Skip to main content

செவிலியர்களை கண்டு அலறும் பயிற்சி மருத்துவர்கள் ! அரசு மருத்துவமனை கூத்து ! 

Published on 09/11/2018 | Edited on 09/11/2018

 

ட்ர்ய்

 

கி.ஆ.பெ. மருத்துவகல்லூரியில் படிக்கும் மாணவர்களில் பயிற்சிக்காக திருச்சி அரசு  மருத்துவனையில் பயிற்சி மருத்துவ மாணவர்களாக சுமார் 150 பேர் வேலை செய்கிறார்கள். இவர்கள் ஒரு வருடம் மருத்துவமனை வளாகத்திலேயே தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பார்கள். கிட்டதட்ட இவர்களால்தான் அரசு மருத்துவமனை இயங்குகிறது.

 

பயிற்சி மருத்துவர்கள் தொடர்ச்சியாக அரசு மருத்துவமனைகளில் 36 மணிநேரம் வேலை பார்க்கிறார்கள். இவர்களுக்கு ஓய்வு நேரம் என்பது அரை மணி நேரம் தான் இருக்கும்.   எனவே இவர்களுக்கு உதவியாக மருத்துவமனையில் உள்ள சீனியர் செவிலியர்கள் பயிற்சி மருத்துவர்களுக்கு உதவியாக மருந்து மாத்திரைகள் கொடுப்பது இவர்களின் வேலை. ஆனால் தற்போது அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் நர்சுகள், அங்கு பணியில் உள்ள பயிற்சி டாக்டர்களுக்கு போதிய ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்கிற புகார் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. ஆனால் இதுவரை நேரடியாக புகாராக கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. காரணம் இந்த சீனியர் நர்ஸ் பலபேர் இங்கு உள்ள சீனியர் மருத்துவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால் இவர்களை பகைத்தால் நமக்கு கிடைக்க வேண்டிய மதிப்பெண்கள் இழக்க வேண்டியிருக்கும் என்பதால் இவர்கள் இதுவரை புகார் கொடுக்காமல் இருந்திருக்கிறார்கள். 

 

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகள் சிலரை சாதாரண வார்டுக்கு மாற்றுமாறு அங்கு பணியில் இருந்த நர்சு ஒருவரை, பயிற்சி டாக்டர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த நர்சு, பயிற்சி டாக்டரை வாடா...போடா என மரியாதை இல்லாமல் பேசியும் “உன் வயதுதான் என் பணிஅனுபவம். என்னையே வேலை செய்ய சொல்றீயா” என மிரட்டியிருக்கிறார். மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும் பயிற்சி மருத்துவர்கள் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த பேச்சு அவர்களுக்கு மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நர்சு மன்னிப்பு கேட்கும்வரை பணி செய்வதில்லை என அரசு பயிற்சி டாக்டர்கள் அனைவரும் பணியை புறக்கணித்தனர். மேலும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட பயிற்சி டாக்டர்கள் திரண்டு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 


திருச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள், பயிற்சி மருத்துவ மாணவர்களாகிய எங்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்தி வருகிறார்கள். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிற போதுகூட கிளவுஸ், ஊசி மற்றும் மருந்து, மாத்திரைகளை எடுத்து தந்து உதவியாக இருக்க வேண்டியவர்கள் செய்யாமல். நீயே எடுத்து கொள். நீ சொல்வதை கேட்க வேண்டுமா? என்று கேவலமாக பேசுகிறார்கள். இரவு பணியின்போது செவிலியர் ஒருவர் வாடா..போடா.. என பேசி அவமரியாதையாக பேசிவிட்டார். எனவே, அவர் மன்னிப்பு கேட்கும்வரை தர்ணா போராட்டத்தை கைவிட போவதில்லை என்றனர்.

 

பயிற்சி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு விசயத்தை கேள்விப்பட்ட அரசு மருத்துவமனையின் டீன் மற்றும் மருத்துவகல்லூரியின் முதல்வருமான அனிதா இரவு11 மணிக்கு மருத்துவனைக்கு வந்து பயிற்சி மருத்துவர்களிடம் பிரச்சனை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று கடுமையாக பேசி பயிற்சி மருத்துவர்களை அழைத்து சென்றார். 

 

மருத்துவமனை டீன் தன் அதிகாரத்தை பயன்படுத்தி பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்தை கலைத்தாலும் அவர்களின் மனதில் ஏற்பட்டுள்ள இந்த காயத்திற்கு சரியான மருந்து போடாமல் அப்படியே விட்டு விட்டால் அரசு மருத்துவனையின் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படும் என்பது மட்டும் உண்மை.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.