Skip to main content

ஊரக உள்ளாட்சி தேர்தல்...வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு...!

Published on 16/12/2019 | Edited on 16/12/2019

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களை தவிர்த்து டிசம்பர் 27, 30-ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும் வேட்புமனு தாக்கல் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 16ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

 

 local body election-Nomination filing completed today

 



இந்நிலையில் வேட்புமனு தாக்கலுக்கு இன்றுடன் கடைசி நாள் என்பதால், நேற்று வேட்பாளர்கள் போட்டி போட்டு வேட்புமனுத்தாக்கல் செய்தனர். இன்றும் அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 17-ந்தேதி நடக்க உள்ளது என்பதும், வேட்புமனுவை திரும்பப்பெற 19-ந்தேதி கடைசி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். பின்னர் டிசம்பர் 27ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். 

சார்ந்த செய்திகள்