Skip to main content

இளம்பெண்ணை கர்ப்பமாக்கி கருவை கலைத்து ஏமாற்றிய சப்- இன்ஸ்பெக்டர்!

Published on 18/10/2019 | Edited on 18/10/2019

மயிலாடுதுறை அருகே உள்ள கிராமத்தைச்சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி, கருவை கலைக்க வைத்ததோடு, இதை வெளியில் சொன்னால் குடும்பத்தோடு வெட்டி சாய்த்து விடுவேன். உனது குடும்பத்தையே சீரழித்துவிடுவேன் என அந்த பெண்ணை மிரட்டும் காவல்துறை உதவி ஆய்வாளரின் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

nagai police sub inspector women connection issue complaint not accept in police

 

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்தவர் சுபஸ்ரீ. தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், தற்போது திட்டச்சேரியில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் தலைஞாயிறு ஓரடியம்புலத்தை சேர்ந்த விவேக் ரவிராஜ் என்பவருக்கும் மணல்மேடு காவல்நிலையத்தில் பணியில் இருக்கும் போது முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு, பிறகு காதலாக மாறி கல்யாணமாகமலேயே குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். 

nagai police sub inspector women connection issue complaint not accept in police

அதோடு இருவரும் தனிமையில் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர். அதன் விளைவாக சுபஸ்ரீ கர்ப்பமானார். இதனை சுபஸ்ரீ சப் இன்ஸ்பெக்டர் விவேக் ரவிராஜ்யிடம் கூறவே, அதிர்ச்சியடைந்த விவேக் ரவிராஜ், அந்த கர்ப்ப விவகாரத்திலிருந்து தப்பித்துக் கொள்ள எண்ணி பல வழிகளில் முடிவு செய்தார். சுபஸ்ரீயிடம் "ஒரு வருடம் கழித்து திருமணம் செய்துகொள்வோம், கல்யாணம் செய்து கொள்ளாமல் கர்ப்பமாகி குழந்தை பிறந்தால் உனக்கும் அவப்பெயர், எனக்கும் பிரச்சனை, இருவரும் ஈருடல் ஓருயிறாக கலந்துவிட்டோம், இனி உன்னை ஏமாற்ற மாட்டேன், என்னை நம்பு என்று கூறி கருவை கலைத்து விடுமாறு வற்புறுத்தியுள்ளார். அதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று  மருத்துவர் மூலம் கருக்கலைப்பும் செய்துள்ளார். 
 

nagai police sub inspector women connection issue complaint not accept in police


 

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதுபோல சுகத்தை அனுபவித்து கைகழுவிய சப் இன்ஸ்பெக்டர், நாளடைவில் சுபஸ்ரீயிடம் பேசுவதை தவிர்த்துள்ளார், இதில் சந்தேகம் அடைந்த சுபஸ்ரீ "என்னை உடனடியாக திருமணம் செய்து கொள் இல்லை என்றால் செத்து விடுவேன்" என கெஞ்சியுள்ளார். இதற்கு கொஞ்சமும் இரக்கம் காட்டாத, அந்த காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் விவேக் ரவிராஜ் தான் மக்களை பாதுகாக்கும் காவல்துறையில் இருப்பதையும், அதன் கவுரவத்தையும் குப்பையில் போட்டுவிட்டு, இனிமேல் என்னிடம் பேசினாலோ, இச்சம்பவத்தை வெளியில் கூறினாளோ, உன்னையும் உன் குடும்பத்தாரையும் கொன்று புதைத்து விடுவேன், இதனால் பத்து தலை விழுந்தாலும், நான் ஜெயிலுக்கு போனாலும் தயங்க மாட்டேன். உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது, நீ என்ன வேனும்னாலும் பன்னிக்கோ" என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

nagai police sub inspector women connection issue complaint not accept in police

மேலும் அந்த ஆடியோவில், திருமணம் செய்து கொள்ளும்படி கதறி அழும் அந்த இளம்பெண் சுபஶ்ரீயையும் அவரது குடும்பத்தையும் கொச்சையான, அறுவறுக்கத்தக்க வார்த்தைகளாலும், ஆபாச வார்த்தைகளால் ஒருமையில் பேசி மிரட்டல் விடுக்கிறார். அந்த ஆடியோக்களில் அடுத்ததுடுத்து சப்- இன்ஸ்பெக்டர் பேசிய வார்த்தைகள் காவல்துறையை தாண்டி பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 
 

உதவி ஆய்வாளரின் பேச்சைக்கேட்டு பயந்துபோன அந்த இளம்பெண் சுபஸ்ரீ, நாகை, மயிலாடுதுறை, சென்னை என ஏறாத காவல்துறை அலுவலகங்களே இல்லை. தன்னை கர்ப்பமாக்கி, கொலை மிரட்டல் விடுத்த திட்டச்சேரி சப்- இன்ஸ்பெக்டர் விவேக் ரவிராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கெஞ்சி மண்டியிடாத காவல்துறை அதிகாரிகளே இல்லை. ஒவ்வொரு இடத்திலும் நான் யாரு தெரியுமா, அமைச்சர் ஓ,எஸ்,மணியனின் உறவுக்காரன், என தனது செல்வாக்கை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்காமல் தடுத்து வருகிறார்.அதோடு மயிலாடுதுறை அதிமுக முக்கிய புள்ளிகளின் உதவியோடு ரவுடிகள் சிலரை சுபஸ்ரீ வீட்டிற்கு அனுப்பி வைத்து, கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என மிரட்டவும் செய்துள்ளார்.
 

nagai police sub inspector women connection issue complaint not accept in police


 

இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரித்தோம், மேலே உள்ள அத்துனைக்கும் ஆடியோ, போட்டோ ஆதாங்களை நம்மிடம் கொடுத்தவர். தன்னை காதலித்து ஏமாற்றியதோடு, சட்டத்திற்கு விரோதமாக கருவை கலைத்தும்,கொலை மிரட்டல் விடுத்துள்ளதற்கும் பத்துக்கும் அதிகமான ஆடியோ ஆதாரங்ளை கொடுத்தப்பிறகும் உதவி ஆய்வாளர் விவேக் மீது காவல்துறை உயர் அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கவில்லை," என கலங்குகிறார். இது தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் விவேக்கை விளக்கம் கேட்க தொடர்பு கொண்டோம். ஆனால் அவரது செல்போன் 'ஸ்விட்ச் ஆப்பில்' இருந்ததாக கூறுகிறது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.