Skip to main content

கந்தவிலாஸ், சித்தநாதன் பஞ்சாமிர்த கடை உரிமையாளர்களின் வீடுகளில் மூன்றாவது நாளாக சோதனை!

Published on 31/08/2019 | Edited on 31/08/2019

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கந்தவிலாஸ் மற்றும் சித்தநாதன் பஞ்சாமிர்த கடைகளில் கடந்த 29 ஆம் தேதி காலை முதல் இந்த இரண்டு கடைகளிலும் தலா 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த சோதனை மூன்றாவது நாளாக தொடர்ந்து வருகிறது.

 

third day raids on Kandhavilas, Siddhanathan Panchamrita shop

 

வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. தற்போது அந்த இரு நிறுவன உரிமையாளர்களின் குடோன், வீடு, தாங்கும் விடுதி, தோட்டத்து வீடுகளில்  வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்