பலகையே அங்குயில்லை. இதுப்பற்றி அங்குள்ள முக்கிய ஆசிரியர் ஒருவரிடம் கேட்டபோது, ரூம் மாற்றும்போது எங்கவச்சாங்கன்னு தெரியல என்றவர் பின்னர் அவரே பெயர் பலகையே எழுதல என்றார். பிரதீபாவின் மதிப்பெண்ணையே பிரண்ட்டவுட் தாளில் பார்த்து தான் கூறினார்.

பள்ளிகளில் முதல் மதிப்பெண், இரண்டாம் மதிப்பெண் எடுத்தவர்களின் பெயர்களை அனைத்து மாணவர்களும் பார்க்கும் வகையில் சாதனை பலகை என ஒன்றை உருவாக்கி அதில், தேர்வு எழுதிய ஆண்டு, முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் எடுத்தவரின் பெயர், அவர்கள் எடுத்த மதிப்பெண் எழுதிவைப்பர். அதற்கு காரணம், அடுத்தடுத்த வருடங்களில் தேர்வு எழுதும் தங்களது பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கவே இப்படி செய்யப்படுகிறது.

கல்வி மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் முதலிடம் பிடித்த பிரதீபா, அதற்கடுத்த வருடங்களில் அதிக மதிப்பெண் எடுத்த பிள்ளைகளின் மதிப்பெண்ணை கூட அந்த பள்ளி அடுத்தடுத்து வரும் பிள்ளைகளுக்கு அறிவிக்காமல் உள்ளதை நினைத்து வேதனையாக இருந்தது.

தனியார் பள்ளிகள், தங்கள் பள்ளி மாவட்டத்தில் முதலிடம் பிடித்தது, மாநிலத்தில் இரண்டாம் பிடித்தது என செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தாலும் பள்ளிகளில் சாதனை பலகையில் பெயர் எழுதி வைத்து பெருமைப்படுத்துவர். அரசுப்பள்ளிகலும் அதனை செய்துவந்தது. தற்போது பெரும்பாலான அரசு பள்ளிகள் அதனை செய்ய மறந்துள்ளது வேதனையாக இருக்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.