Skip to main content

சிறுவன் கழுத்து அறுத்து கொலை! தாயை ஆபாசமாக திட்டியதால் அத்தை மகன் வெறிச்செயல்!!

Published on 05/02/2019 | Edited on 05/02/2019


சேலத்தில், தாயை ஆபாசமாகத் திட்டியதால் ஆத்திரம் அடைந்த அத்தை மகன், சிறுவனை செங்கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


சேலம் அம்மாபேட்டை திருவிக பாதை முனிசிபல் காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ். ஆட்டோ ஓட்டுநர். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு பிரியங்கா என்ற மகளும், ஆறுமுகம் (15) என்ற மகனும் உள்ளனர். 

 

boy murdered in salem; police investigation

 

சிறுவன் ஆறுமுகத்திற்கு, லேசான மூளை வளர்ச்சி குறைபாடு இருந்து வந்தது. அதனால் ஐந்தாம் வகுப்புக்கு மேல் சிறுவனை பள்ளியை விட்டு நிறுத்திய பெற்றோர், வீட்டிலேயே பராமரித்து வந்தனர்.


பிப்ரவரி 3ம் தேதி மாலையில், அம்மாபேட்டை காவல் நிலையம் அருகே உள்ள அரசுப்பள்ளி வளாகத்தில் ஆறுமுகம் கழுத்து, கை ஆகிய இடங்களில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தார். பள்ளிக்கு விளையாட வந்த சிறுவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஆறுமுகத்தின் பெற்றோருக்கு தகவல் கூறினர்.

 

பதறி அடித்து ஓடி வந்த பெற்றோரும், உறவினர்களும் சிறுவனை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே சிறுவன் இறந்து விட்டதாக கூறினர். 


இதுகுறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

 

சிறுவன் ஆறுமுகத்தின் தந்தையின் தங்கைக்கு 19 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவர், கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். ஆறுமுகம், அந்தக் கல்லூரி மாணவரையும், அவருடைய தாயாரைப் பற்றியும் ஆபாச வார்த்தைகளால் திட்டுவதும், அடிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான். 

 

கடந்த பிப்ரவரி 3ம் தேதியன்றும், சிறுவன் ஆறுமுகம் அதுபோல் ஆபாசமாக திட்டியுள்ளான். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தக் கல்லூரி மாணவர், கீழே கிடந்த செங்கல்லை எடுத்து சிறுவனின் காதில் அடித்துள்ளார். காதில் இருந்து ரத்தம் வெளியேறி, சிறுவன் மயங்கி விழுந்துள்ளார். 

 

அந்த வாலிபர், பிளேடால் சிறுவனின் கழுத்தையும், கையிலும் அறுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்து அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். தலைமறைவாக இருந்த அந்த வாலிபரை பிடித்து தொடர்ந்து விசாரித்து வருவதாக காவல்துறையினர் கூறினர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மண்ணுக்குள் போதைப் பொருள்; தோண்டி அழிக்கும் காவல்துறை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
police discovered and destroyed the wine cellars hidden in the liquor

வேலூர் மாவட்டத்தில்  கள்ளச்சாராயம்  காய்ச்சுபவர்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரிய வகை பேரல்களில் ஊரல்கள் பதுக்கிவைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது,  கள்ளச்சாராயம் காய்ச்சி  லாரி டியூப்கள் மூலமாக நிரப்பி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக முள் புதர்களில்  மறைத்து வைத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் சாராய டியூப்புகளை தோண்டி எடுத்து, அதைக் கீழே கொட்டி அழித்தனர்.

அதேபோல் பேரணாம்பட்டு அருகே சாக்கர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2900 லிட்டர் சாராய ஊரல்களைக் கண்டுபிடித்து கொட்டி அழித்தனர் . இதனால் நடுக்காட்டில் சாராயம் ஆறாக ஓடியது. வழக்கமாக சாராய ஊரல்கள்தான் ட்ரம்களின் ஊரல் போட்டு அதனை மண்ணுக்கு கீழே புதைத்து வைப்பார்கள். போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக இதுபோன்று செய்வார்கள். ஆனால் இப்பொழுது காய்ச்சப்பட்ட சாராயத்தை அதேபோல் செய்கிறார்கள். அதனையும் போலீசார் கண்டறிந்து மண்ணுக்குள் இருந்ததை தோண்டி எடுத்து கீழே போட்டு அழித்தனர்.

காவல் துறையினர் நடத்திய இந்த அதிரடி ரெய்டில், வனப்பகுதிகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2900 லிட்டர் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊரல்களைக் கண்டுபிடித்து நடுக்காட்டில் கீழே கொட்டி அழித்தனர் காவல்துறையினர்.

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.