Skip to main content

பாமக பிரமுகருக்கு சரமாரி வெட்டு; கடலூரில் பரபரப்பு 

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
 barrage of blows to a PMK executive Cuddalore

கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். பாமக பிரமுகரான இவர், வன்னியர் சங்க முன்னாள் கடலூர் நகர தலைவராகவும் இருந்திருக்கிறார். இந்த நிலையில் இன்று தனது சங்கர் தனது வீட்டின் அருகே நின்றுக்கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்து சென்றுள்ளது. இதனால் ரத்த வெள்ளத்தில் சங்கர் சரிந்துள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த சங்கரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் சங்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சங்கர் ஆதரவாளர்கள் மருத்துவமனை முன் குவிந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்