Skip to main content

சரக்குடன் பிடிபட்ட கார்... கடத்திவந்தவர்கள் யார் திருவாரூர் மாவட்ட போலிஸார் திணறல்!!

Published on 06/07/2019 | Edited on 06/07/2019

காரைக்காலிருந்து கடத்தி வரப்பட்ட 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களையும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட காரையும் பிடித்து பறிமுதல் செய்துள்ளனர் திருவாரூர் மாவட்ட காவல்துறையினர்.

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள பேரளம் - காரைக்கால் சாலையில் பண்டாரவாடை என்ற இடத்தில் TN 50 P6498 பதிவு எண் கொண்ட கார் ஒன்று சாலையோர மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகி நிற்பதாக பேரளம் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். உடனே விரைந்து சென்ற காவல்துறையினர் காரின் உள்ளே காயங்களுடன் யாரேனும் உள்ளனரா என கதவை திறந்து பார்த்தபோது உள்ளே மதுபாட்டிகள் கொண்ட பெட்டிகள் மட்டுமே இருந்தது. மொத்தம் 35 பெட்டிகளில் 1680 மதுபாட்டில்கள் இருந்ததும் அவை புதுச்சோி மாநிலம்  காரைக்காலிருந்து கடத்தி வரபட்டதும் தெரிய வந்தது.

wine bottles smuggled in thiruvarur... police investigation


அதனைத் தொடர்ந்து மது பாட்டில்களுடன் காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 1 லட்சம் ரூபாய் இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபாட்டில்களை கடத்தி வரும் போது கார் கட்டுபாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டவுடன் காரையும் மதுபாட்டில்களையும் அப்படியே விட்டு விட்டு தப்பியோடிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து பேரளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தேடி வருகின்றனர்.

கடலிலேக்கூட தண்ணீர் வற்றிப்போகலாம் ஆனால் காரைக்கால் சரக்கு தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி மாவட்டங்களுக்கு கடத்துவதும், விற்பனை நடப்பது நின்றுபோகாது என்கிறார் போலீசார் ஒருவர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.