Skip to main content

10 ஆண்டுகளுக்குப் பிறகு கிராமங்கள் தோறும் பேருந்து வசதி! - அமைச்சர் ஐ.பெரியசாமிக்குப் பாராட்டு!

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
After 10 years, i.Periyasamy has provided bus facility in every village

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் இருக்கும் குட்டத்துப்பட்டி, குட்டத்து ஆவாரம்பட்டி, குஞ்சனம்பட்டி, வெயிலடிச்சான்பட்டி, மைலாப்பூர் ஆகிய கிராமங்களில் பூ விவசாயிகள் அதிகம். தங்கள் விளை பொருட்களை அருகில் உள்ள திண்டுக்கல்லுக்கு கொண்டு செல்ல பேருந்து வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். ஆனால் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு கடந்த திமுக ஆட்சியின் போது வருவாய் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி குட்டத்துப்பட்டி கிராமத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்திக்கொடுத்தார். மேலும் மினி வேன் வசதியும் செய்து கொடுத்தார்.

அதன் பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதோடு மினி வேன்களை இயக்க முடியாமல் செய்துவிட்டனர். கடந்த பத்து வருடங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஐ.பெரியசாமி தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் அதிமுக அரசு பேருந்து வசதி செய்து கொடுக்கவில்லை. அதன்பின்னர் தற்போது மீண்டும் ஆட்சி வந்தவுடன் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் ஏற்பாட்டின்படி தற்போது புதியபேருந்துகள் மீண்டும் குட்டத்துப்பட்டி, குட்டத்து ஆவாரம்பட்டி, குஞ்சனம்பட்டி, வெயிலடிச்சான்பட்டி, மைலாப்பூர் உட்பட கிராமங்கள் தோறும் புதியவழித்தடத்தில் இயங்க ஆரம்பித்து விட்டன.

After 10 years, i.Periyasamy has provided bus facility in every village

புதிய பேருந்து இயக்க விழாவிற்கு ஊர்ப் பெரியதனக்காரர்கள் தலைமை தாங்கினார்கள். பொதுக்குழு உறுப்பினர் டென்னி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுதாசெல்வி ஆரோக்கியமேரி, குட்டத்துப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரோஸ்லின் சந்தானம், அமைப்புசாரா ஓட்டுநர் அணியைச் சேர்ந்த ராஜா, அவைத் தலைவர் மைலாப்பூர் சூசை, தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த மரியசர்ச்சில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர் பெரிய தனக்காரர்கள் பஸ்டெப்போவைச் சேர்ந்த  செயலாளர் லியோரிச்சர்டு, பேருந்து ஓட்டுனர் ஆரோக்கியம், நடத்துநர் காளியப்பன் ஆகியோர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.  அதன்பின்னர் பேருந்து வசதி தொடங்கியது.

இதுகுறித்து குட்டத்துப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் டென்னி கூறும்போது, “தென்பாண்டி சிங்கம் எங்களின் வழிகாட்டி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி எடுத்த நடவடிக்கையின் பயனாக புதிய பேருந்துகள் இயங்கத் தொடங்கி உள்ளன. எங்கள் ஊராட்சி கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் சார்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறினார்!

சார்ந்த செய்திகள்

 

Next Story

நான்கு பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு ; போலீசார் விசாரணை

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
nn

ஈரோட்டில் நான்கு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு சோலார் அருகே வெங்கடேசன் என்பவர் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். வெளியூர்களுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறார். இந்த பேருந்துகள் அதே பகுதியில் இரவு நேரத்தில் நிறுத்தப்படுவது வழக்கம். இதேபோல் மற்ற பேருந்துகளும் அதே பகுதியில் நிறுத்தப்படுவது வழக்கம்.

நேற்று இரவு வழக்கம் போல் பேருந்துகள் நிறுத்தப்பட்டு இருந்தன. நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பேருந்துகள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மூன்று பஸ்களின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்தன. அதேபோல் ஒரு சுற்றுலா வாகனத்தின் கண்ணாடியும் உடைந்தது. இது குறித்து வெங்கடேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக இதுகுறித்து மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டி அல்லது முன் விரதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். நிறுவனத்தில் வேலை செய்த முன்னாள் ஊழியர்கள் மற்றும் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Next Story

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற  அமைச்சர் ஐ.பெரியசாமி!  

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Minister I. Periyasamy congratulated the Chief Minister mk stalin
கோப்புப்படம்

கடந்த 20ஆம் தேதி முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாளில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தில் இறந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து  முதல்நாள் கூட்டத்தொடர் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து  நேற்று  சட்டமன்ற கூட்டத்தொடரில் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியின் மானிய  கோரிக்கையைச் சமர்ப்பித்தார். அதுபோல் மதியம் சமூக நலத்துறை அமைச்சர்  கீதாஜீவன் தனது துறை சார்ந்த மானிய கோரிக்கையைச் சமர்ப்பித்தார்.  

அதைத் தொடர்ந்து இன்று 3வது நாளான ஊரக வளர்ச்சித்துறை  அமைச்சர் ஐ.பெரியசாமியின் மானிய கோரிக்கை சமர்பிப்பதை யொட்டி கிரீன் சாலையில் உள்ள ரோஜா இல்லத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான  ஐ.பெரியசாமியை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மாநகர பகுதி  செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூர்கழக நிர்வாகிகள் உள்பட இருநூறுக்கும் மேற்பட்டோர் அதிகாலையிலேயே அமைச்சர் வீட்டிற்கு மாலைகள் சால்வைகளுடன் வந்தனர். இப்படி அமைச்சரை  வாழ்த்த வந்த கட்சிப் பொறுப்பாளர்களுக்கு அமைச்சர் இல்லத்தில் காலை உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

Minister I. Periyasamy congratulated the Chief Minister mk stalin

அதன்பின் சரியாக 8.15 மணிக்க  அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் இருந்து வெளியே வந்த போது அங்கு  கூடியிருந்த கட்சிப் பொறுப்பாளர்கள் எல்லாம் மாலை, சால்வைகளை கொடுத்து வாழ்த்து பெற்றனர். அதைத் தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி மானிய  கோரிக்கைச் சம்மந்தமாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின்னர் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டு நடப்பு ஆண்டில் தனது துறையில் நடைபெற்ற திட்டப்பணிகளையும், அடுத்த ஆண்டு வரக்கூடிய திட்டப்பணிகள் குறித்து சட்டமன்ற கூட்டத் தொடரில்  தனது மானிய கோரிக்கை மூலம் சமர்ப்பிக்க இருக்கிறார்.