Skip to main content

குரேஷியா, ஜப்பான், பாகிஸ்தான்... ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

Published on 30/12/2020 | Edited on 30/12/2020

 

earth quake croatia

 

உலகின் மூன்று நாடுகளில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குரேஷியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் இத்தாலி வரை உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தில், 7 பேர் பலியாகியிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகிவுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் ஜப்பான் நாட்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 9.35 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளது. சேதங்கள் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.   

 

இவ்விரண்டு நாடுகள் மட்டுமின்றி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், இன்று காலை 11.03 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆகப் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்