Skip to main content

"மத்திய அரசிடம் கிடைக்கக் கூடிய நிதியை பெறக்கூட என்.ஆர்.காங்கிரஸ் அரசு தயாராக இல்லை"-வைத்திலிங்கம் எம்.பி குற்றச்சாட்டு! 

Published on 27/05/2022 | Edited on 27/05/2022


 

"The NR Congress government is not even ready to get the funds available to the central government" -Waithilingam MP accused!

 

புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, " ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து ஓராண்டுக்கு பிறகு புதுச்சேரி அரசு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளது. நான் கேட்டுக் கொண்ட பிறகே  இந்த கூட்டத்தை நடத்தியுள்ளனர். பாராளுமன்றத்திலேயே ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக எம்.பி.க்களையும் அழைத்தே கூட்டம் நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

 

ஆனால், புதுச்சேரியில் நடந்த கூட்டத்தில் 2 எம்.பி.க்களையும்  அழைக்கவில்லை. புதுச்சேரியில் ஸ்மார்ட் திட்டத்தை எங்கே அமல்படுத்துவது? என்பதில் குழப்பம் ஏற்படுத்தியதே தற்போதைய முதலமைச்சர்தான். காங்கிரஸ் அரசு அமைந்த பிறகுதான் தெளிவான முடிவெடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பெற்றோம்.

 

இந்த அரசு அமைந்து ஓராண்டாகியும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக நிதி ஒதுக்கவில்லை. ரூபாய் 160 கோடியிலும் ரூபாய் 41 கோடிக்கு மட்டுமே வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திட்டத்தில் பணியாற்ற அதிகாரிகள் இல்லாததும் ஒரு குறையாகும். பிரதமரின் கிராமப்புற இணைப்பு சாலை திட்டத்துக்கு மத்திய அரசு நிதி தருகிறது. இதில் புதுச்சேரியில் 50 கி.மீக்கு சாலை பணிகள் நடைபெற வேண்டும். இதில் கால்வாசி பணிகள் கூட நடக்கவில்லை. காரைக்காலில் இத்திட்டத்தையே தொடங்கவில்லை.

 

நிதியில்லை என  முதலமைச்சர் தெரிவிக்கிறார். மத்திய அரசிடம் கிடைக்கக் கூடிய நிதியை பெறக்கூட இந்த அரசு தயாராக இல்லை. இனி கடந்த கால அரசைக் குறைசொல்வதை நிறுத்திவிட்டு, உங்கள் அரசு என்ன செய்யப்போகிறது? என கவனம் செலுத்துங்கள்.

 

செயல்படாமல் உள்ள அரசை செயல்படுத்துங்கள். எங்கள் ஆட்சியில் தற்போதுள்ள உள்துறை மந்திரிதான் பவர்புல்லாக இருந்தார். அவரிடம்தான் அனைத்து துறையும்  இருந்தது. எனவே கடந்த ஆட்சியில் திட்டங்களை செயல்படுத்தாதது யார்? என மக்களுக்கு தெரியும்" என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து...” - மல்லிகார்ஜுன கார்கே உறுதி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
State status for Puducherry Mallikarjuna Karke confirmed

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. நாங்கள் என்ன வாக்குறுதி, சொன்னாலும் செய்வோம். ஆனால் பிரதமர் மோடி செய்ய மாட்டார். இதனை காங்கிரஸும், ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மட்டுமே செய்ய முடியும்.

புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூட இடம் பெறவில்லை. நேற்று வெளியான தேர்தல் அறிக்கை புதுச்சேரி மக்களின் எதிர்ப்பார்ப்புகளை அப்பட்டமாக புறக்கணித்துள்ளது. 2024 தேர்தலில் இந்தியக் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு வாக்குறுதியளித்ததை நாங்கள் நிறைவேற்றுவோம் என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் மூடப்பட்ட ஆலைகள் ரேஷன் கடைகள் திறக்கப்படும்” எனப் பேசினார். 

Next Story

கணவன் முகமூடியுடன் களத்தில் இறங்கிய மனைவி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The wife entered the field with her husband masked

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் புதுச்சேரியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தமிழ்வேந்தன் மனைவி, அதிமுக கட்சியினருடன் சேர்ந்து பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவருடைய கணவர் தமிழ்வேந்தனின் முகமூடியை அணிந்தபடி அந்தப் பகுதியில் உள்ள கடைகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''அதிமுகவில் ஒரு புதிய வாய்ப்புக் கொடுத்துள்ளார்கள். ஒரு இளைஞருக்கு வேட்பாளராக வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். அவருக்கு 34 வயது தான் ஆகிறது. அவர் என்னுடைய கணவர் என்பதை விடவும், இளைஞர் ஒருத்தர் தேர்தலில் நிற்கிறார் என்பதே முக்கியம்.
 

அவங்களோட வாக்குறுதிகள் இன்னும் எல்லாருக்கும் போய் ரீச் ஆக வேண்டும் என்பதற்காக நான் வந்திருக்கிறேன். போதைப்பொருளை ஒழிப்பதும், கல்வியை அனைவருக்கும் சமமாக்குவது என்பதுதான் அவருடைய இலக்காக இருக்கிறது. அவருக்கு சப்போர்ட்டாக இங்கு நான் வந்து இருக்கேன். மக்களுக்கு நல்லாவே தெரியும் ஆட்சியில் இருக்கின்ற பாஜகவாக இருக்கட்டும் எதிர்க்கட்சியாக இருக்கட்டும் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. அவர்களுக்கு எதுக்கு இன்னொரு வாய்ப்பு. ஆட்சிக்கு வரும்போது செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் அவர்கள் செய்திருப்பார்கள். ஆனால் எதுவும் செய்யவில்லை. அதனால் தான் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம் அதை செய்வோம் என்று சொல்கிறார்கள். ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியாக இருக்கட்டும் அன்பழகனாக இருக்கட்டும் அவர்கள் ஒரு நல்ல வாய்ப்பை எனது கணவருக்கு கொடுத்துள்ளார்கள்''என்றார்.