Skip to main content

சபரிமலை நடைதிறப்பு... அறிவிப்பை வெளியிட்ட கோவில் நிர்வாகம்!

Published on 11/07/2021 | Edited on 11/07/2021

 

Sabarimala Temple administration announcement!

 

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் மாத பூஜைக்காக ஜூலை 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடை திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆன்லைன் பதிவுமுறையில் அதிகபட்சம் 5,000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 48 மணி நேரத்திற்கு முன் பெறப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் சான்று சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான கரோனா தடுப்பூசி  சான்று பெற்றுள்ள பக்தர்கள் சபரிமலை கோவிலில் அனுமதிக்கப்படுவர் என சபரிமலை கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்ற முறையும் கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடனே பக்தர்கள் சபரிமலை கோவிலில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்