Skip to main content

அரசுப் பள்ளியில் அடிப்படை வசதி இல்லை; வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்!

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
students boycotted lass and protested for basic facilities in govt schoo

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த பென்னாலூர் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை 313 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த ஒரு மாத காலமாக முறையான குடிநீர் வசதியும் கழிப்பிட வசதியும் இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் கூறினாலும் அவர் மாணவர்களைத் தரைக்குறைவாக பேசுவதாக குற்றம் சாட்டி மாணவர்கள் இன்று காலை வகுப்புகளைப் புறக்கணித்து அடிப்படை வசதிகள் நிவர்த்தி செய்து தர வேண்டும் எனக் கூறி பள்ளி நுழைவுவாயில் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்பள்ளிக்கு 2021-2022 ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்த ஜீவா பணியாற்றிய காலகட்டத்தில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் குறைந்து வருவதாகவும் 2021-2022 பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 96 சதவீதமாகவும், 2022-2023 ஆண்டு 88 சதவீதமாகவும் 2023-2024 ஆண்டு 80 சதவீதமாகவும் குறைந்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 2021-2022 ஆண்டு 96 சதவீதமாகவும் 2022-2023 ஆண்டு 81 சதவீதமாகவும் 2023-2024 ஆண்டு 77 சதவீதமாக அவர் பணியில் சேர்ந்த பின்னர் தேர்ச்சி விகிதம் வெகுவாக குறைந்துள்ளதாகவும் . தலைமையாசிரியர் மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் மத்தியில் தரக்குறைவாக நடந்து கொள்வதாகவும், இதனால் இப்பள்ளியில் பணியாற்றிய 12 ஆசிரியர்கள் பணியிடம் மாற்றம் கேட்டு சென்றிருப்பதால் மாற்றாக ஆசிரியர்கள் நிரப்பப்படாததால் 24 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 12 ஆசிரியர்கள் இருப்பதால் மாணவர்கள் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

குறிப்பாக இப்பள்ளி ஆந்திரா எல்லையொட்டி அமைந்திருப்பதால் தெலுங்கு பேசும் மாணவர்கள் வசதிக்காக ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு மொழி பாடப்பிரிவு நடத்தப்பட்டு வருகின்றன. ஆந்திரா மாநிலத்தில் உள்ள அழகிரிப்பேட்டை, ஸ்ரீராமபுரம், மலகுண்டா, பங்காளம், கொடியம்பேடு, ஆகிய கிராமங்களில் இருந்து மாணவர்கள் தெலுங்கு தாய் மொழி பாடப்பிரிவு எடுத்து பயின்றவருகின்றனர். 

students boycotted lass and protested for basic facilities in govt schoo

கடந்த ஆண்டு ஒரே ஒரு மாணவர் தெலுங்கு பாடப்பிரிவு பயின்ற நிலையில் இந்தக் கல்வி ஆண்டில் தெலுங்கு மாணவர்கள் யாரும் சேரவில்லை. பள்ளியில் கல்வித்தரம் வெகுவாக குறைந்து வருவதால் பெற்றோர்கள் மாணவர்களை வேறொரு பள்ளியில் சேர்த்து வருவதால் அப்பள்ளியின் மாணவர்கள் சேர்க்கை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் 450 ஆக இருந்தது. அது இந்தக் கல்வி ஆண்டில் 300 ஆக வெகுவாக குறைந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரனிடம் இது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மேற்கொண்ட பிரச்சினைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பெயரில் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலந்து சென்றனர் இந்தப் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை; தத்ரூபமாக செய்து காட்டிய தீயணைப்புத்துறை

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
fire prevention drill at school; The fire department that did it realistically

ஈரோடு அரசுப் பள்ளியில்  தீ தடுப்பு ஒத்திகை தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக செய்து காட்டினர்.

ஈரோடு காளை மாடு சிலை அருகில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பள்ளியில் ஈரோடு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் சார்பில் தீ விபத்து தற்காப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பள்ளியில் தீ விபத்து ஏற்படும் போது தீயணைப்பு கருவிகளை எப்படி பயன்படுத்தி தீயை அணைப்பது, தீ ஏற்படும் போது தற்காத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகள், செயல்முறைகளை தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

fire prevention drill at school; The fire department that did it realistically

மேலும் பள்ளியில் தீ விபத்து நேரத்தில் மயக்கம் ஏற்பட்ட மாணவர்களை மீட்டு உடனடியாக முதலுதவி செய்து மருத்துவச் சிகிச்சைக்கு கொண்டு செல்வது போன்ற செயல்களை மாணவர்களுக்கு தத்ரூபமாக தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தது மாணவர்களை வியக்க வைத்தது. மேலும் பேரிடர் நேரத்தில் அரசு பின்பற்ற சொல்லும் வழிமுறைகள் பின்பற்றுவது குறித்து துண்டுப் பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கினர்.

Next Story

அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த மெத்தனால்; மதுவிலக்கு போலீசார் அதிரடி!

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
incident of Private Warehouse in Vadaperumbakkam Village Tiruvallur Dt

கள்ளக்குறிச்சியில் 50க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் வடபெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் கிடங்கு ஒன்றில் கள்ளத்தனமாக சாராயம் தயாரிக்க பயன்படுத்தும் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்தக் கிடங்கின் ஒரு அறை பூட்டப்பட்டு இருந்தது. அதன் பூட்டை வெல்டிங் வைத்து அறுத்து உள்ளே சென்று பார்த்தபோது, சுமார் 1500 லிட்டர் மெத்தனால் ரசாயன கலவை கலன்களில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர்  அங்கிருந்த மெத்தனாலை பறிமுதல் செய்தனர்.

மேலும் அனுமதி இன்றி தடை செய்யப்பட்ட மெத்தனால் ரசாயன கலவையைப் பதுக்கி வைத்திருந்ததாகக் கௌதம், பரமசிவம், ராம்குமார், பென்சிலால் ஆகிய நான்கு நபர்களை கைது செய்தனர். அவர்களிடம், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் வினியோகம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாதேஷ் என்பவர் உடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.