Skip to main content

மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக சட்டப்பேரவை நாளை கூடுகிறது!

Published on 13/12/2018 | Edited on 13/12/2018
Legislative assembly meets tomorrow against the construction of the Meghadad dam

 

கர்நாடக அரசு காவிரியில் மேகதாதுவில் அணை கட்டுவதற்காக திட்டமிட்டுள்ளது. அதற்காக  மத்திய அரசும்  அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசின் அம்முடிவுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள்,  அமைப்புகள்  கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

தமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணைக்கான அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும், அனுமதி அளித்த மத்திய அரசுக்கும்,  கர்நாடக மாநில அரசுக்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகம் மட்டுமில்லாது புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டமும் பெரிய அளவில் பாதிக்கும் என்பதால்,  மத்திய அரசுக்கு புதுச்சேரி அரசு தனது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் போராட்டம் நடத்தினர். பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர்.  

 

அதையடுத்து மேகதாது பிரச்சினை குறித்து விவாதிக்க சிறப்பு புதுச்சேரி சட்டமன்ற கூட்டம் நாளை நடைபெறுகிறது.காலை 10 மணிக்கு கூடும் இந்த கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், அதற்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. 

 

இதனிடையே நியமன எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் என்றும்,  வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு இருப்பதாகவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாளை கூடும் சட்டமன்ற கூட்டத்தில் பாஜக நியமன எம்எல்ஏக்கள் கலந்து கொள்வார்கள். அப்போது மத்திய அரசை கண்டித்து கொண்டு வரும் தீர்மானத்தில் அவர்களுடைய செயல்பாடு எப்படி இருக்கும் என்பது நாளை தெரியவரும்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.