Skip to main content

எடப்பாடியை மிரட்டும் எச்.ராஜா!

Published on 19/12/2018 | Edited on 19/12/2018
h.raja


 

 

பாஜகவின் வாசனை வந்தாலே அவர்களுடன் மோதமாட்டார் எடப்பாடி. ஆனால், பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜாவுடன் இப்பொழுது மோதிக்கொண்டிருக்கிறார். இந்த எச்.ராஜா VS எடப்பாடி மோதல் உச்சக்கட்டத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.
 

 

தமிழகத்தில் உள்ள கோவில்களையெல்லாம் இந்து அறநிலையத்துறையின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும், அவற்றை அந்தெந்த ஊர்களில் உள்ள இந்து பிரமுகர்களின் பராமரிப்பில் விட வேண்டும் என்பது பாஜகவின் தேசிய செயலாளரான எச்.ராஜாவின் கருத்து. 

 

அதற்காக இந்து சமய அறநிலையத்துறைக்கும், சிலை கடத்தல் விவகாரத்தை விசாரிக்கும் அதிகாரியான பொன்.மாணிக்கவேலுக்கும் இடையே நடக்கும் மோதலை எச்.ராஜா பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார்.
 

 

தொடர்ச்சியாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை சிலை கடத்தல் பிரிவு போலீசார், கைது செய்வதை நிறுத்த நினைத்த எடப்பாடி பிறப்பித்த உத்தரவுகளை பொன்.மாணிக்கவேல் மீறினார். அதனால் பொன்.மாணிக்கவேலுவுக்கும் எடப்பாடிக்கும் மோதல் உருவானது. அதை கோர்ட் உதவியுடன் முறியடித்தார் பொன்.மாணிக்கவேல். 

 

இந்த விவகாரத்தில் பொன்.மாணிக்கவேலுக்கு ஆதரவாக எச்.ராஜா முழக்க மிட்டார். இதனால் கடுப்படைந்த எடப்பாடி, சிலை கடத்தல் பிரிவில் வேலை பார்க்கும் பொன்.மாணிக்கவேலுக்கு மிக நெருக்கமான இளங்கோ என்கிற டி.எஸ்.பி. உள்பட 20க்கும் மேற்பட்ட அதிகாரிகளை பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக காவல்துறை டி.ஜி.பி.யிடம் புகார் அளிக்க வைத்துள்ளார்.

 

இதுவரை 24 வழக்குகள் பொன்.மாணிக்கவேல் மேற்பார்வையில் சிலை கடத்தல் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு வழக்கில் கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எல்லாம் விளம்பரத்திற்காகவும் செய்திகளில் அடிபடுவதற்காகவும் பொன்.மாணிக்கவேல் செய்யும் வேலை என பரபரப்பான புகாரை கொடுத்துள்ளனர். 

 

அத்துடன் பொன்.மாணிக்கவேலுவுக்கு கீழ் வேலை செய்யும் 60 பேரை அதிரடியாக இடமாற்றம் செய்தும் உத்தரவிட்டுள்ளது காவல்துறை. இதை நான் விடமாட்டேன். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என எச்.ராஜா டிஜிபியிடம் ஆவேசமாக பொங்கியுள்ளார்.

 

 

அவர் எங்க வேணுமானாலும் போகட்டும், எச்.ராஜாவின் பேச்சை கண்டுகொள்ளாதீர்கள் என எடப்பாடி உத்தரவிட்டுள்ளார் என்கிறது கோட்டை வட்டாரங்கள். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.