Skip to main content

மகாத்மா காந்தி சிலை மீதும் தாக்குதல்! - முடிவடையாத சிலை அரசியல்

Published on 08/03/2018 | Edited on 08/03/2018

நாடு முழுவதும் பல இடங்களில் அரசியல் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மகாத்மா காந்தியின் சிலையும் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Gandhi

 

திரிபுராவில் ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, அம்மாநிலத்தின் பெலோனியா பகுதியில் இருந்த சோவியத் புரட்சியாளர் லெனின் சிலையை பா.ஜ.க.வினர் தகர்த்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரியார் சிலையை பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் தாக்கி, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

 

இதைத் தொடர்ந்து கொல்கத்தாவின் கலிகாட் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பா.ஜ.க. மூத்ததலைவர் எஸ்.பி.முகர்ஜி சிலைமீது கறுப்பு மை பூசப்பட்டு, சேதப்படுத்தப்பட்டது. உ.பி. மாநிலம் மீருட் பகுதியில் இருந்த அம்பேத்கர் சிலையும் நொறுக்கப்பட்டதாக வீடியோ வெளியிடப்பட்டது.

 

இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளபரம்பா பகுதியில் வைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். மகாத்மா காந்தியின் சிலையில், மூக்குக் கண்ணாடியை நொறுக்கி தொங்கவிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. 

 

 

 

 

இதுமட்டுமின்றி, சென்னை திருவொற்றியூரில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் அம்பேத்கர் சிலையின் மீது சிவப்பு பெயிண்ட் ஊற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 

நாடு முழுவதிலும் அரசியல் தலைவர்கள் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வரும் சம்பவங்கள் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் அரும்பாடு பட்டு சமூக மேன்மைக்காக உழைத்த நாட்களை எண்ணி, அவர்களது ஆதரவாளர்கள் வீதிகளில் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி காங்கிரஸ் சார்பில் மரியாதை (படங்கள்)

Published on 30/01/2024 | Edited on 30/01/2024

 

 

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி இன்று (30-01-24) சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செய்தார். இதனையடுத்து அங்கு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. 

Next Story

திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Acceptance of religious harmony pledge on behalf of DMK

நமது நாட்டின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினம் இன்று (30.01.2024) நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் மோடி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் பல்வேறு இடங்களில் மத நல்லிணக்க உறுதிமொழிகளும் ஏற்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர். அதே போன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.

முன்னதாக கடந்த 28 ஆம் தேதி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிவிப்பில், ஜனவரி 30 ஆம் தேதி மத நல்லிணக்க உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். உறுதிமொழி ஏற்பில் அனைத்து மதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற தமிழ்நாட்டின் மாண்பை இந்திய ஒன்றியத்திற்கு வெளிப்படுத்துவோம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.