Skip to main content

மைக்கெல் ஜாக்சன் தந்தை உயிரிழந்தார் !!

Published on 28/06/2018 | Edited on 28/06/2018
JAC

 

 

 

உலகபுகழ் பெற்ற இசை ஜாம்பவானாகவும் நடனத்தின் புகழ் குறியீடாகவும் இருந்தவர் மைக்கெல் ஜாக்சன். கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி அதிக மயக்க மருந்துகள் எடுத்துக்கொண்டதால் மைக்கெல் ஜாக்சன் உயிரிழந்தார். தற்போது அவரது தந்தை ஜோ ஜாக்சன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.அவருக்கு வயது 89.

 

 

 

அண்மையில் லாஸ்வேகாஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்றுவந்திருந்த ஜோ ஜாக்சன் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். 1965-ஆம் ஆண்டு இவர் உருவாக்கிய ஜாக்சன் பிரதர்ஸ் என்ற இசைக்குழு மூலம் இவரது மகனான மைக்கெல் ஜாக்சன் தனது இசை பயணத்தை ஆரம்பித்தார். அதேபோல் அந்த இசைக்குழுவிற்கு ஜான்சன் 5 என்றும் மைக்கெல் ஜாக்சன் 1966-ஆம் ஆண்டு பெயர் மாற்றினார்.

 

அவரது தந்தை ஜோ ஜாக்சன் ஆரம்பித்த அந்த இசைக்குழுவே மைக்கெல் ஜாக்சனின் வளர்ச்சிக்கும் புகழுக்கும் காரணமானது. இப்படி மைக்கெல் ஜாக்சனின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அவரது தந்தை ஜோ ஜாக்சன் மறைவு மைக்கெல் ஜாக்சன் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

ரத்தான கல்லூரி கலை நிகழ்ச்சி; மொட்டை மாடியில் அமர்ந்து மாணவர்கள் போராட்டம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
 college art show canclelled students protest by sitting on the terrace

சென்னை ராயப்பேட்டையில் உள்ள 'நியூ காலேஜ்' கல்லூரி நிர்வாகம் கலை நிகழ்ச்சிகள் நடத்த மறுப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆண்டுதோறும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள  நியூ காலேஜ் கல்லூரியில் ஆண்டு விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் திட்டமிட்டபடி வழக்கம்போல் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று கல்லூரி நிர்வாகம் கலை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நியூ காலேஜ் மாணவர்கள் மொட்டை மாடி பகுதியில் அமர்ந்து  கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிலும் மாணவர் ஒருவர் ஆபத்து உணராமல் மொட்டை மாடியில் ஆபத்தான பகுதியில் அமர்ந்து போராட்டம் செய்யும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Next Story

உயிரைப் பறிக்குமா 'கார்பா' நடனம்?; அதிர்ச்சி தரும் தகவல்

Published on 22/10/2023 | Edited on 22/10/2023

 

'Garpa' dance can take life; Shocking information

 

நவராத்திரி விழா என்றாலே அதிகம்  களைகட்டுவது வடமாநிலங்கள் தான். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வெகு விமர்சையாக நவராத்திரி விழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த நவராத்திரி விழாக்களில் முக்கியமாக இடம் பெறுவது 'கார்பா' நடனம்.

 

குஜராத்தை பிறப்பிடமாகக் கொண்ட கார்பா நடனம் விடிய விடிய ஆடும் ஒரு வகை நடனமாகும். பாரம்பரிய ஆடைகளுடன் ஆண்கள் பெண்கள் என அனைவரும் இசைக்கு ஏற்ப இடைவிடாமல் விடிய விடிய நடனமாடுவர். இந்த நிகழ்ச்சிக்கு குஜராத் மாநிலத்தில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் அண்மையில் குஜராத்தில் பரோடா மாவட்டத்தில் 'கார்பா' நடனம் ஆடிய 13 வயது சிறுவன் உட்பட 10 பேர் மாரடைப்பால் ஒரே நாளில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இந்த 10 பேரில் 13 வயது சிறுவன் தவிர மற்ற ஒன்பது பேரும் நடுத்தர வயது கொண்டோர் மற்றும் இளைஞர்கள் என்பது தெரிய வந்துள்ளது. நவராத்திரி விழா தொடங்கிய முதல் ஆறு நாட்களில் மாரடைப்பு தொடர்பாக 521 அழைப்புகளும், மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவ சேவைக்காக 108 ஆம்புலன்ஸ் வேண்டும் என 609 அழைப்புகளும் வந்துள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் 'கார்பா' நடன நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு  'கார்பா' நிகழ்ச்சியில் மூன்று பேர் மாரடைப்பால்  உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு அதன் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.