Skip to main content

விழுப்புரம் தள்ளுவண்டியில் இறந்து கிடந்த சிறுவனின் மரணத்தில் பல்வேறு திருப்பங்கள்!  

Published on 23/12/2021 | Edited on 23/12/2021

 

Various twists and turns in the death of the boy  in  Villupuram

 

விழுப்புரம் நகரில் கடந்த 14ஆம் தேதி சலவைத் துணி இஸ்திரி போடும் தள்ளுவண்டியில் சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் உயிரற்ற சடலமாக கிடந்தான். இதனை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்துவிட்டு போலீசாருக்குத் தகவல் அளிக்க, போலீசார் விரைந்து வந்து சிறுவனின் உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். 

 

பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவனின் உடலில் எந்தக் காயமும் இல்லை, உணவுக் குழாயில் உணவு எதுவும் தங்கியிருக்கவில்லை. அதனால் சிறுவன் பட்டினியால் இறந்திருக்கலாம் என கூறியுள்ளனர். 

 

இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். தற்போது சலவை தள்ளுவண்டி நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களைப் போலீஸார் ஆய்வு செய்ததில், இரண்டு நபர்கள் விழுப்புரம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே உள்ள காளி கோவில் தெரு வழியாக சிறுவனை தூக்கிக்கொண்டு வந்து, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த சலவை வண்டியில் படுக்கவைத்துவிட்டுச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர். 

 

எனவே அந்தச் சிறுவனை எங்கேயாவது கொலை செய்து இங்கு கொண்டுவந்து போட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் என்றும் அல்லது சிறுவர்களைக் கடத்திச் சென்று பிச்சை எடுக்கவைக்கும் கும்பல் இந்தச் சிறுவனைக் கொண்டுவந்து சாப்பாடு கூட கொடுக்காமல் பிச்சை எடுக்க வைத்திருக்கலாம்; பசி மயக்கத்தில் சிறுவன் இறந்துபோனதால் அவனது உடலை சலவை செய்யும் தள்ளுவண்டியில் கொண்டுவந்து போட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். 

 

இந்தக் குழந்தை யார்? எப்படி இறந்தான்? எங்கிருந்து வந்தான்? அவனது தாய் தந்தை யார்? இப்படி பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் போலீசார் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.