Published on 10/06/2020 | Edited on 10/06/2020
![Nirmala Sitharaman announces Rs 335 crore release for Tamil Nadu](http://image.nakkheeran.in/cdn/farfuture/kxvUnlBbc9kcP29c3bz7hU3JSNbOOROFl7Sdcel0RfI/1591788113/sites/default/files/inline-images/zfXVCB-X_4.jpg)
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் பல கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஐந்தாம் கட்ட பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
2020-2021 ஆம் நிதியாண்டில் அடுத்த தவணையாக தமிழகத்திற்கு 355 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு 6,157 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. கரோனா நெருக்கடி சூழலில் கூடுதல் நிதி ஆதாரமாக இது பயனளிக்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.