Skip to main content

கோடி கோடியா கொள்ளை அடிச்சிட்டு மாட்டிக்குவோம்னு வாய மூடிக்கிட்டு இருக்காங்க... எடப்பாடி முதுகுலையே குத்திட்டாங்க''- பொன்னையனின் பகீர் செல்போன் ஆடியோ

Published on 13/07/2022 | Edited on 13/07/2022

 

 They are keeping their mouths shut saying that they will catch crores of robbers... But they have stabbed their backs'' - Ponnayan's Bagheer cell phone audio

 

வழக்குகள், வாதங்கள், விசாரணைகள் என தொடங்கி நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதிமுக பொதுக்கூட்டம் நடந்து முடிந்த நிலையில், அதிமுக தலைமையக மோதல், அலுவலகம் சீல் வைப்பு என இன்னும் பரபரப்பு சூழ்நிலையே அதிமுகவில் நிலவி வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் கட்சியின் மூத்த உறுப்பினரான பொன்னையன் அதிமுகவைச் சேர்ந்த நாஞ்சில் கே.எஸ்.கோலப்பன் என்ற நிர்வாகி உடன் பேசுவதாக ஆடியோ ஒன்று வெளியாகி அதிமுக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் ஒரு புயலை கிளப்பியுள்ளது.  அந்த ஆடியோவில்...

 

நிர்வாகி: அண்ணே, என்னண்ணே இப்படி கட்சி நிலவரம் போகுது. என்ன பண்றது தலைவர் காலத்திலிருந்து கஷ்டப்பட்டு இருக்கோம் தொண்டர்களை யாருமே பாக்கலையே?

 

பொன்னையன்:  அதுதான்... இந்த கோடீஸ்வரன் கையில கட்சியா... அந்த கோடீஸ்வரன் கையில கட்சியானு போகுது.

 

ADMK

 

நிர்வாகி: இன்னைக்கு தொண்டர்களோட நிலைமைய யோசிச்சு பாருங்க அண்ணே. ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு. இந்த கட்சி தேறுமா இல்ல இப்படியே போயிடுமா என்ற சூழ்நிலைக்கு போகுது

 

பொன்னையன்: ஒண்ணுமே ஆகாது, ஒரு பாதிப்பும் வராது. காரணம் தொண்டர்கள் எல்லாம் இரட்டை இலை பின்னாடி தான் இருக்காங்க. தலைவர்கள்தான் பணத்து பக்கம் இருக்கிறாங்க. அவரவர்கள் பணத்தை பாதுகாக்க போட்டி போட்டுக்கிட்டு ஆடுகிறார்கள்.

 

 நிர்வாகி: அண்ணே கண்டிப்பா 100% உண்மையான விஷயத்தை சொன்னீங்கன்ணே.

 

பொன்னையன்: தங்கமணியும் இப்ப வந்து முக.ஸ்டாலின் ட்ரப்பிள் பண்ண ஆரம்பிச்சுட்டாரு. இப்ப தங்கமணி தன்னை காப்பாத்திக்குறதுக்கு ஸ்டாலின் கிட்ட ஓடுறாரு. அதே மாதிரி கே.பி.முனுசாமி ஸ்டாலின திட்டுவதை நிறுத்திட்டாரு.

 

நிர்வாகி: ஆமா... ஆமா...

 

பொன்னையன்: குவாரி எக்ஸ்போர்ட்ல ஒரு மாசத்துக்கு ரெண்டு கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். கொள்ளை அடிச்சு கோடீஸ்வரனா வாழ்றதுக்கு இப்படி ஆடுறாங்க.

 

நிர்வாகி: உண்மையாலுமே கண்ணீர் வருது. கட்சியைப் பார்க்கும் போது ரொம்ப வேதனையா இருக்கு. ஒரு பதவி கூட நாம வாங்குனது கிடையாது. உங்களுக்கே தெரியும். ஆனா கே.பி.முனுசாமி நல்லா வாழ்ந்துட்டாரு அண்ணா. உங்களுக்கே தெரியும் இல்ல அண்ணா கே.பி.முனுசாமி ஒதுக்கி வைத்திருந்தார்கள் ஜெயலலிதா. ஆனா இந்த கே.பி.முனுசாமி இன்னைக்கு எத்தனை கோடிக்கு சம்பாதித்து வைத்திருக்கிறார் பாருங்க.

 

பொன்னையன்: அவன் நக்சலைட்டா இருந்தான். நக்சலைட்டோட தொடர்பு இருந்ததுன்னு சொன்னதுனால கே.பி.முனுசாமிய ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார்கள். ஸ்டாலின் தயவுக்காக திமுகவை திட்டுவது கிடையாது. பிஜேபி அண்ணாமலைதான் திட்றான்.

 

நிர்வாகி: அவர்தான் இன்னைக்கு இரண்டாவது கட்டத்தில் இருக்கிற மாதிரி இருக்கு.

 

பொன்னையன்: அதான் நடக்குது. நம்ம ஆளுங்கபூரா கோடி கோடியா கொள்ளை அடிச்ச உடனே மாட்டிக்குவோம்னு வாய மூடிக்கிட்டு இருக்காங்க. மாவட்டச் செயலாளர்களுக்கு எல்லாம் பணம் கொடுக்க வேண்டியது இல்லைங்க. ஆனால் ஒவ்வொரு மாவட்ட செயலாளர் குறைந்தது 100 கோடி 200 கோடி இல்லாமல் மாவட்ட செயலாளராக இல்லை. மாவட்ட செயலாளர் அவர்களுக்கு வரும் 16% அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். தலைமை கழகத்திற்கு எதுவுமே கொடுக்க வேண்டியதில்லை.

 

நிர்வாகி: அதனால் தான் எல்லாருமே எடப்பாடி எடப்பாடி என அவர் பின்னாடி போக தொடங்கி விட்டார்கள் என நினைக்கிறேன்.

 

பொன்னையன்: சம்பாதிக்கிறவன் பின்னாடி போனா தானே சம்பாதித்தை காப்பாற்றிக் கொள்ள முடியும். தளவாய் சுந்தரம் தான் இந்தியாவிலேயே பெரிய புரோக்கர்.

 

பொன்னையன்: தீர்மானத்தை படிப்பதற்காக மைக்கை கிட்டபோறேன். நான் படிக்கறதுக்கு முன்ன மைக்கிட்ட போய் நாய் கத்துற மாதிரி சி.வி.சண்முகம் ரத்து... ரத்து... ரத்துன்னு கத்துகிறான். ஏற்போர் ஆம், எங்க மறுப்போர் இல்லை என்று சொல்லணும். ஆனால் அதை விட்டுட்டு சி.வி.சண்முகமும், கே.பி.முனுசாமியும் ரத்து ரத்துன்னு சொல்லிட்டாங்க. எல்லா மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்களை நான்கு வருஷமா கொள்ளை அடிக்கவிட்டார் பாத்திங்களா எடப்பாடி, அதான் அவர் முதுகுலையே இப்ப குத்திட்டாங்க. அதனாலதான் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுறாரு. சி.வி.சண்முகம் என் பையனை விட நாலு வயசு இளையவன். அவங்க அப்பாவும் நானும் கிளாஸ்மெட் லா படிக்கும்போது. பகல்லையே குடிச்சிட்டு இருப்பான். அவன் கையில 19 எம்.எல்.ஏக்கள் இருக்காங்க. ஜாதி அடிப்படையில் எம்.எல்.ஏக்கள் வச்சிருக்கறதுனால அவங்க பின்னால தொங்குறாங்க. எடப்பாடி கையில் 9 பேர் தான். மீதி எல்லாம் காசு கொடுத்து, அத கொடுத்து, கான்ட்ராக்ட் கொடுத்து வேலுமணி, தங்கமணி கையில் வைத்திருக்கிறார்கள். நாளைக்கு கே.பி.முனுசாமி ஒற்றை தலைமைக்கு வரலாம் அதுக்கும் முயற்சிகள் நடந்தது.... என அந்த ஆடியோ நீளுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.