Skip to main content

வனத்துறை அலுவலர்கள் அடாவடி வசூல்; வைரலாகும் வீடியோ 

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Forest officials taking bribes from loggers

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வேலூர் மண்டல வன பாதுகாப்பு படை அலுவலராக மூர்த்தி பணியாற்றி வருகிறார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வன பாதுகாப்பு படையில் பணியாற்றி வரும் இவர் பல இடங்களில் தனது வசூல் வேட்டையில் கைவரிசை காட்டி உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, நிம்மியம்பட்டு, ஆலங்காயம், ஏலகிரி, புதூர்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சமூக விரோதிகள் மரங்களை வெட்டி செல்கின்றனர். இதனைத் தடுக்கும் அதிகாரியான மூர்த்தி, உடன் இருக்கும் வனவர் ஜோதி மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோரை கை பாகையாக வைத்துக் கொண்டு தீவிர வசூல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளார்.

அது மட்டும் அல்லாமல் தன்னுடைய வசூல் சாம்ராஜ்யத்தைப் பயன்படுத்தி வாகனத்தில் வெட்டப்பட்ட மரங்களை வியாபாரத்திற்கு எடுத்துச் செல்லும் நபரிடம் பகிரங்கமாக மாமூல் கேட்டது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேஞ்சருக்கு மட்டுமில்ல எங்களுக்கும் கொடுக்கணும், மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். அதேபோல வேறு ஒரு நபரிடம் 3000 ரூபாய் லஞ்ச பணத்தை வாங்கி தனது பர்சில் வைக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“ஒரு ரூபா கூட கொடுக்கல...” - லஞ்சம் கேட்கும் மின்வாரிய அலுவலர் 

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
electricity board officer asks for lakhs from the people

வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அருகே உள்ள பசுமாத்தூர் கிராம அம்பேத்கர் தெருவில் உள்ள ஒரு மின் கம்பம் சேதமடைந்துள்ளது. மின்கம்பத்தை மாற்றித் தரக்கோரி அப்பகுதி மக்கள் மின் நுகர்வோர் சேவை மைய வாட்ஸ் அப் எண்ணிற்குப் புகார் தெரிவித்துள்ளனர்.

பின்னர், மின்வாரிய ஊழியர்கள் சேதமடைந்த மின்கம்பத்தினை மாற்றி புதிய மின்கம்பத்தை நிறுவியுள்ளனர். அதன் பின்னர் அம்மனாகுப்பம் மின்வாரிய அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக பணிபுரியும் பஞ்சாட்சரம் என்பவர் பொதுமக்களிடம் பணம் கேட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. 

அந்த வீடியோவில், கம்பம் மாற்றியதற்கு ஒரு ரூபா கொடுக்கல... நாளைக்கு திடீர்னு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் நாளைக்கு வந்து செய்ய முடியுமா? இந்த கம்பத்தில் இருந்து ஆறு வீடுகளுக்கு லைன் போகுது. நான் செலவு செய்தவரை கொடுங்கள். 300 ரூபாய் போட்டு ஆறு வீட்டுக்கு வாங்கி கொடுங்கள் என்று  பேசி முடித்துவிட்டு வாகனத்தை எடுத்துச் செல்வது பதிவாகியுள்ளது. 

இது குறித்து குடியாத்தம் மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடாஜலபதியிடம் பேசியபோது, "விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட மின் பாதை ஆய்வாளரிடம் விளக்கம் கேட்கப்பட்ட பிறகு துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்," எனக் கூறினார்.

Next Story

சார் பதிவாளர் வீட்டில் புதைக்கப்பட்ட பணம்; லட்சக்கணக்கில் தோண்டி எடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
13 lakhs in cash, documents were seized from house of subRegistrar

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று இரவு வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இரவு 7.30 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை நடைபெற்ற திடீர் சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தத் திடீர் சோதனையின் போது வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் உள்ளே பணத்தோடு இருந்ததும் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் காட்பாடி சார் பதிவாளர் (பொறுப்பு) நித்தியானந்தத்துக்கு சொந்தமான திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் உள்ள வீட்டில் காலை முதல் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்ட நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாத 13 லட்சத்து 97 ஆயிரம் ரொக்கப்பணம், 80 சவரன் தங்க நகைகள் தொடர்பான ஆவணங்கள், வங்கி கணக்குகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதில் 12 லட்சம் ரூபாய் ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீட்டுக்கு பின்புறம் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வேலூரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

13 lakhs in cash, documents were seized from house of subRegistrar

மேலும் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில், காட்பாடி வட்டத்துக்கு உட்பட்ட சுமார் 200 ஏக்கர் அரசு நிலத்தை பத்திர பதிவு செய்ய முயன்றதாக 262 முறையற்ற பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.