Skip to main content

உரிய அவகாசம் கொடுக்கவில்லை; அதிகாரிகள் முன்னிலையில் தீ குளித்த இளைஞர்!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
youth set himself on fire in front of  authorities near Chennai

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பே கல்யாணி என்பவர் சிறு வயதாக இருக்கும்போதே குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் கல்யாணிக்குத் திருமணமான சில ஆண்டுகளிலேயே கணவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கோட்டக்கரையிலேயே தனது இரண்டு மகன்கள் மற்றும் மகளுடன் கல்யாணி வசித்து வந்திருக்கிறார். கல்யாணி சிமெண்ட் கூரை அமைத்து தங்கி இருக்கும் இந்த இடம் செல்வந்தர் ஒருவர் தானமாகக் கொடுத்தாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணி வீட்டின் பின்புறம் புதிதாக உருவாக்கப்பட்ட வீட்டுமனையில் குடியேறிய சிலர் தங்கள் குடியிருப்புக்குச் செல்லும் பாதையில் ஆக்கிரமித்து கல்யாணி குடும்பத்தினர் வீடு கட்டி இருப்பதாகப் புகார் கொடுத்துள்ளனர். இதன் பேரில் அப்போதைய வட்டாட்சியர் கண்ணன் நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்ட போது அந்த இடம் தானமாகக் கொடுத்த தனி நபர் ஒருவரின் பெயரில் பட்டா இருப்பதாகக் கூறி சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் பிரச்சனையை நீதிமன்றம் சென்று தீர்த்துக்கொள்ளுமாறு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தான் கடந்த வாரம் மீண்டும் வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்ற உள்ளதாகக் கூறி கல்யாணிக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்யாணியின் இளைய மகன் ராஜ்குமார் அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்து வீட்டை காலி செய்ய ஒரு மாதக்காலம் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் திடீரென கல்யாணியின் வீட்டிற்கு மின்வாரியம் மூலம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காவல்துறையினரின் பாதுகாப்புடன் முன்னறிவிப்பு இன்றி வீட்டை இடிக்க ஜே.சி.பி. இயந்திரத்தை அதிகாரிகள் கொண்டுவந்ததால்,  மன உளைச்சலுக்கு ஆளான ராஜ்குமார் முறையான விசாரணை நடத்தாமல் தங்களுக்கு சொந்தமான நீளத்தை ஆக்கிரமிப்பு எனக் கருதி வீட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். 

இதையடுத்து, வீட்டினுள் இருந்தபடியே அதிகாரிகள் முன்னிலையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு சாலையில் அலறி அடித்தபடி ஓடினார். இதனைக் கண்ட வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் திகைத்து நின்றனர். அப்போது அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள் தங்களது கையில் வைத்திருந்த தீயணைப்பான் கருவி மூலம் தீயை அணைத்து, 60% தீக்காயங்களுடன்  உயிருக்குப் போராடிய ராஜ்குமாரை மீட்டு அருகிலேயே உள்ள கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

பின் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உரியக் கால அவகாசம் வழங்காமல் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகள் முன்னிலையில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தீ குளித்த இளைஞர்; அதிகாரிகளைக் கூண்டோடு தூக்கிய மாவட்ட ஆட்சியர்!

Published on 05/07/2024 | Edited on 07/07/2024
Collector has to transfer the officer of the youth is on fire In Gummidipoondi

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பே கல்யாணி என்பவர் சிறு வயதாக இருக்கும்போதே குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் கல்யாணிக்குத் திருமணமான சில ஆண்டுகளிலேயே கணவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கோட்டக்கரையிலேயே தனது இரண்டு மகன்கள் மற்றும் மகளுடன் கல்யாணி வசித்து வந்திருக்கிறார். கல்யாணி சிமெண்ட் கூரை அமைத்து தங்கி இருக்கும் இந்த இடம் செல்வந்தர் ஒருவர் தானமாகக் கொடுத்தாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணி வீட்டின் பின்புறம் புதிதாக உருவாக்கப்பட்ட வீட்டுமனையில் குடியேறிய சிலர் தங்கள் குடியிருப்புக்குச் செல்லும் பாதையில் ஆக்கிரமித்து கல்யாணி குடும்பத்தினர் வீடு கட்டி இருப்பதாகப் புகார் கொடுத்துள்ளனர். இதன் பேரில் அப்போதைய வட்டாட்சியர் கண்ணன் நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்ட போது அந்த இடம் தானமாகக் கொடுத்த தனி நபர் ஒருவரின் பெயரில் பட்டா இருப்பதாகக் கூறி சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் பிரச்சனையை நீதிமன்றம் சென்று தீர்த்துக்கொள்ளுமாறு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தான் கடந்த வாரம் மீண்டும் வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்ற உள்ளதாகக் கூறி கல்யாணிக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்யாணியின் இளைய மகன் ராஜ்குமார் அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்து வீட்டை காலி செய்ய ஒரு மாதக்காலம் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் திடீரென கல்யாணியின் வீட்டிற்கு மின்வாரியம் மூலம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று(4.6.2024) காவல்துறையினரின் பாதுகாப்புடன் முன்னறிவிப்பு இன்றி வீட்டை இடிக்க ஜே.சி.பி. இயந்திரத்தை அதிகாரிகள் கொண்டுவந்ததால், மன உளைச்சலுக்கு ஆளான ராஜ்குமார் முறையான விசாரணை நடத்தாமல் தங்களுக்கு சொந்தமான நீளத்தை ஆக்கிரமிப்பு எனக் கருதி வீட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். 

இதையடுத்து, வீட்டினுள் இருந்தபடியே அதிகாரிகள் முன்னிலையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு சாலையில் அலறி அடித்தபடி ஓடினார். இதனைக் கண்ட வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் திகைத்து நின்றனர். அப்போது அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள் தங்களது கையில் வைத்திருந்த தீயணைப்பான் கருவி மூலம் தீயை அணைத்து, 60% தீக்காயங்களுடன்  உயிருக்குப் போராடிய ராஜ்குமாரை மீட்டு அருகிலேயே உள்ள கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

பின் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் பணியின் போது கவனக்குறைவாக செயல்பட்டதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ப்ரீத்தி,  ஏளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்விழி கிராம நிர்வாக அலுவலர் பாக்ய ஷர்மா ஆகிய மூன்று பேரையும் பணியிடை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ள மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் சம்பந்தப்பட்ட மூன்று அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே அதிகாரிகளின் அலட்சியத்தால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞருக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும் அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

அதிகாரிகளின் மெத்தனப்போக்கு; பரிதாபமாகப் பிரிந்த இரண்டு உயிர்!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Two passed away in tree falls near Hosur

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சியின் 45-வது வார்டுக்கு உட்பட்டது குஸ்னி பாளையம். இப்பகுதியில், உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே சாலை ஓரம் 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று இருந்தது. 

இந்த நிலையில், கடந்த ஜூன் 26 ஆம் தேதி 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ள சாலை வழியாக கழிவுநீர் அகற்றும் லாரி ஒன்று சென்றது. அப்போது, காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தால் திடீரென பழமையான ஆலமரம் முறிந்து விழுந்தது. இதில், எதிர்பாராத விதமாக கழிவுநீர் அகற்றும் லாரி சிக்கிக் கொண்டது. பிரமாண்ட மரம் விழுந்த வேகத்தில் லாரியின் முன் பகுதியே நசுங்கியதில், கழிவு நீர் லாரியின் உள்ளே இருந்த 2 பேர் சிக்கிக் கொண்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பகுதிவாசிகள் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு மத்திகிரி போலிசார், ஒசூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், ராட்சத மரம் விழுந்ததால் லாரியின் முன்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதனால், உள்ளே சிக்கிய இருவரை மீட்பதில் காலதாமதம் ஏற்பட்டது. 

இருப்பினும், விரைந்து தீயணைப்பு வீரர்கள் ஆலமரத்தை வெட்டி அகற்றும் முயற்சியில் இறங்கினர். சுமார் 2 மணி நேரம் நடந்த மீட்புப் பணியின் பிறகு லாரியின் உள்ளே சிக்கிய இருவரின் உடல் மீட்கப்பட்டது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட இருவரும் உடல் நசுங்கி முன்பே உயிரிழ்ந்தது தெரியவர, மத்திகிரி போலிசார் இருவரின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இறந்தவர்களின் பின்னணி குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இறந்தது பாளையம் பகுதியைச் சேர்ந்த 45 வயதான லாரி ஓட்டுநர் மாரப்பா என்றும், அவருடன் இருந்த மற்றொருவர் அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதான வெங்கடேஷ் என்பதும் தெரிய வந்தது. இருவரும் கழிவுநீர் அகற்றும் வாகனத்தில் வேலை செய்து வருவதும், பணிகளை முடித்துவிட்டு மீண்டும் ஓசூர் நோக்கி கழிவுநீர் வாகனத்தில் சென்றபோது ஆலமரம் விழுந்து உடல் நசுங்கி இறந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், முறிந்த விழுந்த பழமையான ஆலமரம் குறித்து அப்பகுதியினர் 15 நாட்களுக்கு முன்பே வருவாய்த்துறையினருக்கு புகார் அளித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் விசாரணையில் அம்பலமானது. அதிகாரிகள் மெத்தனத்தால் 2 உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இனியாவது ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை கண்டறிந்து அதிகாரிகள் அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடும் மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இறந்தவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதனிடையே, மரம் விழுந்ததில் ஏற்பட்ட இடர்பாடுகளை அதிகாரிகள் சரிசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.