Skip to main content

"இந்திய அரசியலை தன் பக்கம் திருப்பிய கலைஞரின் ஆளுமை வியப்புக்குரியது" - தமிமுன் அன்சாரி

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

makkal jananayaka katchi general secretary thamimun ansari press release about kalaignar festival 

 

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் 3 அன்று தொடங்குகிறது. எளிய பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து; அயராத உழைப்பால் துடிப்பான செயல்பாடுகளால் 60 ஆண்டுக் காலத்திற்கும் மேலாக தமிழக அரசியலில் ஆளுமையை செலுத்தியவர். ஐந்து முறை முதலமைச்சராக இருந்து முக்கிய நிகழ்வுகளில் இந்திய அரசியலை தன் பக்கம் திருப்பிய அவரது ஆளுமை வியப்புக்குரியது. எழுத்து, பேச்சு, கள செயல்பாடு, நிர்வாகம், இலக்கியம், அரசியல், ஆரோக்கியம் பேணுதல் என அவரது பன்முக ஆளுமை பலருக்கும் முன்மாதிரியானவை. அவரது நூற்றாண்டு விழாவை தமிழக அரசு ஓராண்டு காலம் கொண்டாடவிருப்பது அவருக்கு செய்யும் உயரிய மரியாதையாகும்.

 

இந்நிலையில் அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மனிதாபிமானம் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளையும் அவற்றில் இணைத்திட வேண்டும் என்பது எமது விருப்பமாகும். குறிப்பாக தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளை கடந்து நீண்ட காலம் ஆயுள் சிறைவாசிகளாக வாடுபவர்களை; சாதி-மத-வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தமிழக அரசு அமைத்த நீதியரசர் ஆதிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை விரைந்து கேட்டுப் பெற வேண்டும். மேலும், அரசியல் சாசன சட்டம் மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ள 161-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி தமிழக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்ற வேண்டும்.

 

ஏற்கனவே, பேரறிவாளன் உள்ளிட்டோரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கும் நிலையில், சட்டப்படி நிகழ வேண்டிய ஒரு மனிதாபிமான செயலை முறைப்படி செய்திட தமிழக அரசு தயங்க வேண்டியதில்லை. இது போன்றதொரு சட்டத்திற்கு உட்பட்ட மனிதாபிமான நடவடிக்கை என்பது கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு மேலும் புகழ் சேர்க்கும். எமது நீண்ட கால இக்கோரிக்கை என்பது, தமிழகத்திலுள்ள பெரும்பாலான ஜனநாயக சக்திகளின் குரலாகும். இதற்கு பொதுமக்கள் ஆதரவு பெருகி வருகிறது என்பதை அரசு உணர்ந்திருக்கும் நிலையில், இதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்தில் கொள்ள வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்' - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'It is necessary for the India coalition to come to power' - Tamimun Ansari interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை மனிதனை ஜனநாயக கட்சி வெறும் அரசியல் காளமாக இதனைப் பார்க்கவில்லை.

மாறாக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயுமான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம். இந்தியாவுடைய ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்துடைய மாண்புகள், சமூக நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது' என்றார்.