Skip to main content

ஆனி திருமஞ்சன தரிசனம்... சிதம்பரம் நடராஜர் கோவிலில் கோலாகலம்!

Published on 06/07/2022 | Edited on 06/07/2022

 

Ani Thirumanjana darshanam In Chidambaram Nataraja Temple

 

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசன திருவிழா இரண்டு வருடங்களுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக ஆனி திருமஞ்சன விழா கரோனா தொற்றின் காரணமாக நடைபெறவில்லை. தற்பொழுது கரோனா தொற்று குறைந்ததன் காரணமாக விமர்சையாக நடைபெற்றது. ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 

விழாவின் முக்கிய நிகழ்வாக  செவ்வாய் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளிட்ட 5 தனித்தனி தேர்களில் சாமி சிலைகள் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. பின்னர் இரவு தேர் நிலைக்கு வந்த உடன், சுவாமி சிலைகள்  தேரில் இருந்து இறக்கப்பட்டு, கோவில் உள்ளே உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்திருந்தனர். செவ்வாய் இரவு லட்சார்சனை பூஜையும், இன்று காலை மகா அபிஷேகம் நடைபெற்றது.

 

இதைத் தொடர்ந்து நடராஜர், சிவகாமசுந்தரிக்கு சிறப்பு ஆராதனைகள், திருஆபரண அலங்காரம் செய்யப்பட்டு சித்சபையில் ரகசிய பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.  இதைத் தொடர்ந்து மூலவரான நடராஜர், சிவகாமசுந்தரி நடனம் ஆடியபடியே ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இவ்விழாவில் பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தலைமையில் 400-க்கும்  மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

நகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பு குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நகர்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வண்ணம் போக்குவரத்து போலீசார் வழிதடங்களை மாற்றி அமைத்துள்ளனர். ஆனி திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு நகர் பகுதியைச் சுற்றியுள்ள அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

13வது நோன்பு நாளில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Ready-to-eat Biryani to bake on the 13th day of Lent

ஏப்ரல் மாதம் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகின்றனர். சூரியன் உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பர். மாலை 6 மணிக்கு மசூதிக்கு சென்று நமாஸ் செய்துவிட்டு உணவு உண்பார்கள். காலை 5 மணிக்கு முன்பாக உணவு உண்பதை நிறுத்திவிடுவர். நோன்பு காலத்தில் இயலாத மக்களுக்கு மதம் பார்க்காமல் உதவுவார்கள்.

வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச் சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர்.

சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து பிரியாணி தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை பிரியாணி சமைக்கப்பட்டது. இந்தப் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்ட நிலையில், மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.

Next Story

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உழவாரப் பணிகள் குறித்து ஆய்வு

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
 study on tillage work at Chidambaram Natarajar temple

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் கோட்ட பொறியாளர் அசோகன் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் செந்தில்வேலன், மண்டல ஸ்தபதி, கோயில்கள் ஆய்வாளர் உள்ளிட்டவர்கள் அடங்கிய கோயில் உழவாரப் பணிகள் குறித்த நிலையான ஆய்வுக் குழுவினர் கோயிலில் பல்வேறு இடங்களில் கோயில் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது. சுத்தமாக உள்ளதா? என்பது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இவர்கள் தெற்கு கோபுர வாயில், மேல கோபுர வாயில், கோயில் உட்பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். இது குறித்து இணை ஆணையர் பரணிதரன், கோயில்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வு செய்ததாகவும் இது குறித்த தகவலையும் நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கோவில்களில் வெளி பிரகாரங்களில் கழிவு நீர் வெளியேறி துர்நாற்றம் வீசுவதையும், தெற்கு வீதி, கீழ வீதி கோபுரம் அருகில் மாட்டு தொழுவம் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு மாட்டு சாணிகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்காமல் அவதிப்படுவதாக உழவார பணிகள் ஆய்வுக் குழுவினரிடம் தெரிவித்தனர். இந்த கருத்தை ஏற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறினார்கள்.

முன்னதாக ஆய்வுக் குழுவினர் கோயிலுக்கு உள்ளே வரும்போது இது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் இந்து அறநிலையத்துறைக்கும் கோயிலுக்கும் சம்பந்தம் இல்லை. இங்கு உழவார பணிகள் குறித்து ஆய்வு செய்வது கண்டிக்கத்தக்கது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம். இது உள்நோக்கம் கொண்டது என கோயில் தீட்சிதர்களின் செயலாளர் ஆய்வு குழுவினரிடம் கடிதம் அளித்துள்ளார். கோயிலில் உழவார பணிகள் குறித்து ஆய்வு செய்தது கோயிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.