Skip to main content

மோடியின் பெயரில் போதை மாத்திரை; பாஜக நிர்வாகிக்குச் சம்மன்

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Narcotic pill in Modi's name; Summons to BJP executive

தமிழக பாஜகவின் மாவட்டத் தலைவருக்கு கிடுக்குப்பிடி  போட்டிருக்கிறது தமிழக அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை.

தென் சென்னை பாஜகவின் மாவட்டத் தலைவராக இருக்கிறார் காளிதாஸ். இவர் மேற்கு சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் மருந்துக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். மத்திய மோடி அரசின் மலிவு விலை மருந்து திட்டத்தின் கீழ் மக்கள் மருந்தகம் (பிரதான் மந்திரி பாரதிய ஜனஉஷாதி கேந்திரா) எனும் மருந்துக் கடையைத் தனது மனைவியுடன் இணைந்து  நடத்தி வருகிறார் காளிதாஸ்.

பிரதமர் மோடியின் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டு வரும் இந்த மருந்துக் கடை குறித்து தமிழக அரசின் மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு பல புகார்கள் போயிருக்கிறது. இதனையடுத்து, இந்தப் புகாரின் மீது சென்னை மண்டலம்-lll இல் இயங்கும் மருந்து கட்டுப்பாட்டுத்துறையின் உதவி இயக்குநர் அலுவலகம் நடத்திய  விசாரணையில், அந்த மருந்துக் கடையில் காலாவதியான மருந்துகள் இருப்பதும், போதை மாத்திரைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

Narcotic pill in Modi's name; Summons to BJP executive

இதன் தொடர்ச்சியாக, காளிதாஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது சென்னை சைதாப்பேட்டை மேஜிஸ்திரேட் கோர்ட்டில்  வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஆஜராக காளிதாசுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மெல்ல மெல்லக் கசியத் தொடங்கிய நிலையில், கமலாலயத்திற்கும் செய்தி பரவ, பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

மீண்டும் 'ஜிகா வைரஸ்' - மாநில அரசுகளுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Again 'Zika virus'-warning given to state governments

'ஜிகா' வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமாகியுள்ளதால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என மருத்துவ சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏடிஎஸ் கொசுக்கள் மூலம் உருவாகும் ஜிகா வைரஸ் தொற்று பரவல் தற்போது மகாராஷ்டிராவில் அதிகமாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் இதுவரை எட்டு பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. காய்ச்சல், தலைவலி, தோல் வெடிப்பு, மூட்டு வலி, கண் இமைகளில் வீக்கம் ஆகியவை ஏழு நாட்களுக்கு மேல் நீடித்தால் அவை ஜிகா வைரஸ் தாக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

உடனடியாக இந்த அறிகுறிகள் இருப்போர் மருத்துவரை அணுக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகலில் கடிக்கும் ஏடிஎஸ் கொசுக்களால் இந்த வைரஸ் பரவுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் கருவில் உள்ள குழந்தைகளை தாக்கும் அபாயம் கொண்டது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அனைத்து மகப்பேறு மருத்துவமனைகளிலும் இது தொடர்பாக கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதேநேரம் ஜிகா வைரஸ் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தி ஆகாமல் பார்த்துக்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

Next Story

அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை; சேலத்தில் பரபரப்பு

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
 AIADMK leader hacked to death; Excitement in Salem

சேலத்தில் அதிமுக பிரமுகர் இரவில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக செயலாளர் சண்முகம். இவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் திடீரென அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதிர்ச்சிக்குள்ளான அக்கம் பக்கத்தினர் மற்றும் அதிமுகவினர் நிகழ்விடத்திற்கு வந்தனர்.

காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சண்முகத்தின் குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கைது செய்யும் வரை சடலத்தை எடுக்கக் கூடாது என அங்கிருந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடலை மீட்ட போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சண்முகம் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத் தலைவராக பதவி வகித்துள்ளார். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களிலும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். கொலைக்கான காரணம் முன்விரோதமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக மோப்ப நாயுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே கடலூரில் அதிமுக நிர்வாகி ஒருவர் திருட்டு ஆடுகள் வாங்கியதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது சேலத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் சாலையிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.