Published on 13/12/2022 | Edited on 13/12/2022
![tngovt](http://image.nakkheeran.in/cdn/farfuture/kWYiRBeRF6qYil7JIK_Ev1iT39b8zByB2lb_fPV4A3g/1670909097/sites/default/files/inline-images/b14_2.jpg)
6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2017, 2018 ஆம் ஆண்டுகளில், குறிப்பிட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்து, தற்கொலைக்கான வாய்ப்பைக் குறைக்கும் வகையில், குறிப்பிட்ட அந்த 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில் மோனோகுரோட்டோபாஸ், புரபனோபாஸ், அசிபெட், புரோபெனோபாஸ்+சைபரமேத்ரின், குளோரோபைரிபாஸ்+சைபர்மெத்ரின் உள்ளிட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது . மேலும், மூன்று சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு நிரந்தரத் தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.