Skip to main content

திருச்சி எம்.பி.தொகுதி யாரிடம் எப்போது?

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி தமிழகத்தின் முக்கியமான மூன்றாவது பெரிய நகரம் ஆகும். எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது அதன் தலைநகரமாகத் திருச்சியை மாற்றும் திட்டத்தினை வழிவகுத்தார். அரசியல் கட்சிகளின் எதிர்ப்பினால் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

 

tiruchi

 

தமிழகத்தின் ஒரு முனையில் இருக்கும் சென்னையின் தலைமைச் செயலகத்துக்கு, தமிழ்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மக்கள் வருவது சிரமாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தலைமைச் செயலகத்துக்கு எளிதாக வரத் தமிழகத்தின் நடு மையத்தில் இருக்கக்கூடிய திருச்சியை தலைநகரமாக மாற்றவேண்டும் என்று எம்.ஜி.ஆர் கருதினார். இதற்காக 1983-ல் திருச்சியை தலைநகரமாக்கும் திட்டத்தை அறிவித்தார். அதனால் தற்போது வரை திருச்சி அரசியல்கட்சிகளுக்கும், உயர் பதவியில் இருப்பவர்களுக்கு எப்போதும் இது முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருக்கும் என்பதால் மாற்று கருத்து இல்லை. 
 

திருச்சி நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் இருந்த சட்டமன்றத் தொகுதிகள் முசிறி, லால்குடி, திருவரங்கம், திருச்சி1, திருச்சி2, திருவெறும்பூர் ஆகியவையாகும். திருச்சி 1, 2 ஆகியவை திருச்சி கிழக்கு, மேற்கு என மாற்றப்பட்டது. கந்தர்வக்கோட்டை (தனி) புதிதாக வந்தது. லால்குடி, முசிறி நீக்கப்பட்டது. புதுக்கோட்டை இணைந்தது. 
 

தற்போது திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, என 6 சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கியது. 
 

இதுவரை வெற்றிபெற்றவர்கள்:

1951 - மதுரம் - சுயேச்சை. இவர் திருச்சி பிரபலமான மருத்துவர். குடும்பம் தற்போதும் திருச்சியில் புத்தூர் பகுதியில் குருமெடிக்கல் என்று வைத்திருக்கிறார்கள். 

1957 - எம். கே. எம். அப்துல் சலாம் - இந்திய தேசிய காங்கிரஸ்
திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர், புனிதவளனார் கல்லூரியில் படித்தவர். திருச்சி நகராட்சியின் உறுப்பினராக இருந்து பாரளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

1962 - கே. ஆனந்த நம்பியார்- சி.பி.ஐ , 1967 - கே. ஆனந்த நம்பியார் - சி.பி.ஐ

 

anand nambiyar
கே. ஆனந்த நம்பியார்

 

1946 ஆம் ஆண்டில், நம்பியார் மெட்ராஸ் சட்டமன்றத் தேர்தலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946 முதல் 1951 வரை அவர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 1951 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறையிலிருந்து வேட்பாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1951 முதல் 1957 வரை மயிலாடுதுறை அல்லது மாயூராம் மற்றும் 1962 முதல் 1971 வரை திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். தன்னுடைய இறுதி காலத்தை திருச்சியே கழித்து இங்கே தன்னுடைய ஆயுள் காலத்தை முடித்தார். 
 

1971 - மீ. கல்யாணசுந்தரம் -சி.பி.ஐ - 1977 - மீ. கல்யாணசுந்தரம் -சி.பி.ஐ

 

kalyana sundaram
கல்யாணசுந்தரம்

 

மீனாட்சிசுந்தரம் கல்யாணசுந்தரம் (அக்டோபர் 20, 1909 - ஜூலை 27, 1988) இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1952 தேர்தலில் திருச்சிராப்பள்ளி - இரண்டாம் தொகுதியில் இருந்து 1962 மற்றும் 1962 தேர்தல்களில் திருச்சி வடக்கு தொகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்யாணசுந்தரம் 1971 முதல் 1976 வரைக்கும், 1977 முதல் 1980 வரைக்கும், 1980 முதல் 1986 வரையான இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபை உறுப்பினர்களுக்கும் லோக் சபாவின் உறுப்பினராகவும் பணியாற்றினார். இவர் இந்திராகாந்தி, மற்றும் ராஜீவ்காந்தி ஆகியோர் பிரதமராக இருந்தபோது தேர்ந்தெடுக்கப்பட்டவர். 
 

1980 - என். செல்வராஜ் - தி.மு.க
 

selvaraj
செல்வராஜ்

 

திருச்சி மாவட்ட தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சராவார். இவர் 1987 முதல் 1993 வரை இப்பதவியில் இருந்தார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக 1980 - 84-ம் ஆண்டுகளில் இருந்தார்.
 

செல்வராஜ் தி.மு.க சார்பில் 2006 ஆண்டு முசிறி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அ.தி.மு.க. வேட்பாளரான பூனாட்சியை 10,927 வாக்குகளில் தோற்கடித்தார். தி.மு.க. அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக 2006 முதல் 2011வரை இருந்தார். இவர் ஒருவர் மட்டுமே திருச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே திமுக கட்சிகாரர் என்பது குறிப்பிடதக்கது. 

 

1984 - அடைக்கலராஜ் - இந்திய தேசிய காங்கிரஸ்
 

1989 - அடைக்கலராஜ் - இந்திய தேசிய காங்கிரஸ்
 

1991 - அடைக்கலராஜ் - இந்திய தேசிய காங்கிரஸ்
 

1996 - அடைக்கலராஜ் - த.மா.கா.

 

adaikal raj
அடைக்கலராஜ்

 

திருச்சி மக்களவைத் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர்.
 

1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜி.கே. மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரசு சார்பில் போட்டியிட்டு வென்றார். இவர் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இவருடைய மகன் தான் தற்போது ஜோசப்லூயிஸ் காங்கிரஸ் கட்சியில் சீட்டு கேட்டு போராடி வருகிறார். 
 

1998 - ப. ரங்கராஜன் குமாரமங்கலம் - பிஜேபி
 

1999 - ப. ரங்கராஜன் குமாரமங்கலம் - பிஜேபி

 

rangaraj
ரங்கராஜன் குமாரமங்கலம்

 

ரங்கராஜன் குமாரமங்கலம் இந்திய தேசிய காங்கிரசிலும் பின் பாரதீய ஜனதா கட்சியிலும் அமைச்சராகப் பதவி வகித்தார். காங்கிரஸ் சார்பில் 1984-1996 வரை சேலம் மக்களவை உறுப்பினராகவும், பாஜக சார்பில் 1998-2000 வரை திருச்சிராப்பள்ளி மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜீலை 1991- டிசம்பர் 1993 வரை நரசிம்ம ராவ் அரசில் சட்டம், நீதி மற்றும் நிறுவனங்களைக் கையாளும் அமைச்சராகவும் வாஜ்பாய் அரசில் மின் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். திருச்சியில் எம்.பி.யாக இருந்தபோதே இவர் உடல்நலக் குறைவினால் இறந்து போனார். 
 

தலித் எழில்மலை 2001

 

தலித் எழில்மலை இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார். 1998-ல் இரண்டாம் வாஜ்பாய் அரசாங்கத்தின் போது, இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருந்தார். இவர் மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தார். இவர் சிதம்பரம் தொகுதியிலிருந்து 12-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் அதிமுகவில் சேர்ந்தார். 2001 ஆம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் அதிமுகவின், நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 

2004 - எல். கணேசன்- ம.தி.மு.க.
 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூர் கிராமத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தி.மு.க.வின் சார்பில் 1980 ஜூன் 30 ஆம் நாள் முதல் 1986 ஏப்ரல் 10 ஆம் நாள் வரை பணியாற்றினார். 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தளகர்த்தர்களில் முதன்மையானவர். 1971-ல் திமுகவின் மாநில மாணவரணி செயலாளராக பணியாற்றியுள்ளார்.1993-ல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்உருவானபோது இவர் அதன் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது திமுகவில் இணைந்து தேர்தல் பணிக்குழு செயலாளராக பணியாற்றி வருகிறார். 
 

எல்.கணேசன் திருச்சியில் இருந்து ஜெயித்ததினால் தற்போது எம்.பி. தேர்தலில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். கடைசியில் உட்கட்சி குழப்பத்தில் தவிர்க்கப்பட்டு தற்போது ராஜ்ஜியசபா சீட்டு கொடுத்துள்ளார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். 


2009 - ப. குமார் - அதிமுக
 

2014 - ப. குமார் - அதிமு.க
 

kumar

 

ப. குமார் தற்போதைய திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும் ஆவார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த இவர் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டைத் தாலுக்காவில் உள்ள புனல்குளம் என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சட்டத்துறையில் பணியாற்றிய இவர் திருமணமானவர். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். பிப்ரவரி 2014 ஆம் ஆண்டு தான் போட்டியிட்ட அதே திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
அதிமுகவின் உறுப்பினரான ப. குமார் 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாருபாலா தொண்டைமானை 4,335 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 2,98,710 ஆகும். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் அவருடைய கட்சியின் பொதுச்செயலாளரான ஜெயலலிதாவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இத்தேர்தலிலும் ப.குமார் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திராவிட முன்னேற்றக்கழகத்தைச் சேர்ந்த மு. அன்பழகனைவிட அதிக வாக்குகள் பெற்று இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
 

கடைசியாக 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற எம்.பி தேர்தலில் அதிமுக கூட்டணியில் ப.குமார் 4,58,478 தி.மு.க. கூட்டணியில் அன்பழகன் 3,08,002, தே.மு.தி.க. கூட்டணியில் ஏ.எம்.ஜி.விஜயகுமார் 94,785, காங்கிரஸ் சார்பில் சாருபாலா தொண்டைமான் 51,537 ஆகிய வாக்குகளை பெற்றனர்.
 

இறுதி செய்யப்பட்ட திருச்சி எம்.பி. தொகுதியில் உள்ளட்டக்கிய சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள்.
 

ஸ்ரீரங்கம் : 2,91,711, திருச்சி (மேற்கு): 2,57,089, திருச்சி (கிழக்கு): 2,44,662, திருவெறும்பூர்:2,79,937, கந்தர்வகோட்டை - 1,89,106, புதுக்கோட்டை - 2,26,762. ஆக மொத்தம் திருச்சி பாரளுமன்ற மொத்தம் வாக்காளர்கள் 14,89,267.
 

நடக்கவிருக்கும் எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. கட்சியை சேர்ந்த இளங்கோவன். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமான மருத்துவர் என்பதும், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர் என்பதும் கூடுதல் பலம். திருச்சிக்கு புதிய வேட்பாளர் என்பதால் எந்த வித விமர்சனமும் வைக்க முடியாது என்பதே இவருக்கு கொஞ்சம் கூடுதல் பலம். 


அமுமுக கட்சியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் மேயர் சாருபாலா திருச்சி - புதுக்கோட்டை மக்களுக்கு நன்கு அறிமுகமான நபர். இவருக்கு இரண்டு முறை போட்டியிட்ட அனுபவம் இந்த முறை வெற்றிபெற வேண்டும் என்கிற துடிப்பும் தற்போது வேட்பாளர் அறிவிப்பும், அவரை வரவேற்ற அன்றைய தினம் தொண்டர்களின் குதுகலமான மனநிலையே பார்க்கும்போது தெரிகிறது. 
 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் வேட்பாளர் யார் என்பதை தற்போது வரை இழுபறியாக உள்ளது. திருநாவுக்கரசுக்கும் ஜோசப் லூயிசுக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கிறது. திருச்சி தேர்தல் களம் கடுமையான போட்டியை உருவாக்கியுள்ளது. 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மர்மம் விலகாத மாணவியின் மரணம்! சாலை மறியலில் பெற்றோர்! திருச்சியில் பரபரப்பு!

Published on 20/01/2021 | Edited on 20/01/2021
ddd


திருச்சி சமயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனலெட்சுமி இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ கல்லூரியின் மாணவிகள் விடுதியில் ராஜேஸ்வரி என்ற மாணவி மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 


அரியலூர் மாவட்டம் கருப்பூா், பொய்யூா் கிராமத்தை சோ்ந்த விவசாயி ராமையாவின் மகள் ராஜேஸ்வரி இரண்டாம் ஆண்டு இளங்களை பார்மா படிப்பை விடுதியில் தங்கி பயின்று வருகிறார். வழக்கம்போல பொங்கல் விடுமுறைக்கு வீட்டிற்கு சென்று வந்த மாணவி ராஜேஸ்வரி ஞாயிற்றுக்கிழமை  (17.01.2021) மாலை விடுதிக்கு வந்துள்ளார். 

 

திங்கட்கிழமை செமஸ்டா் தோ்வு என்பதால் 18.01.2021 விடியற்காலை 1 மணி வரை சக தோழிகளுடன் அறையில் அமர்ந்து படித்து வந்துள்ளார். இரவு வெகு நேரம் படித்ததில் அவரோடு படித்து கொண்டிருந்த 7 தோழிகளும் அவா்களுடைய அறைக்கு சென்ற நிலையில், அதன்பிறகு ராஜேஸ்வரிக்கு என்ன நடந்தது என்று அவிழ்க்கப்படாத முடிச்சாக உள்ளது. 

 


திங்கட்கிழமை விடிந்த பிறகு கல்லூரிக்கு புறப்பட்டு கொண்டிருந்த ராஜேஸ்வரியின் தோழிகள் அவரை அறையில் வந்து தேடி பார்த்துவிட்டு சென்றுள்ளனா். காலை 8.45 மணிக்கு விடுதி கட்டிடத்தின் தரை தளத்தில் காயங்களுடன் கிடப்பதை பார்த்த விடுதி மாணவிகள் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா். 


அவா்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் முன்பு அவரை எஸ்.ஆா்.எம். மருத்துவ கல்லூரிக்கு தூக்கி சென்றுள்ளனா். ஆனால் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் கிடைத்த நிலையில், கல்லூரி நிர்வாகம் மாணவி 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கும், மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனா். 


இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சமயபுரம் காவல்துறையினா் பெண்ணின் உடலை நிர்வாகத்திடம் இருந்து கைப்பற்றி திருச்சி ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி ராஜெஸ்வரி இறந்து கிடந்த பகுதியை கல்லூரி நிர்வாகம் கழுவி விட்டிருந்த நிலையில், எந்தவித தடயமும் கிடைக்காமல் காவல்துறை ஒருபக்கம் திணறி வருகிறது. 

 

மற்றொரு பக்கம் கல்லூரி நிர்வாகம் தன்னுடைய பெண்ணை கொன்றுவிட்டதாக புகார் தெரிவித்துள்ள நிலையில், ராஜேஸ்வரியின் பெற்றோர் மற்றும் உறவினா்கள், பெண்ணின் உடற்கூறு பரிசோதனையை தலைமை மருத்துவமனையில் வைத்து செய்ய வேண்டும் என்று  வேண்டுகோள் விடுத்ததையடுத்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் இருந்து திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 


இதற்கிடையில் கல்லூரி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று கல்லூரி நிர்வாகம் முன்பு மறியல் போராட்டத்தில் உறவினா்கள் ஈடுபட்டனா். கல்லூரி நிர்வாகம் ராஜேஸ்வரி 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவலை கொடுத்திருந்த நிலையில் பெண்ணின் உடம்பில் எந்தவித எலும்பு முறிவுகளும் ஏற்படாமல் கழுத்து நெறிக்கப்பட்டு, தாடை பகுதியிலும், தொடைப்பகுதியிலும் சில இரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால், பெரிய சந்தேகத்தை காவல்துறைக்கு ஏற்படுத்தி உள்ளது. 

 

எனவே மாணவியின் மரணம்  தற்கொலை அல்ல, கொலை என்ற கோணத்தில் காவல்துறையும் தன்னுடைய விசாரணையை துவங்கியுள்ளது. இரவு 1 மணிக்கு பிறகு என்ன நடந்தது என்பதற்கான எந்தவித சிறிய தடயமும் கிடைக்காததால் விசாரணையில் சற்று தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதற்கு காரணம் பெண்கள் விடுதி என்பதால் கேமராக்கள் பொருத்தப்படாமல் இருப்பது ஒரு முக்கிய காரணம். 

 

மாணவி தரப்பினர் கூறும்போது, மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்று நிர்வாகத்தரப்பில் சொல்வது முரண்பாடான கருத்தாக உள்ளது. எனவே விரைவில் மா்ம முடிச்சுகள் விலகும், காவல்துறை இந்த வழக்கை புதிய கோணத்தில் கையாண்டு குற்றவாளிகளை பிடிக்கும் என்று நம்புகிறோம் என்றனர்.

 

இதுதொடா்பாக காவல்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, முதல் சந்தேகம் கல்லூரி நிர்வாகம் எந்தவித தகவலும் காவல்துறைக்கு தெரிவிக்காமல் அவா்களே மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனா். 

 

இரண்டாவது கல்லூரி நிர்வாகம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அவா் விழும்போது சுவரை ஒட்டியே விழுந்ததாகவும் கொடுத்த தகவலிலும் ஒரு முரண்பாடு உள்ளது. பொதுவாக மேலிருந்து கீழே குதிக்கும்போது கட்டிடத்தில் இருந்து சில அடி தூரம் தள்ளி விழுவார்கள் ஆனால் நிர்வாகம் சுவரை ஒட்டியே விழுந்ததாக கூறுகின்றனா்.


அதேபோல் மேலிருந்து கீழே வந்து விழும் வேகத்தில் உடம்பில் ஏதாவது ஒரு பகுதியாவது முன் மண்டை பகுதி அல்லது பின் மண்டை பகுதி அடிபடும், ஆனால் இந்த பெண்ணில் தலையில் சிறிய காயம் கூட இல்லை. எனவே இது ஒரு சந்தேகம் ஏற்படுகிறது. எனவே எதுவாக இருந்தாலும் முழுமையான உடற்கூறு ஆய்வு தகவல் அறிக்கை வந்த பிறகு உரிய விசாரணை எடுப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

 

மேலும் பெண்ணின் உறவினா்கள் கல்லூரியினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜெயராம், டிஐஜி ஆனி விஜயா இருவரும் பெற்றோரிடம் பேசி சமாதானம் செய்து வைத்தனர். மருத்துவ அறிக்கை வந்த உடன் கல்லூரி நிர்வாகத்தின் மீது குற்றம் இருப்பின் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்றும், எனவே இந்த மாணவியின் மரணம் குறித்து விசாரிக்க டிஎஸ்பி தலைமையிலான ஒரு தனிப்படை அமைத்திருக்கிறோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று மாணவியின் பெற்றோரிடம் உறுதியளித்ததாக கூறினார்கள்.

 

 


 

Next Story

சுவர் ஏறி குதித்து திருட முயற்சி... புரட்டி எடுத்த பொதுமக்கள்... சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு...

Published on 26/12/2020 | Edited on 26/12/2020
ddd

 

திருச்சி அல்லூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் வசித்து வரும் நிலையில் அவருடைய வீட்டில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் 2 வாலிபர்கள் திருடுவதற்காக முயன்று வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளனர். 

 

அதை அறிந்த வெங்கடேசன் சத்தம் போட்டதில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இருவரையும் பிடிக்க முயற்சி செய்தனர். அதில் அரவிந்த் என்பவர் தப்பித்து செல்ல தீபு என்ற வாலிபர் சிக்கினார். இவர்களைக் குறித்து பொதுமக்கள் விசாரித்ததில் அவர்கள் இருவரும் திருவனந்தபுரம் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதன் பின்னர் தீபு கையில் வைத்திருந்த கத்தியால் பொதுமக்களை மிரட்ட அவர்கள் தீபு வை சரமாறியாக தாக்கியுள்ளனர்.  தாக்கியதில் படுகாயம் அடைந்து தீபுவை பொதுமக்களே திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

 

மேலும் தப்பி சென்ற அரவிந்தை பொதுமக்கள் விரட்டி பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தீபு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.