Skip to main content

ரிசர்வ் வங்கி ஆளுநர் நியமனம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய சுப்பிரமணியன் சுவாமி

Published on 12/12/2018 | Edited on 12/12/2018

 

sub

 

இரு நாட்களுக்கு முன் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக உர்ஜித் படேல் அறிவித்தார். ஏற்கனவே மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் பிரச்சனை நிலவி வந்த நிலையில் இந்த பதவி விலகல் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், முன்னாள் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸை புதிய ஆளுநராக  மத்திய அரசு நியமித்தது.

 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணிய சுவாமி, 'ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்தி காந்த தாஸை நியமித்தது தவறான முடிவு. ப.சிதம்பரத்துடன் நெருக்கமாக இருந்து பல்வேறு முறைகேடு செயல்களில் ஈடுபட்டவர் அவர்.  ப.சிதம்பரத்தை நீதிமன்ற வழக்குகளில் இருந்து காப்பாற்றியவர் சக்தி கந்த தாஸ். எதற்காக இதை அவருக்குச் செய்தார் என்பது எனக்குத் தெரியாது. மேலும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்' எனவும் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
The president of Paytm resigned

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விஜய் ஷர்மா அறிவித்துள்ளார்.

அந்நிய முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து இருந்து பணத்தைப் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 31 ஆம் தேதி தடை விதித்திருந்தது. அந்த உத்தரவில், வங்கிக் கணக்குகளில் புதிய தொகைகள் ஏதும் வரவு வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கடன் பரிவர்த்தனைகள், பேடிஎம் கணக்குகளில் பணச் செலுத்துகை, முன்கூட்டிய பணச் செலுத்துகை உள்ளிட்ட வங்கி சேவைகளுக்காக மார்ச் 15 வரை இந்த சேவைகளை தொடர ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

மேலும் பேடிஎம் நிறுவனத்தின் மீது சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பேடிஎம் நிறுவனம் இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விஜய் சேகர் ஷர்மா அறிவித்துள்ளார். 

Next Story

“பிரதமர் மோடி ராமரை பின்பற்றவில்லை” - சுப்ரமணியன் சுவாமி

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
 Prime Minister Modi does not follow god Ram says Subramanian Swamy

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ரூ. 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட மொத்தம் 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.  

தென் மாநிலமான கர்நாடகா, தெலுங்கானாவிலிருந்து வரவழைக்கப்பட்ட கிரானைட் கற்களும், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்ட இளஞ்சிவப்பு மணல் கோவிலின் அடித்தள அமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கோவிலின் கட்டுமானத்தில் துளி அளவு கூட இரும்பு பயன்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு காரணமாக, பொதுவாக இரும்பின் ஆயுட்காலம் 90 ஆண்டுகள் மட்டுமே; ஆனால் ராமர் கோவில் 2000 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கவும் எந்த வித இயற்கை பேரிடர்களிலும் பாதிப்பு ஏற்படாதவாறு உருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கட்டுமானத்தில் ஈடுபட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், இன்று பிரதமர் மோடி தலைமையில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறகிறது. முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சீரஞ்சிவி, கத்ரீனா கைஃப் என இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் எனப் பலரும் தங்களது குடும்பத்தினருடன் இந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்றுள்ளனர். அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு கோவில் கருவறையில் அவரது முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பிரதமர் மோடியுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகம் பகவத்தும் கலந்துகொண்டார். அதன்பிறகு சிறப்பு பூஜைகளுடன் தற்போது குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதனிடையே பாஜக மூத்த நிர்வாகி சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “பிரதமர் அந்தஸ்து பூஜ்ஜியமாக இருக்கும் போது மோடி பிரதிஷ்டை பூஜையில் ஈடுபடுகிறார். அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பகவான் ராமரை பின்பற்றவில்லை. ராம ராஜ்ஜியத்தின் படி அவர் பிரதமராகவும் நடந்து கொள்ளவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.