Skip to main content

கரோனா கால சிறப்பு ஊதியம் எங்கே? கருப்பு பட்டை அணிந்து செவிலியர்கள் போராட்டம்..!

Published on 30/01/2021 | Edited on 30/01/2021

 

Where is the Corona term special pay? Nurses wearing black badge
                    நேற்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம்

 

கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கக் கோரி, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம், கரோனா காலத்தில் அரசு அறிவித்தபடி ஒரு மாத சிறப்பு ஊதியம் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றும் போராட்டத்தை வெள்ளிக்கிழமை (ஜன. 29) முதல் தொடங்கியுள்ளனர். 

 

சேலத்தில், அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடந்தது.

 

இதுகுறித்து, செவிலியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் சுதா, “மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசின் கீழ் பணியாற்றும் செவிலியர்களுக்கும் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் கேட்கிறோம். 

 

கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், முறையாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என நீண்ட காலமாக கேட்டு வருகிறோம். இதுவரை எங்கள் கோரிக்கை மீது அரசு செவி சாய்க்கவில்லை. 

 

கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஒருமாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என அரசுதான் அறிவித்தது. ஆனால், இன்னும் அத்தொகை எங்களுக்கு வழங்கப்படவில்லை. கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றனர். கரோனாவால் உயிரிழந்த செவிலியர்களுக்கு இதுவரை அத்தொகையும் வழங்கப்படவில்லை. 

 

எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தை தொடங்கி உள்ளோம். அதேநேரம், மக்கள் நலன் கருதி எங்கள் பணிக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்தப் போராட்டம் தொடரும்'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சட்டவிரோத கருக்கலைப்பு; ஓய்வு பெற்ற பெண் செவிலியர் கைது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
illegal abortion; Retired female nurse arrested

கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை சட்டவிரோதமான முறையில் தெரிவிப்பவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகங்கையில் ஓய்வு பெற்ற செவிலியர் ஒருவர் கருவில் உள்ளது ஆணா பெண்ணா என்பதை சட்டவிரோதமான முறையில் தெரிவித்து வந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் பலையனூர் பகுதியைச் சேர்ந்தவர் காந்திமதி. இவர் ஓய்வு பெற்ற அரசு செவிலியர் ஆவார். கடத்த ஐந்து ஆண்டுகளாக கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை சட்டவிரோதமான முறையில் பலருக்கு தெரிவித்து வந்த காந்திமதி, இதற்காக 20,000 பெற்றுக் கொண்டு கடந்த 5 வருடங்களாக கருக்கலைப்பிலும் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மருத்துவத்துறை அதிகாரிகள் காவலர்களுடன் அங்கு சென்ற நிலையில், நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மைகள் வெளியே வந்தது. அதனைத் தொடர்ந்து கையும் களவுமாக ஓய்வுபெற்ற செவிலியர் காந்திமதியை போலீசார் கைது செய்தனர்.

Next Story

பிரசவம் பார்க்க ரூ.5 ஆயிரம் லஞ்சம்? - செவிலியர் பணியிடை நீக்கம்

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

nn

 

புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மணமேல்குடி அரசு மருத்துவமனையில், அதேபகுதியைச் சேர்ந்த சரவணன் தனது மனைவி சிந்துவுக்கு பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்திருந்த நிலையில், பிரசவம் பார்க்க செவிலியர் அமுதா ரூ.5 ஆயிரம் கேட்டு சிந்துவின் உறவினர்களுடன் தகராறு செய்ததாக வெளியான வீடியோ வைரலாக பரவியது. 

 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில், இந்த புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்தனர். இந்நிலையில், இன்று திங்கள் கிழமை பிரசவம் பார்க்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து செவிலியர் அமுதாவை பணியிடை நீக்கம் செய்வதாக புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஸ்ரீபிரியா தேன்மொழி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.