Published on 22/04/2019 | Edited on 22/04/2019

வரும் மே மாதம் 19ஆம் தேதி அன்று தமிழகத்தில் நடைபெறவுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சூலூர் தொகுதியில் கே.சுகுமார், அரவக்குறிச்சி தொகுதியில் பி.எச்.சாகுல் அமீது, திருப்பரங்குன்றம் தொகுதியில் மகேந்திரன், ஒட்டப்பிடாரம் தொகுதியில் ஆர்.சுந்தரராஜ் ஆகியோர் போட்டியிடுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.