பெண் குழந்தை என்பதால் வாஷிங் மெஷினில் போட்டுக் கொன்ற தாய்!
ஆண் குழந்தை இல்லாத காரணத்தால் விரக்தியடைந்த பெண், தனக்குப் பிறந்த பெண் குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டுக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
![](/UltimateEditorInclude/UserFiles/Newsphoto-2017/DECEMBER/5/Artiii.jpg)
டெல்லி அருகே காஜியாபாத் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், நேற்று குழந்தையைக் காணவில்லை என அலறிய ஆர்த்தி, காவல்நிலையத்தில் குழந்தை கடத்தல் வழக்கில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து ஆர்த்தியின் வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினர் குழந்தையை வாஷிங் மெஷினில் இருந்து பிணமாக மீட்டுள்ளனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் நடத்திய விசாரணையில் காவல்துறையினரிடம், ஆண் குழந்தை இல்லாததால் பல நாட்களாக விரக்தியில் இருந்தேன். நேற்று குழந்தை முகத்தை தலையணையால் அழுத்தி மூச்சடக்கி கொன்றுவிட்டு, பிணத்தை வாஷிங் மெஷினில் போட்டுவிட்டு, குழந்தை கடத்தப்பட்டதாக நாடகமாடினேன் என ஆர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆர்த்தியின் குடும்பத்தினர் ஆண் குழந்தை கேட்டு நிர்பந்திக்கவில்லை என தெரிவித்துள்ளதால், விசாரணையை நீட்டித்துள்ளனர் காவல்துறையினர்.