Skip to main content

நியாயம், தர்மப்படி கேரள அரசு நடந்துக்கொள்ள வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

Published on 04/03/2018 | Edited on 04/03/2018

 

spvelumani

 

கோவை மாவட்டம் பாதிக்கும் வகையில் ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை கேரள அரசு தொடர்ந்து செய்து வருவதாக குற்றச்சாட்டிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,  நியாயம், தர்மப்படி கேரள அரசு நடந்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

கோவையில் செய்தியாளர்களிடம் பேசியவர், தடுப்பணையை தடுக்க முதல்வர் வேகமாக கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்றும், நீதிமன்றம் சென்றாவது தடுப்பணை பணி தடுத்து நிறுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார். 

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசிற்கு கடுமையாக அழுத்தம் கொடுக்கப்படும் என்று கூறியவர், எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற ஸ்டாலின் கருத்திற்கு பதிலளித்தவர் 6 வாரம் காலம் இருக்கிறது பொருத்திருந்து பார்ப்போம் என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசை நம்புவதாகவும் தெரிவித்தார். கடந்த ஆண்டு மழை குறைவானதால் நிலத்தடி நீர் வெகுவாக பாதித்து சுமார் 1300 அடிக்கு போர்வெல் சென்றுவிட்டதாக குறிப்பிட்டவர், வரும் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க மாற்று திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், கோவை மாவட்ட நீர் தேவைக்காக பில்லூர் 3 ஆம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் டெண்டர் விடப்படும் என்றும் அறிவித்தார். 

 

தொடர்ந்து பேசியவர், டெல்லி சென்று சில மாற்றங்கள் செய்ய கோரிக்கை விடுத்ததை அடுத்து, 100 வார்டுகளில் 18 வார்டுகளில் என்ற அடிப்படையில் செயல்படுத்தப்படும் திட்டத்தில் தளர்வு செய்யப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டம்  வேகப்படுத்தபட்டுள்ளதாகவும், அம்ரூத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 2 ஆம் இடத்தில் உள்ளதாக குறிப்பிட்டவர், இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் சைக்கிள்கள் பகிர்ந்தளிக்கும் திட்டம் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இயற்கை முறையிலான மக்கும் பைகள் அறிமுக செய்யப்படுவது சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவது மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் அவசியமானதாக உள்ளதாக குறிப்பிட்டார்.

 

முன்னதாக, ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற தனியார் பங்களிப்புடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் செயல்படுப்படவுள்ள இந்த சைக்கிள்கள் பகிர்ந்தல் திட்டம் அறிமுக விழாவை துவக்கி வைக்கும் பொருட்டு, app system சைக்கிளை ஓட்டினார். அவருடன், மாநகராட்சி ஆணையரும், சட்டமன்ற உறுப்பினர்களும் உடன் சைக்கிளை ஓட்டினர். மேலும், பொதுமக்களுக்கு இயற்கை முறையிலான மக்கும் பைகளை  வழங்கி பையோ பைகள் திட்டத்தை துவக்கி வைத்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதையெல்லாம் வைத்து பணம் சம்பாரிக்கணுமா?' - மறுத்த அமைச்சர் மா.சு  

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
'It doesn't seem like a good idea to monetize it' - Minister Ma.su interview

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் கேட்பாரற்று கிடந்த சடலங்களை 2008 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசு விற்பனை செய்துள்ளது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 11 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாயும் என கேரள அரசு வசூலித்துள்ளது. இதில் மொத்தமாக  3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

'It doesn't seem like a good idea to monetize it' - Minister Ma.su interview

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேரளா அரசு சடலங்களை விற்று வருவாய் ஈட்டியது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், 'அடையாளம் தெரியாத சடலங்கள் குறிப்பிட்ட காலம் வரை மருத்துவக் கல்லூரி உடற்கூறு ஆய்வுக்கு பயன்படுத்துவது என்பது எல்லா இடத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒன்று. அதிலும் கூட பணம் செய்ய வேண்டும் என்பதுதான் ஒரு கேள்விக்குறி. தமிழ்நாடு அரசு கொஞ்சம் யோசித்து தான் முடிவு எடுக்கும். அது தேவையா என்பது தான். அது நல்லது என்று சொல்ல முடியாது. அதை போய் உடற்கூறாய்வுக்கு விற்பது என்பதை ஏற்கவில்லை. இலவசமாக தரலாம் ஆனால் அதை பணமாக்க வேண்டும் என்பது நல்ல கருத்தாக தெரியவில்லை'' என்றார்.

Next Story

‘சாதிய கொடுமைகளுக்கு வர்ணாசிரமத்தை குறை கூற முடியுமா?’ - நீதிபதி அனிதா சுமந்த்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
chennai hc Justice Anita Sumanth questions Can we blame Varnashrama for caste atrocities

சென்னையில், கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் அமைச்சர்கள் சேகர்பாபு உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  இதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.  

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார். இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். மேலும் சனாதனம் குறித்து திமுக எம்.பி ஆ. ராசாவும் பேசி வருகிறார். இவர்கள் எதன் அடிப்படியில் பதவியில் நீடிக்கிறார்கள் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்க முடியாது; இதற்காக அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று கூறி  நீதிபதி அனிதா சுமந்த் வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், “நமது சமூகத்தில் உள்ள சாதிய அமைப்பு, கடந்த நூற்றாண்டில்தான் உருவாக்கப்பட்டது; அப்படியிருக்க, சாதிய கொடுமைகளுக்கு வர்ணாசிரமம் தான் காரணம் என பழி கூற முடியுமா? வர்ணாசிரமம் பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை; செய்யும் தொழிலின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. சனாதனம் என்பது அழிவற்ற நிலையான, ஒழுக்க நெறிகளை குறிக்கிறது. ஆனால் சனாதனம் பற்றி நீங்கள் பேசிய கருத்து முற்றிலும் தவறு” என்று கருத்து தெரிவித்தார்.