Skip to main content

உலக சாதனை செய்த அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் –வித்தியாசத்தை ஊக்குவிக்கும் கல்வித்துறை

Published on 14/01/2019 | Edited on 14/01/2019
l


தமிழ்நாடு அரசு பொருளாதார ரீதியாக பின் தங்கிய கிராமப்புற ஏழை, எளிய மக்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தரமான ஆங்கில வழிக் கல்வியை வழங்க எல்.கே.ஜீ, யூ.கே.ஜீ வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடங்கியுள்ளது.

 

இதனை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரிவிக்கும் நோக்குடன், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையினை அதிகப்படுத்தவும், தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அரசுப் பள்ளி மாணவர்கள் தனித் திறன்களில் பல்வேறு நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதைப் பறைசாற்றி பொதுமக்களுக்கு அரசுப் பள்ளிகளின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த முடிவு செய்தனர் கல்வித்துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும்.

 

அதற்காக சில வித்தியாசமான முயற்சிகளை, மக்களை ஈர்க்க மாணவ – மாணவிகளை கொண்டு செய்ய முடிவு செய்தனர். அதன்படி, அரசுப் பள்ளியான திருவத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 542 மாணவர்கள் ஒரே நேரத்தில் நாற்காலியில் நடனம் ஆடினார்கள்.

 

2.     பழம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 722 மாணவர்கள் ஒரே நேரத்தில் யோகாசனப் பாடம் கற்றுக் கொண்டார்கள்.

3.     மாமண்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 787 மாணவர்கள் ஒரே நேரத்தில் 10 நிமிடங்களில் காகிதக் கப்பல்களை குழுக்களாக செய்தனர்.

4.     களம்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 621 மாணவர்கள் மனித மூளைப் படங்களுக்கு வண்ணங்கள் தீட்டினார்கள்.

5.     பிரம்மதேசம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 735 மாணவர்கள் இரு பரிமான கணித வடிவங்களை வரைந்து வண்ணங்கள் தீட்டினார்கள்.

6.     களம்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 780 மாணவர்கள் தேக்கரண்டியில் எலுமிச்சையுடன் வாயில் கவ்வி ஒடினார்கள்.

7.     மேல்செங்கம் அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 400 மாணவர்கள் 30 நிமிடங்களில் ஒரிகாமி உருவங்களை  குழுக்களாக செய்தார்கள்.

8.     கீழ்பென்னாத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 525 மாணவர்கள் 30 நிமிடங்களில் ஒரிகாமி இதயங்களை குழுக்களாக செய்தார்கள்.

9.     காட்டம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 368 மாணவர்கள் ஒரே நேரத்தில் சூர்ய நமஸ்காரம் செய்தார்கள்.

10.    தொரப்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 429 மாணவர்கள் வேதியியல் விதிகள் மற்றும் சூத்திரங்களை எழுதினார்கள்.

11.    காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 1106 மாணவர்கள் இரசாயண கலவை விதிகளை எழுதினார்கள்.

12.    வேடியப்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 374 மாணவர்கள் பிதாகரஸ் தேற்றத்தினை எழுதினார்கள்.

13.    வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளயை சேர்ந்த 1502 மாணவர்கள் திருக்குறள் படித்தார்கள்.

14.    மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 347 மாணவர்கள் மேசையில் யோகாசனம் செய்தார்கள்.

 

k

 

10,000 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு பல்வேறு தலைப்புகளில் உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த சாதனை முயற்சியகளால் மாணவ, மாணவிகளின் தன்னம்பிக்கையும், சுயசிந்தனை அதிகரிப்பதுடன், படிப்பினை கற்றுக் கொள்வதில் ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும், அரசு பள்ளிகள் மீதான பார்வை மாறுப்படும் என்னும் நோக்கில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.

 

இதனை உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற வைக்க முடிவு செய்தனர் அதிகாரிகள். அதற்காக ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, உலக சாதனை நிறுவனம், எலைட் உலக சாதனை நிறுவனம் பி.லிட்., இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி உலக சாதனை நிறுவனம், தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் வந்து பார்வையிட்டு சாதனையை அங்கீகரித்தனர்.

 

அதற்கான சான்றிதழை வழங்கும் நிகழ்ச்சி, திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 14 வகையான உலக சாதனை புரிந்ததற்கான சான்றிதழ்களை  14 பள்ளிகளின் மாணவ மாணவிகளின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் க.சு.கந்தசாமியிடம், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, உலக சாதனை நிறுவனம், எலைட் உலக சாதனை நிறுவனம் பி.லிட்., இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி உலக சாதனை நிறுவனம், தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் அங்கீகரித்து அதற்கான சான்றிதழ்களை வழங்கினார்கள். இந்த நிகழ்வில் மாணவ – மாணவிகள், ஆசிரியர் பெருமக்கள், அதிகாரிகள் என அனைவரும் கலந்துக்கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆட்டோ கவிழ்ந்து எல்.கே.ஜி மாணவன் உயிரிழப்பு... ஆட்டோ ஓட்டுநர் கைது!

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

LKG student   incident ... Auto driver arrested!

 

நேற்று தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து எல்.கே.ஜி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

 

நேற்று தூத்துக்குடி மாவட்டம் அனவரதநல்லூர் பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ, எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எல்.கே.ஜி மாணவன் செல்வன் நவீன் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் 7 மாணவர்கள் காயத்துடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் அலட்சியமாக செல்போனில் பேசிக்கொண்டே ஆட்டோவை இயக்கியதாக அதில் பயணித்த மாணவன் ஒருவன் தெரிவித்திருந்த நிலையில், தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநர் அந்தோணி ராஜை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில்  தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுநரை தற்போது கைது செய்துள்ள முறப்பநாடு போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

Next Story

மர்ம காய்ச்சலுக்கு எல்கேஜி குழந்தை பலி; மருத்துவர்களும், அரசுமே காரணம்; குமுறும் உறவினர்கள்

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

சீர்காழி அருகே மர்ம காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனையில் போதிய மருந்து வசதிகள் இல்லாததால் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்காவிற்கு உட்பட்ட மீனவர் கிராமமான பழையாரைச் சேர்ந்தவர் ரமேஷ். மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஹரிணி மூன்று வயதேயான அந்த குழந்தை அதே கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார்.

 

dengue fever

 

இந்தசூழலில் ஹரிணிக்கு காய்ச்சல் ஏற்பட்டு கடந்த இரண்டு நாட்களாக சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் மருத்துவர்கள் பற்றாக்குறை, அலட்சியம், என சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இரண்டு நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை ஹரிணிக்கு, எந்த குழந்தைகள் நல மருத்துவரும் வந்து பார்க்கவுமில்லை, சிகிச்சை அளிக்கவுமில்லை, அதோடு ஞாயிற்றுக்கிழமை என்பதால் மருத்துவர்களும் யாரும் வராததால் சிகிச்சை அளிக்க யாருமில்லை, செவிலியர் மட்டுமே அவ்வப்போது வந்து சிகிச்சை அளித்துள்ளார், ஆனாலும் சிகிச்சை பலினில்லாமல் ஹரிணி காய்ச்சலால் துடியாய் துடித்தவர் திங்கட்கிழமை காலை அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

" போதிய சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவமனை அலட்சியம் செய்ததால் எங்களின் குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குமுறுகின்றனர்.

 

dengue fever


அவர்கள் மேலும் கூறுகையில்," ஹரிணிக்கு என்ன காய்ச்சல் என்று கூறாமல் இரண்டு நாட்களாக என்ன மருத்துவம் அளிக்கப்பட்டது என்பதையும் தெரிவிக்காமல் நோட்டு பேப்பரை கிழித்து அதில் சீல் வைத்து குழந்தை உயிரிழந்ததாக மருத்துவமனை மருத்துவர் சான்று அளித்துள்ளார். இறந்த குழந்தையை வீட்டிற்கு எடுத்து செல்ல கூட மருத்துவமனையில் அமரர் வாகனம் தரமால் தனியார் வாகனத்தை வாடகைக்கு எடுத்துவந்து பிஞ்சு குழந்தையின் உடலை எடுத்து வந்தோம். திருச்சி அருகே உள்ள திண்டுக்கல்லில் ஒரு குழந்தை குழாயில் விழுந்து இறந்தது, அந்த குழந்தையும் எங்கள் குழந்தைதான் ஆனாலும் சில ஆதங்கத்தைக்கூறிதான் ஆகவேண்டும்,  அந்த குழந்தையை மீட்க பலகோடி ஒதுக்கீடு செய்து தமிழக அமைச்சர்கள் முழுவதும் சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் கூடி நின்று சிதைந்துபோன உடலை அள்ளிக்கொடுத்தாங்க அதை நாங்கள் கண்ணீரோடு பார்த்து அழுதோம், ஆனால் நல்லபடியா விளையாடிய குழந்தை சாதாரண  காய்ச்சலால் சிகிச்சைக்கு அரசு மருத்துமனைக்கு அழைத்துவந்து பினமாக தூக்கிசெல்கிறோம், இவங்க உயிரெல்லாம் உயிரில்லையா, இதுபோல நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் எத்தனைக் குழந்தைகள், எவ்வளவுபேர் தவிக்கிறாங்க அவங்களுக்கு உரிய மருத்துவ வசதிசெய்துகொடுக்காத அரசு என்ன நல்ல அரசாக இருக்கமுடியும், எங்கள் குழந்தை ஹரிணி போயிடுச்சி இனி அவரை போல மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்துள்ள குழந்தைகளை காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று பொறிந்து தள்ளினர்.