Skip to main content

133 அதிகாரம், 133 மாணவர்கள், 1330 திருக்குறள்... 3 நிமிடங்களில் எழுதி சாதித்த அரசுப் பள்ளி மாணவர்கள்! 

Published on 23/06/2022 | Edited on 23/06/2022
133 chapters, 133 students, 1330 screws ... Government school students who wrote and achieved in 3 minutes!

 

தமிழகத்தில் ஆர்வமுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களை ஏதாவது ஒரு வகையில் சாதிக்கத் தூண்டி வருகின்றனர். இதில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாநிலத்திற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்துள்ளது.

 

அந்த வரிசையில் தான் ஆவணத்தான்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களையும் சாதனை மாணவர்களாக மாற்றி வருகின்றனர் பள்ளி நிர்வாகத்தினர். நெகிழி இல்லாத பசுமைப் பள்ளியாக, ஐ.எஸ்.ஒ தரச்சான்று பெற்ற பள்ளியாக திகழ்கிறது. படிப்பு மட்டுமின்றி ஒழுக்கத்திலும், தனித்திறன்களிலும் சிறந்து விளங்கும் இந்தப் பள்ளிக்குத் தனியார் பள்ளிகளைப் போலத் தனி வாகன வசதியும் உள்ளது.

 

தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் புதிய கல்வியாண்டை வரவேற்கும் விதமாக "திருக்குறள் தொடுப்போம்" என்ற சாதனை நிகழ்வை மாணவர்கள் நிகழ்த்தியுள்ளனர். புதிய கல்வியாண்டைத் தமிழ் மூலம் வரவேற்கும் விதமாக இந்த திருக்குறள் தொடுப்போம் நிகழ்வை நடத்தியிருப்பதாகக் கூறும் ஆசிரியர்களும், மாணவர்களும், "அனைத்து வசதிகளுடன் உள்ள எங்கள் பள்ளியில் ஒவ்வொரு மாதமும் ஒரு நிகழ்வுகள் நடத்துவோம். அதேபோல தான் இந்த கல்வியாண்டை வரவேற்கத் திருக்குறள் தொடுப்போம் நிகழ்வைச் சாதனை நிகழ்வாக நடத்தி இருக்கிறோம். அதாவது உலகப் பொதுமறையான திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களிலும் உள்ள 1330 திருக்குறளையும் ஒரு அதிகாரத்தை ஒரு மாணவர் என்ற அடிப்படையில் 133 அதிகாரத்தையும் 4- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை உள்ள 133 மாணவ, மாணவிகள் 3 நிமிடங்களில் எழுதிச் சாதித்து இருக்கிறார்கள். இதே போன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்துவோம். மேலும் 1,330 திருக்குறளையும் எழுதி ஒப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு திட்டத்தையும் அறிவித்திருக்கிறோம்" என்றனர்.

 

அரசுப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து சாதிப்பார்கள் என்பதற்கு இவர்கள் ஒரு எடுத்துக்காட்டு தான்.


சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 

Next Story

“எனதருமை மாணவச் செல்வங்களே...” - முதல்வர் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Chief Minister Stalin congratulates students appearing for 10th public exam

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது.  செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!  நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.