Skip to main content

ஆந்திர முதல்வரின் அறிவிப்பு; தமிழகத்தில் எதிர்ப்பு

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Objection to Andhra barrage will be constructed at Palaru

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகள் மற்றும் புகார் உட்பட பல்வேறு கோரிக்கைகளைத் தெரிவித்து அதற்கான விளக்கங்களையும் கேட்டறிந்தனர்.

முன்னதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் எனத் தெரிவித்திருக்கும் சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக விவசாயிகள் எழுந்து நின்றபடி தங்களது கண்டனங்களைத் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் தடுப்பணைக் கட்டும் செயலை ஆந்திர அரசு கைவிட வேண்டும் எனவும் இதற்குத் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து விவசாய குறைதீர்வு கூட்டத்தை முடித்து விட்டு வெளியே வந்த விவசாயிகள், ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையாக ஆந்திர மாநில முதல்வர் பாலாற்றில் தடுப்பணைக் கட்டும் ஏற்பாடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்தும் இதனை மாவட்ட ஆட்சியர் தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு சேர்க்க வேண்டுமெனவும் வேண்டுகோள் வைத்துள்ளனர். மேலும் தடுப்பணைக் கட்டப்படும் எனில் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களை ஒன்றிணைத்து  போராட்டம் நடத்தவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்

சார்ந்த செய்திகள்

 

Next Story

120 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி.

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Sp recovered 120 stolen cell phones and handed them over to their owners.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தவறவிட்ட செல்போன்கள் குறித்து காவல் நிலையங்களில் வழக்குகள் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொண்டு ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த 120 செல்போன்கள் காவல்துறை அதிகாரிகள் மூலமாக மீட்கப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட செல்போன்கள் அனைத்தும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் நடைபெற்று. அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது..

மேலும் நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் செல்போன் தவறவிட்டாலோ, அல்லது திருடப்பட்டாலோ அது குறித்து உடனடியாக பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் சென்று புகார் அளிக்க முன் வர வேண்டும். அதேபோல் கடந்த மாதம் மட்டும் வாலாஜாபேட்டையில் செல்போன் தவறவிட்ட வழக்கில் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான 30 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என இந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

Next Story

செங்கல் சூலையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தவர்கள் மீட்பு

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Redemption of those who used to work as slaves in brick kilns

ராணிப்பேட்டை அடுத்த புளியங்கன்ணு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் அந்தப் பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்களை வேலைக்கு வைத்து கொத்தடிமைகளாக நடத்தி வருவதாக வந்தத் தகவலை அடுத்து ராணிப்பேட்டை கோட்டாட்சியர் மனோன்மணி தலைமையிலான குழுவினர் செங்கல் சூலைக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர் 

ஆய்வில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த காமாட்சி(40) கார்த்தி(41) சத்யா(19) சீனு(17) சௌந்தர்யா(15) ஆகிய ஐந்து நபர்கள் கொத்தடிமைகளாக பணியாற்றுவது தெரியவந்து. இதனைத் தொடர்ந்து அவர்களை உடனடியாக  கோட்டாட்சியர்  மீட்டு விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி அடுத்த சேருக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்களுக்கு முன்பணமாக ரூ.91 ஆயிரம் கொடுத்து செங்கல் சூளைக்கு வேலைக்கு அழைத்து வந்ததும் தெரிய வந்தது. 

வேலைக்கு வந்தவர்களிடம் அதிகப்படியான பணிச்சுமையைப் புகுத்தியதாகவும் அதற்கான உரிய ஊதியம் வழங்காமல் கொத்தடிமைகளாக நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து மீட்கப்பட்ட அனைவரும் அவர்களது சொந்தக் கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். செங்கல் சூளை உரிமையாளரான சுரேஷ்குமார் மீது சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.