Skip to main content

மனதை வருடும் ‘ஏழேழு மலை’ பாடல்; யுவன் இசையில் வெளியீடு!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
yezhu malai yezhu kadal 2nd song released

கற்றது தமிழ், தரமணி, பேரன்பு போன்ற தரமான படங்களை இயக்கிய இயக்குநர் ராம், தற்போது ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். ‘வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன்’ சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

இந்த படம் சர்வதேச பல இடங்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை வாங்கியுள்ளது. இந்த படத்தை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.  இப்படத்தின் முதல் பாடல் காதலர் தினமான கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. ‘மறுபடி நீ...’ என்ற தலைப்பில் வெளியான இப்பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி வரிகள் எழுதியிருந்தார். இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான, ‘ஏழேழு மலை’ எனத் தலைப்பில் தொடங்கும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ள இப்பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார். இந்த பாடலில் ‘நீரோடை முழுதும் உன் வேர்வைக் கயல்கள்...  முட்புதரின் இடையில் உன் பார்வை முயல்கல்.. என்ற வரியும், ‘தனைக் கண்ட விழியைத் தொலைத்த ஓர் கனவாய்..  திசைக்கெட்டுத் தறிக்கெட்டு ஓடுகிறேன்...’ என அற்புதமான வரிகள்  நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் கேட்க முடிகிறது. இதன் மூலம் மதன் கார்க்கி தேர்ந்த பாடாலசிரியர் என்று மீண்டும் நிரூபித்துக்கிறார். மனதை வருடும் இப்பாடல் மீண்டும் மீண்டும் கேட்க கேட்க தூண்டுகிறது. முதல்முறையாக யுவன் ஷங்கர் ராஜா இசையில் சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கும் இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் முறையாக யுவன் இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
santhosh narayanan sang in Yuvan's music for the first time

இயக்குநர் ராம் ‘பேரன்பு’ படத்தைத் தொடர்ந்து, ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். ‘வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன்’ சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

இதற்கிடையில்,  நெதர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்’ இப்படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் படத்தை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இப்படத்தின் முதல் பாடல் காதலர் தினமான கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. ‘மறுபடி நீ...’ என்ற தலைப்பில் வெளியான இப்பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி வரிகள் எழுதியிருந்தார். இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இந்த நிலையில், இப்படத்தின் 2வது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘ஏழேழு மலை’ எனத் தலைப்பில் வெளியாகவுள்ள இப்பாடலுக்கு மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ளார். நாளை (05-07-24) மாலை 6 மணியளவில் வெளியாகும் இப்பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார். முதல்முறையாக யுவன் ஷங்கர் ராஜா இசையில் சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கும் இப்பாடலை கேட்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் இருக்கின்றனர். 

Next Story

யுவன் - மதன் கார்க்கி கூட்டணியில் வெளியாகும் காதல் பாடல்

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Yezhu Kadal Yezhu Malai first single release update

இயக்குநர் ராம் 'பேரன்பு' படத்தைத் தொடர்ந்து, 'ஏழு கடல் ஏழு மலை' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். 'வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன்' சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. 

இதையடுத்து நெதர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் படத்தை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதை இயக்குநர் மாரி செல்வராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்திருந்தார்.

இப்படத்தின் முதல் பாடல் வருகின்ற காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. ‘மறுபடி நீ...’ என்ற தலைப்பில் வெளியாகவுள்ள இப்பாடலுக்கு மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ளதாகப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இப்பாடல் காதல் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக பிரியாணி, அஞ்சான், வை ராஜா வை, மாநாடு உள்ளிட்ட சில படங்களில் யுவன் இசையில் மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ளார்.